ரீல் வீடியோ பார்த்து அதை போல செய்த 11 வயது சிறுவன்! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!

0
183
#image_title

ரீல் வீடியோ பார்த்து அதை போல செய்த 11 வயது சிறுவன்! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!

சோசியல் மீடியாவில் வரும் ரீல் வீடியோவில் காண்பிப்பது போல செய்த சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் ஹம்ரிப்பூரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் உயிர் காக்கும் செயல்முறைகளை ரீல்ஸ் வீடியோக்களில் பார்த்து வந்துள்ளான். அதில் ஒரு வீடியோவில் ஒரு சிறுவன் கழுத்தில் கைக்குட்டையால் தூக்கு போட்டு அதிலிருந்து தப்பிப்பது இருந்துள்ளது.

அதை பார்த்த இந்த சிறுவன் தாய் கழுத்தில் போட பயன்படுத்தும் துணியை தன்னுடைய(சிறுவன்) கழுத்தில் போட்டு இறுக்கி விட்டு அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளான். ஆனால் அதிலிருந்து வெளியே வர முடியாததால் கழுத்து இறுக்கப்பட்ட அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சிறுவன் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்த தாய் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன். ஏற்கனவே உயிரிழந்துவிட்டான் என்று அறிவித்தனர்.

இது குறித்து பெற்றோர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சமூக வலைதளம் வாயிலாக தகவல் அறிந்த காவல் துறையினர் இறந்த சிறுவனின் உடலை உடற்கூறாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினர். பெற்றோர்களும் சிறுவனின் உடலை உடற்கூறாய்வுக்கு உட்படுத்த சம்மதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் “இறந்த சிறுவன் கடைசியாக ரீல் வீடியோ ஒன்றை பார்த்துள்ளான். அதில் ஒரு சிறுவன் கைக்குட்டையால் கழுத்தில் இறுக்கி காயம் இல்லாமல் தப்பிப்பது போல இருந்துள்ளது. இதே போல இந்த சிறுவனும் செய்ய எதிர்பாராத விதமாக இந்த சிறுவன் உயிரிழந்துள்ளான்” என்று தெரிவித்தனர்.