அந்த காலத்தில் ஒரு அலைபாயுதே காதல்.. அந்த நடிகர் கட்டிய தாலியை கழட்டாமல் மறைத்து வைத்த நடிகை!

0
214
#image_title

அந்த காலத்தில் ஒரு அலைபாயுதே காதல்.. அந்த நடிகர் கட்டிய தாலியை கழட்டாமல் மறைத்து வைத்த நடிகை!

தமிழ் திரையுலகில் அந்த கால லேடி சூப்பர் ஸ்டாராக ஒரு கலக்கு கலக்கியவர் பத்மினி. நாட்டிய பேரொளியாக திகழ்ந்த இவர் திரையுலகில் கால் பதித்து பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்தார்.

இவரின் அறிமுகப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் ஜோடி போட்டு நடித்து அசத்தினார். ரீல் ஜோடி என்றால் அது சிவாஜி – பத்மினி தான் என்று சொல்லும் அளவிற்கு படத்தில் இவர்களது காதல் காட்சி அவ்வளவு அழகாக அமைந்திருக்கும்.

படத்தில் இவர்களின் காதல் எவ்வளவு அழகாக இருந்ததோ அதேபோல் நிஜத்திலும் அவர்களுக்குள் ஒரு அன்பு, காதல் இருந்தது என்று பேச்சு இன்றளவும் அடிபட்டு கொண்டு தான் இருக்கிறது.

கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் சிவாஜி – பத்மினி ஜோடியாக நடித்திருந்தாலும் அவர்களுக்கு திரை வாழ்க்கையில் “தில்லானா மோகனாம்பாள்” என்ற படம் தான் அதிக பெயர், புகழை வாங்கி கொடுத்தது.இந்த மாதிரி ஒரு ஜோடியை எங்கும் கண்டிருக்க மாட்டார்கள் என்று ரசிகர்கள் ரசித்து, உருகும் அளவிற்கு அவர்களது காதல் வெளிப்பாடு அழகாக அமைந்திருக்கும்.

இந்த ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாற வேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் ஆசைக் கொண்ட நிலையில் சிவாஜிக்கு அவரது உறவுக்காரா பெண்ணுடன் சுவாமிமலையில் திருமணம் நடைபெற்றது.

சிவாஜி அவர்களின் திருமணத்திற்கு முந்தின நாள் சூட்டிங்கில் பத்மினி கழுத்தில் தாலி கட்டுவது போன்ற காட்சி வைக்கப்பட்டது. சிவாஜியின் உண்மை திருமணத்திற்கு முன் பட காட்சிக்காக அவர் கட்டிய தாலியை கழட்ட மனம் இல்லாமல் அலைபாயுதே படத்தில் மாதவன் கட்டிய தாலியை ஷாலினி மறைத்து வைத்திருந்தது போல் பத்மினி அவர்களும் யாருக்கும் தெரியாமல் தாலியை மறைத்து வைத்திருந்திருக்கிறார்.

பத்மினி எவ்வளவு தான் தாலியை பொத்தி பொத்தி மறைத்து வைத்த போதிலும் அவரது அக்கா ராகினி அதை எப்படியோ கண்டறிந்து அவர்களது தாயிடம் சொல்லிவிட்டாராம். தாயின் கட்டாயத்தில் வேறு வழியின்றி அந்த தாலியை கழட்டினார் பத்மினி. படக் காட்சிக்காக சிவாஜி கட்டிய தாலியை கழட்ட மனமில்லாமல் மறைத்து வைத்த நடிகை பத்மினி அவர்கள் நடிகர் திலகத்தின் மீது கொண்ட அன்பை நினைக்கும் பொழுது பூரிப்பாக இருக்கிறது.