அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட்… ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினியோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு!

0
98

அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட்… ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினியோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.

3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கிவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால் இந்த இரண்டு படங்களுமே வெற்றிப்படங்கள் இல்லை. நீண்ட நாட்களாக ரஜினியை இயக்க வேண்டும் என்ற ஆசையோடு இருக்கிறார் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இந்நிலையில் இப்போது லைகா தயாரிப்பில் அவர் இயக்க உள்ள படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க ரஜினி சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் நடிக்க தயங்கிய ரஜினிகாந்த் மகளின் வற்புறுத்தலால் அந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் அதர்வா முரளிதான் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பரதேசி படத்துக்குப் பிறகு ஒரு பெரிய பிரேக் கிடைக்காமல் அதர்வா தடுமாறி வருகிறார். அது இந்த படத்தின் மூலம் கிடைக்க வாய்ப்புள்ளது.

தொடர் தோல்விகளால் அடுத்து வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஜினி இளம் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கிறது. அண்ணாத்த படத்தின் தோல்வியால் இந்த படத்துக்கு ரஜினிக்கு சம்பளம் கணிசமாகக் குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.