விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

0
82

திருவாரூர் மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி மருத்துவமனைக்கு 2 மணி நேரத்தில் விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வாழ்க்கை கிராமமத்தை சேர்ந்த வினோத். இவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்தத நிலையில் கடந்த 6 மாத காலமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவசர சிகிச்சைக்காக 3 மணி நேரத்தில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூரில் இருந்து புதுச்சேரிக்கு 2 மணி நேரத்தில் கொண்டு செல்லப்பட்டு வினோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருவாரூரில் இருந்து புதுச்சேரி செல்ல
சாதாரணமாக 4 மணி நேரம் ஆகும். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பாதுகாப்பாக சென்று நோயாளியின் உயிரை காப்பாற்றினார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அல்மூமின். இதனை சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

author avatar
Parthipan K