ஐஸ்கிரீம் தொடர்ந்து அதிகமா சாப்பிடுபவர்களா நீங்கள்!!? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!!

0
83
#image_title

ஐஸ்கிரீம் தொடர்ந்து அதிகமா சாப்பிடுபவர்களா நீங்கள்!!? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!!

ஐஸ்கிரீம் தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு என்னென்ன தீமைகள் கிடைக்கின்றது என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

ஐஸ்கிரீம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு பொருள்தான். இந்த ஐஸ்கிரீமில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப் பொருட்கள் அதிகமாக சேர்க்கப்படுகிறது.

ஐஸ்கிரீம் தயாரிக்கும் பொழுது முன்பு எல்லாம் முட்டை சேர்ப்பார்கள். ஆனால் தற்பொழுது ஒரு சில ஐஸ்கிரீம்களில் முட்டைக்கு பதிலாக வலி நிவார்ணியாக பயன்படுத்தப்படும் டை-எத்திலீன்-கிளைக்கால் என்ற வேதிப் பொருள் சேர்க்கின்றனர்.

நாம் வீட்டிலேயே ஐஸ்கிரீம் தயாரித்து சாப்பிடலாம். ஆனால் அதுவும் அளவோடு சாப்பிட வேண்டும். மேலும் இந்த கடைகளில் இருந்து வாங்கி சாப்பிடும் ஐஸ்கிரீம்களில் அதிக இந்துக்கள் உள்ளது. ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் நல்லது ஏற்படுகின்றது என்றாலும் அதிகமாக சாப்பிடக்கூடாது.

எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அது நஞ்சு தான். இந்த பதிவில் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்ன தீமைகள் கிடைக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.

ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்!!!

* ஐஸ்கிரீமை தொடர்ந்து அதிகமாக சாப்பிடுவதால் நமக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதாவது ஐஸ்கிரீம் வேகமாக உருகாமல் இருப்பதற்காக ஷாம்பு மற்றும் சோப்புகளில் பயன்படுத்தப்படும் பாலிசோர்பேட் 80 என்ற வேதிப் பொருள் கலக்கப்படுகின்றது. இதனால் புற்றுநோய் வரக்கூடும்.

* ஐஸ்கிரீமை அதிகமாக சாப்பிடுவதால் கூட நமக்கு ஒரு சில நேரங்களில் அல்சர் என்று அழைக்கப்படும் குடல் புண்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது.

* நாம் தொடர்ந்து அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது நம்முடைய சிறுநீரகப் பைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

* நாம் தொடர்ந்து அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது நமது இதயத்தில் வலி ஏற்படும்.

* நாம் தொடர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது நமது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது.

எனவே ஐஸ்கிரீமை அதிகமாக சாப்பிடாமல் எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம். இதை குழந்தைகளுக்கும் செல்லாதது தர வேண்டும். அடிக்கடி சாப்பிட்டு ஆபத்தில் மாட்டிக் கொள்வதை விட சாப்பிடாமல் தவிர்த்து ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.