சேலத்தில் மகன் மீது பொய் வழக்கு!! துக்கம் தாங்காமல் தந்தை அரசு மருத்துவமனையில் தீக்குளிக்க முயற்சி!!

0
147
#image_title

சேலத்தில் மகன் மீது பொய் வழக்கு!! துக்கம் தாங்காமல் தந்தை அரசு மருத்துவமனையில் தீக்குளிக்க முயற்சி!!

தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருந்ததால் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை.

சேலம் முகமதுபுறா பகுதியில் உள்ள பிரியாணி கடையில் ஷாஜகான் என்பவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பரோட்டா வாங்கி சென்றுள்ளார்.

அப்போது பரோட்டாவிற்கு குழம்பு குறைவாக வழங்குவது குறித்து கடை உரிமையாளரிடம் கேட்டதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஷாஜகானை கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உட்பட எட்டு பேர் தாக்கியதில் ஷாஜகான் பலத்த காயம் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஷாஜகானின் உறவினர் இப்ராகிம் தலைமையில் உறவினர்கள் நேற்றைய தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி இரண்டு தரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இப்ராஹிம் மகன் அன்ஸ் என்பவர் மீது டவுன் காவல் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துவிட்டதாக கூறி, இப்ராஹிம் தூக்கமாத்திரைகளை அருந்தி, சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீக்குளிக்கும் முயன்றால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

author avatar
Savitha