ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது

ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது

நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் பேட்டி சாம்னாவில் வெளியானது. அதில் அவர் பொருளாதார பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது என கூறியுள்ளார்.  ஆனால் சில விஷயங்களை படிப்படியாக தொடங்கி வருகிறோம். ஒரு முறை தொடங்கப்பட்டால், அது மீண்டும் மூடப்படக் கூடாது. எனவே நான் பல கட்டங்களாக நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தேன். நீங்கள் பொருளாதாரமா, சுகாதாரமா என யோசிக்க முடியாது. இரண்டும் சமமாக கருதப்பட வேண்டும். கொரோனா பிரச்சினை உலக போர். இது ஒட்டு … Read more

துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி மாணவனுக்கு 38 ஆண்டுகள் சிறை

துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி மாணவனுக்கு 38 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் கொலராடோ மாநிலப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி மாணவனுக்கு ஆயுள் தண்டனையுடன் 38 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அலெக் மெக்கென்னி  என்னும் 17 வயது மாணவர் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி டென்வர் வட்டாரப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். சம்பவத்தில் 18 வயது மாணவர் இறந்ததுடன் 8 பேர் காயமடைந்தனர். பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையில் மெக்கென்னி கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தாம் செய்த குற்றத்திற்கு மனம் வருந்துவதாகவும் தமக்குப் பெரிய … Read more

மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரித்த கொரோனா வைரஸ்

மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரித்த கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிவரும் நிலையில் தென் கொரியாவில் நேற்று புதிதாக 113 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  கடந்த மூன்று மாதங்களில் பதிவான  அதிக எண்ணிக்கை இதுவாகும். புதிதாக பாதிக்கப்பட்டோரில் 86 பேர், வெளிநாடுகளிலிருந்து தென் கொரியா சென்றவர்கள். ஈராக்கிலிருந்து தாயகம் திரும்புவோரும், புசான் நகரில் கரையொதுங்கிய ரஷ்ய மீன் பிடிப் படகைச் சேர்ந்த கடலோடிகளும் அவர்களில் அடங்குவர். பயணிகள், கொரோனா கிருமி தொற்றவில்லை என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் … Read more

ஐ.பி.எல். தொடரின் அட்டவணை வெளியானது உண்மையா?

ஐ.பி.எல். தொடரின் அட்டவணை வெளியானது உண்மையா?

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக  ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும் இதன் காரணமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம்  இந்தியாவில் அதிகமாக இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 … Read more

கொரோனா வைரஸ் எதிரொலி : 12 ஆம் வகுப்பு வரை பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைப்பு

கொரோனா வைரஸ் எதிரொலி : 12 ஆம் வகுப்பு வரை பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால்  பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில்  நடப்புக் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைத்துக் … Read more

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில் 2 ஆயிரம் கோடி ஊழல்! முதல்வரின் முறைகேடு அம்பலம்

Corona Test Kit

கர்நாடகத்தில் ஆளும் கட்சியான பிஜேபியின் முதலமைச்சர் எடியூரப்பா அரசு, கொரோனா சிகிச்சைக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில், 2000 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக அம்மாநில எதிர்க்கட்சி அமைப்பான காங்கிரசின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; “கடந்த 3ஆம் தேதியே கொரோனா சிகிச்சைக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறியிருந்தேன், இதன் காரணமாக 20 முறைக்கு மேல் … Read more

கொரோனா வைரஸ் : இன்று ஒரே நாளில் 5,072 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா வைரஸ் : இன்று ஒரே நாளில் 5,072 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,942 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக இன்று ஒரே நாளில் 72 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரி்ழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,796 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் … Read more

இந்தியாவில் பெய்த கனமழையால் வங்கதேசத்தில் கடுமையான வெள்ளம்

இந்தியாவில் பெய்த கனமழையால் வங்கதேசத்தில் கடுமையான வெள்ளம்

வங்கதேசத்தில்  பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தின் மத்திய பகுதியில், வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளிலிருந்தும் பண்ணைகளிலிருந்தும் கிராமத்து மக்கள் படகுகளில் வெளியேறினர். வெள்ளத்தைத் தடுப்பதற்காக அடுக்கிவைக்கப்பட்ட மணல் மூட்டைகளை மீறி, கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. அருகிலுள்ள இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்த கனத்த மழையால், வங்கதேசத்தில் வெள்ளம் கடுமையானது. அங்கே, மனிதாபிமான நெருக்கடி உருவாகலாமென அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்தது. வங்கதேசத்தின் மூன்றில் ஒரு பகுதி, வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டது சங்கம். வரும் … Read more

போட்டுட்டாங்கடா அடுத்த காவித் துண்டா!

M.G.R

அண்மைக் காலமாகவே சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, கலங்கபடுத்துவது இதுபோன்ற இழிசெயல்களை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது . ஜாதி மதங்களை கடந்த சமயத்தின் அடையாளமாகவும் ஏழை மக்களின் இல்லத்திலும், உள்ளத்திலும் என்றும் குடிகொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருக்கிறது. புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி  கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   … Read more

கொரோனாவிற்கான தடுப்பு மருகொரோனாவிற்கான தடுப்பு மருந்து! தமிழகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைந்து! – தமிழகத்தில் நேற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

Vaccine for corona! - The test was conducted in Tamilnadu yesterday

தமிழகத்தில் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தில், கொரோனாவிற்கான தடுப்புமருந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. “கோவேக்சின்” என்ற மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனைப் பரிசோதிக்க இந்தியாவில் 12 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில், எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியில் பரிசோதனை நடத்தினர். பரிசோதனைக்கு இரண்டு தன்னார்வலர்களுக்கு “கோவேக்சின்” தடுப்பூசி முதற்கட்டமாக செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு 5 மில்லி தடுப்புமருந்து செலுத்தப்பட்டது. தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட சில மணி நேரங்களில், அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால் பிறகு வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். … Read more