நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் தொடரப்பட்டுள்ளது. நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் தயாரித்து 2016ல் வெளியிடப்பட்ட ஆய்வுக்கூடம் என்ற படத்தின் கதையை அனுமதியின்றி பயன்படுத்தி பிச்சைக்காரன் -2 என்ற படத்தை எடுத்துள்ளதாக கூறி, ராஜகணபதி என்பவர் படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த படத்துக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.இந்த நிலையில் பரணி … Read more

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆட்சி ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கும் – அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்!!

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆட்சி ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கும் - அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்!!

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆட்சி ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்று தான் நமது முதல்வர் ஒவ்வொரு நாளும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார். பெரம்பலூரில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் புகழாரம். பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நடை பெற்ற அரசு விழாவில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் 287 பயனாளிகளுக்கு ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் … Read more

போக்குவரத்து காவலர் மீது கார் ஏற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற அவலம்!!

போக்குவரத்து காவலர் மீது கார் ஏற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற அவலம்!!

போக்குவரத்து காவலர் மீது கார் ஏற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற அவலம்!! பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காரை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலரை காரின் போனட் மீது ஏற்றியதோடு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கிச் சென்ற பரபரப்பு நிகழ்வு அரங்கேறியுள்ளது. அந்த காவலரின் பெயர் ஹர்தீப் சிங் என்பதும் காரில் இழுத்துச் செல்லப்பட்டதால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலரின் மீது காரை ஏற்றிய ஓட்டுனரின் பெயர் … Read more

உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய குறைகளை தீர்த்த பொதுப்பணித்துறை அமைச்சர்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் தொகுதி மக்கள்!!

உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய குறைகளை தீர்த்த பொதுப்பணித்துறை அமைச்சர்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் தொகுதி மக்கள்!!

தொகுதி மக்களை நேரில் சந்தித்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய குறைகளை தீர்த்து வைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு. திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட நவம்பட்டு, கல்லொட்டு, வேளையம்பாக்கம், பழையனூர் மற்றும் கண்டியாங்குப்பம் ஆகிய ஊராட்சிகளில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பொதுமக்களை நேரில் சந்தித்து பொது மக்களின் குறை தீர்வு மனுக்களை பெற்றார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் தனது தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் பொது மக்களை ஒவ்வொரு மாதம் நேரில் சந்தித்து … Read more

இரண்டு ஆண்டுகளாகியும் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை – தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர்!!

இரண்டு ஆண்டுகளாகியும் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர்!!

இரண்டு ஆண்டுகளாகியும் அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் மணிமேகலை கரூரில் பேட்டி. கரூர் மாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு சார்பில் மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டல நிர்வாகிகளுக்கு இயக்க பயிலரங்கம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இன்று தொடங்கிய பயிலரங்கத்தில் கல்விக் கொள்கை, எதிர்கொள்ளும் சவால்கள், அறிய வேண்டிய அரசாணைகள் … Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு கால நிர்ணயம் செய்ய வலியுறுத்தி டெல்லி சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டு வருவோம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம். சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் தகுந்த அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி கடந்த 10 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இதேபோல் ஒவ்வொரு மாநில சட்டமன்றப் பேரவையிலும் … Read more

அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி-கல்வித்துறை அறிவிப்பு!

அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி-கல்வித்துறை அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகளில், அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக் கல்வி ஆணையர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு , இலவச சீருடை, இலவச பாட புத்தகங்கள் , இலவச நோட்டு புத்தகங்கள் என பலவகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும். ஆனாலும் அரசு பள்ளிகளில் … Read more

தனியார் கல்வியியல் கல்லூரி மீது நீதிமன்றம் கடும் குற்றச்சாட்டு!

தனியார் கல்வியியல் கல்லூரி மீது நீதிமன்றம் கடும் குற்றச்சாட்டு!

விருதுநகர் கலசலிங்கம் கல்லூரிக்கு ரூ5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தனியார் கல்வியியல் கல்லூரி மீது நீதிமன்றம் கடும் குற்றச்சாட்டு. எந்த அனுமதியும் இல்லாமல் ஆசிரியர் பயிற்சி என மாணவர்கள் சேர்க்கை நடத்தியுள்ளது கல்லூரி நிர்வாகம். மாணவர்களிடம் மனசாட்சி இல்லாமல் கட்டணம் வசூல் செய்துள்ளனர். ஏமாறும் மாணவர்கள் மூலம் தனது வங்கிக் கணக்கை செழிப்பாக்கி வைத்துள்ளது கல்வி நிறுவனம். பாதிக்கப்பட்ட 100 மாணவர்களும் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யலாம். 100 மாணவர்களின் … Read more

திமுகவின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் – நாடாளுமன்ற தேர்தலுக்கு பணியை விரைவுபடுத்த ஆலோசனை!

திமுகவின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் - நாடாளுமன்ற தேர்தலுக்கு பணியை விரைவுபடுத்த ஆலோசனை!

திமுகவின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பணியை விரைவுபடுத்துங்கள் என அறிவுறுத்தினார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்ட துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, 234 தொகுதியில் இருந்தும் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுகவில் கூடுதலாக … Read more

ஒழுகமங்கலம் கிராமத்தில் கோவில் காளை இறப்பு!! நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!!

ஒழுகமங்கலம் கிராமத்தில் கோவில் காளை இறப்பு!! நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!!

ஒழுகமங்கலம் கிராமத்தில் கோவில் காளை இறப்பு நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஐந்து நிலை நாட்டார்கள் முல்லை மங்கள சேகரத்தை சார்ந்த ஒழுகமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் வழங்கி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வரதன் என்ற கோவில் காளை உடல் நலக்குறைவால் இறந்தது. முன்னதாக கிராமத்து நாட்டார்கள் சார்பில் இறந்த வரதன் என்ற காளைக்கு கோவில் முன்பாக அனைவரும் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கிராமத்தின் முக்கிய … Read more