என் மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் கைது செய்யபட வேண்டும்.. பிரியாவின் தந்தை கோரிக்கை..!

என் மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் கைது செய்யபட வேண்டும்.. பிரியாவின் தந்தை கோரிக்கை..!

மகளின் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். சென்னயை சேர்ந்தவர் பிரியா (17).இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கால்பந்து வீராங்கனையான இவர் பல போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும் பெற்றுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட தசைபிடிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால், அவரது வலி குறையவில்லை என கூறப்படுகிறது. … Read more

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை.. தமிழக பாஜக தலைவர் இரங்கல்..!

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை.. தமிழக பாஜக தலைவர் இரங்கல்..!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்களை இழந்து சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் கால்பந்து வீராங்கனையான பிரியா உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரின் கால்களை இழந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், முதல்வர் … Read more

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் இழப்பீடு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு 

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் இழப்பீடு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு 

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் இழப்பீடு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளகாடான சீர்காழி தாலுக்காவிற்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார். மேலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. இந்நிலையில் வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை , நாகப்பட்டிணம் … Read more

குடியரசு தலைவர் குறித்து சர்ச்சை கருத்து.. திரிணாமுல் அமைச்சருக்கு எதிராக வெடித்த போராட்டம்.. மம்தா செய்த செயல்..!

குடியரசு தலைவர் குறித்து சர்ச்சை கருத்து.. திரிணாமுல் அமைச்சருக்கு எதிராக வெடித்த போராட்டம்.. மம்தா செய்த செயல்..!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சரின் ஜனாதிபதி குறித்தான சர்ச்சை கருத்துக்கு முதல்வர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் அகில் கிரி. இவர் பாஜக எம்.எல்.ஏ வின் தொகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பாஜக எம்.எல்.ஏ சுவேந்து அதிகாரி என்னுடைய தோற்றத்தை பற்றி கூறுகிறார், ஆனால் நாங்கள் தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிட மாட்டோம் என கூறிய அவர் … Read more

இந்த தீர்ப்பு ஆளுநர்களுக்கு படிப்பினை.. மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை..!

இந்த தீர்ப்பு ஆளுநர்களுக்கு படிப்பினை.. மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை..!

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழுவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். அதே போல தங்களையும் விடுவிக்க வேண்டும் என சாந்தன், முருகன், நளினி , ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு விடுதலை அளித்து தீர்பளித்தது. இந்நிலையில், அவர்களின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை 2018ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் … Read more

சோயிப் அக்தருக்கு ஷமி அளித்த பதில்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

சோயிப் அக்தருக்கு ஷமி அளித்த பதில்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலக கோப்பை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ரசிகனும் தங்களுடைய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என நினைப்பர். இந்தியாவை பொறுத்தவரையில் கிரிக்கெட் ஒரு மதம் போலவே கருதப்படுகிறது. ரசிகர்களும் தங்களது ஆதரவை சலைக்காமல் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்பது ரசிகர்களிடைஏ மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது. முதலில் பேட் செய்த … Read more

கனமழையால் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழையால் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பொழிந்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தமிழகத்திற்கொ கொடுக்கப்பட்ட ரெட் அலார்ட் திரும்ப பெறப்பட்டாலும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை உள்ளிட்டவற்றில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதோடு பயிர்களும் தண்ணீரில் அழுகி சேதமடைந்தன. … Read more

பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை..!

பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை..!

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், பல இடங்களிலும் கன மழை பெய்து வருவதால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பயிர்காப்பீட்ட்டிற்கு விண்ணபிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதோடு ஒரு ஏக்கருக்கு 30, 000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இக் கனமழையின் … Read more

காதலனுடன் உல்லாசமாக வாழ பெற்ற மகளை பலியாக்கிய தாய்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்..!

காதலனுடன் உல்லாசமாக வாழ பெற்ற மகளை பலியாக்கிய தாய்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்..!

தாயே தனது மைனர் பெண்ணை காதலுனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றால் பெற்றவர்கள் தான் முதலில் துடித்து போவார்கள். ஆனால், சில பெற்றவர்கள் தங்களின் இச்சைக்காக பெற்ற குழந்தைகளை வதைக்கும் சம்பவமும் சில இடங்களில் அரங்கேறி வருகிறது. இப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 36 வயது பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இந்த பெண்ணுக்கும் அவரது தூரத்து உறவினரான … Read more

சாலை விபத்தில் பலியான நண்பன்.. குற்ற உணர்வில் இளைஞர் செய்த விபரீத செயல்..!

சாலை விபத்தில் பலியான நண்பன்.. குற்ற உணர்வில் இளைஞர் செய்த விபரீத செயல்..!

தன்னுடன் இருசக்கர வாகனத்தில் தன்னுடன் வந்த நண்பர் பலியானதால் இளைஞர் குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் அவர் தனது நண்பரான பிரபு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் செஞ்சியில் இருந்து அங்கராயநல்லூர் சென்று கொண்டிருந்தார். அப்போது பிரபு இரு சக்கர வாகனத்தை ஓட்டினார். அப்போது, எதிர்பாராத … Read more