புகையிலை பொருட்களுக்கு தடை நீக்கம்! உச்சநீதிமன்றம் 

புகையிலை பொருட்களுக்கு தடை நீக்கம்! உச்சநீதிமன்றம் 

புகையிலை பொருட்களுக்கு தடை நீக்கம்! உச்சநீதிமன்றம் . புகையிலை பொருட்களான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடை உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை, மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என புகையிலை நிறுவனங்கள் … Read more

வீஏஓ கொலை 1 கோடி நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

வீஏஓ கொலை 1 கோடி நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

வீஏஓ கொலை 1 கோடி நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டியுள்ளனர். படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார் அதில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் … Read more

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்! உச்ச நீதிமன்றம் அதிரடி

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்! உச்ச நீதிமன்றம் அதிரடி

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்! உச்ச நீதிமன்றம் அதிரடி. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி டிஒய் சந்திரசூட், வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள் தீவிரமானவை என்றும் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டியவை என்றும் தெரித்துள்ளார். மல்யுத்த வீராங்கனைகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதிட்டார். ஒரு சிறுமி உள்ளிட்ட 7 வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்துள்ளதாக கபில் … Read more

சூடானில் தமிழர்கள் தவிப்பு! மத்திய அரசு தீவிர நடவடிக்கை

சூடானில் தமிழர்கள் தவிப்பு! மத்திய அரசு தீவிர நடவடிக்கை

சூடானில் தமிழர்கள் தவிப்பு! மத்திய அரசு தீவிர நடவடிக்கை. சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. இதில் நாடு முழுவதும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த மோதலில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,351 பேர் காயமடைந்துள்ளதாகவும் (WHO) உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த … Read more

மணல் கடத்தல் விஏஓ கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்

மணல் கடத்தல் விஏஓ கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்

மணல் கடத்தல் விஏஓ கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசை பாண்டியாபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்(56). இவர் வல்ல நாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் பணிபுரிந்து வரும், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்று திடீரென புகுந்த இரண்டு மர்ம நபர்கள், லூர்து பிரான்சிஸை அறிவாளால் சரமாரியாக கை, தலை, கழுத்து ஆகிய பகுதியில்  வெட்டியுள்ளனர். இதில் ரத்த … Read more

அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது

அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது

அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் தொல்லை என்பது அதிகரித்து கொண்டே வருகிறது. அரசு பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், போன்றவற்றில் பாலியல் தொல்லை என்பது பெண்களுக்கு நடந்து கொண்டுதான் உள்ளது. இந்த பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகள் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்ட போதும், அதனை தடுப்ப தென்பது இயலாத காரியமாகவே அமைந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் கலாசேத்ரா … Read more

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம்! ஒரு லட்சம் வழங்க உத்தரவு

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம்! ஒரு லட்சம் வழங்க உத்தரவு

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம்! ஒரு லட்சம் வழங்க உத்தரவு. தமிழகத்தில் கடந்த வாரம் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கி தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி தாமரைநகர் என்ற இடத்திலுள்ள புது ஏரியில் 22-4-2023 அன்று குளிக்கச் சென்ற கன்னங்குறிச்சி கிராமம். கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 17) மற்றும் பாலாஜி, (வயது … Read more

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி! ரஹானே தேர்வு 

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி! ரஹானே தேர்வு 

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி! ரஹானே தேர்வு . இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பை இறுதிப்போட்டி வரும் ஜூன் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில்,  இந்த டெஸ்ட் சாம்யின்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்  இன்று அறிவித்தது. இந்திய அணியில் ரகானே இடம்பெற்றுள்ளார். 15 மாதங்களுக்கு பிறகு அவர் … Read more

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாற்றம்! அமைச்சர் அறிவிப்பு

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாற்றம்! அமைச்சர் அறிவிப்பு

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாற்றம்! அமைச்சர் அறிவிப்பு. தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தமிழ் பாடத்துடன் தொடங்கியது. இந்த தேர்வை எழுத 8.75 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு பாடங்களுக்கும் தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 3-ம் தேதியுடன் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள், மாநிலம் முழுவதும் 79 மையங்களில் நடைபெற்றது. இந்த பணியில் சுமார் … Read more

மே 1 கிராம சபை கூட்டம்! தமிழக அரசு உத்தரவு

மே 1 கிராம சபை கூட்டம்! தமிழக அரசு உத்தரவு

மே 1 கிராம சபை கூட்டம்! தமிழக அரசு உத்தரவு. மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி, அனைத்து ஊராட்சிகளிலும் 1ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணிக்கு கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வெளியான அறிக்கையில், கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது என்றும், … Read more