பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் 21 வயது வாலிபர் கைது. தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் ஓராண்டு சிறை.

பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் 21 வயது வாலிபர் கைது. தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் ஓராண்டு சிறை.

கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமதித்த வழக்கில் அருண் கிருஷ்ணன் என்பவர் கைதாகியுள்ளார்.   கோவையில் சுந்தராபுரம் எல்ஐசி ஏஜண்ட் காலனின் முன்பு உள்ள பெரியார் சிலை மீது கடந்த 17ஆம் தேதி மர்ம நபர்கள் சிலரால் சிலையின் மீது காவி சாயத்தை மேலே வீசிய அவமதித்திருந்தனர்.   இதுகுறித்து கோவை மாவட்ட திராவிட கழகத்தின் தலைவர் சந்திரசேகரன் அளித்த புகாரின்படி 151, 153(ஏ)1(பி), 504 ஆகிய பிரிவின் கீழ் குனியமுத்தூர் போலீசார் … Read more

ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியா வருகை!

ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியா வருகை!

இந்தியாவில் விமானப்படையை பலபடுத்த ரஃபேல் போர் விமானம் வாங்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி 2016 ஆம் ஆண்டு 58000 கோடி செலவில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா,பிரான்ஸ் நாட்டில் உள்ள ரஃபேல் போர் விமானத்தை தயாரிக்க கூடிய டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இது இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பயது ,இதில் பல்வேறு ஊழல்கள் நடைப்பெற்றுள்ளது,கொள்முதலில் வெளிப்படை தன்மையில்லை என பல்வேறு குற்றசாட்டுகளுடன் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தையே முடக்கியது.

கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் பிரான்ஸ் நாட்டிடமிருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தை இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார் அதன்பின் இந்த வருடம் மே மாதத்தில் வழங்கபட இருந்த சில போர் விமானங்கள் கொரோனாவால் காலதாமதமானது.

இதனையடுத்து,நேற்று 5 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிற்கு அனுப்ப பிரான்ஸ் முடிவு செய்தது. அதன்படி நேற்று பிரான்ஸ் நாட்டிலிருந்து இருந்து இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் புறப்பட்டன.நேற்று இரவு இந்த போர் விமானங்கள் அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் தரையிறக்கப்பட்டது.அதன் பின் இந்த போர் விமானங்கள் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்து இன்று இந்தியாவிற்கு வருகைதர உள்ளது.இதற்காக இந்தியாவில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் உள்ள விமான தளத்தில் இந்த போர் விமானங்கள்
தரையிறங்குவதைக் கருத்தில் கொண்டு விமான தளத்தினை சுற்றி 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.மேலும் விமான தளத்தை சுற்றியுள்ள 4 கிராமங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.விமானம் தரையிறங்கும் சமயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது என்று அம்பாலா போக்குவரத்து துறை டி.எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

Read more

இனியும் தாமதம், அலட்சியம் கூடாது!எச்சரிக்கும் மரு.ராமதாஸ்

Dr.Ramadoss

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.அந்த அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகி, பணம், நிம்மதி உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியும், உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் கூட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது. சென்னை அண்ணாநகரை அடுத்த டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த … Read more

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 5,865 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 5,865 ஆக அதிகரிப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.75 லட்சத்தைத் கடந்துள்ளது. தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 5,865 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 12 வது இடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பில் ஜெர்மனி, துருக்கியை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம்

கொரோனா பாதிப்பில் ஜெர்மனி, துருக்கியை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம்

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும்  இதுவரை 6.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வங்காளதேசத்தில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 2.30 லட்சத்தை நெருங்குகிறது.  நேற்று ஒரே நாளில் 2,960 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,29,185 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் ஏவிய ஏவகணை அருகில் ரபேல் ஜெட் விமானங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் ஏவிய ஏவகணை அருகில் ரபேல் ஜெட் விமானங்கள்

ஸ்பெயினில் இருந்து புறப்பட்ட ரபேல் ஜெட் விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. விமானம் நிறுத்தப்படுவதற்கு முன் ஈரான் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தளம் குறி வைக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது. இதற்கிடையே அல் தஃப்ரா விமான நிலையம் அருகே ஈரான் ஏவிய ஏவகணை விழுந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கான சி.என்.என்.-ன் பார்பரா ஸ்டார் செய்தி சேனல், ‘‘ஈரானின் ஏவுகணைகள் தாக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய … Read more

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல்கள் இல்லை. இந்நிலையில் அலாஸ்கா மாகாணத்தில் கடந்த 16-ம் தேதி முதல் தொடர்ந்து சிறிய அளவில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய கனமழை 19 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

இடியுடன் கூடிய கனமழை 19 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பீகாரர், அசாமில் கடந்த சில வாரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதுவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. அங்குள்ள 21 மாவட்டங்களில் உள்ள 19 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

ஒரே நாளில் 60000 பேருக்கு கொரோனா உறுதி

ஒரே நாளில் 60000 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா வைரசால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,52,319 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,498,343 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளை அமெரிக்கா பதிவு செய்து உள்ளது.

உலக அளவில் McDonald’s உணவங்களின் விற்பனை வீழ்ச்சி

உலக அளவில் McDonald's உணவங்களின் விற்பனை வீழ்ச்சி

COVID-19 நோய்த்தொற்று காரணமாக உலக அளவில் McDonald’s உணவங்களின் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட விற்பனையில் வீழ்ச்சி அதிகமாக இருப்பதாகவும் பல நாடுகளில் அறிவிக்கப்பட்ட முடக்க நிலையால் அதிக பாதிப்பு ஏற்பட்டதாகவும் உணவகம் கூறியது. வருவாயில் 30.5 விழுக்காடு குறைந்தது அதாவது 3.76 பில்லியன் டாலர். கடந்த காலாண்டில் உலக அளவில் McDonald’s உணவங்களின் விற்பனையில் சுமார் 24 விழுக்காடு குறைந்தது. பிரிட்டன், பிரான்ஸ், லத்தீன் அமெரிக்கா ஆகிய வட்டாரங்களில் அதிக நஷ்டம் ஏற்பட்டது. அமெரிக்காவில் மட்டும் … Read more