அணி மாறி ஆடுவது குறித்து மனம் திறந்த பிரபல வீரர்?

0
102

சென்ற முறை ஐபில் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் டெஸ்ட் துணை கேப்டன் அஜிங்கா ரஹானே இம்முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த அவர், 2020 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறியுள்ளார் அது அவர் கூறுகையில்.

எனது மனதில் அடுத்த அணிக்காக விளையாட வேண்டும் போன்ற எந்த சிந்தனையும் உதிக்கவில்லை. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, அவர்களுக்காக நான் விளையாட வேண்டும் என்று விரும்பியது என கூறினார்.

நிறைய கற்றுக் கொள்ளவும், ஒரு வீரராக வளரவும் கிடைத்த நல்ல வாய்ப்பு என எண்ணுகிறேன். நீண்ட வருடமாக விளையாட வாய்ப்பு கொடுத்த ராஜஸ்தான் அணிக்கு நிர்வாகத்திற்கு எனது நன்றி. 2019 சீசன் மத்தியில் நடந்த சம்பவங்கள் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

கிரிக்கெட் எப்போதுமே டீம் ஸ்போர்ட் என்று நம்புகிறவன் நான். ஒரு வீரரின் தவறால் நீங்கள் தோல்வியடைய மாட்டீர்கள். அதேபோல், ஒரு வீரரின் சிறந்த ஆட்டத்தால் வெற்றி பெற முடியாது. நீங்கள் என்னை குற்றம்சாட்ட நினைத்தால், அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். என அவர் கூறினார்.