மருத்துவர்களுக்கான பணி நியமனத்துக்கு தடை!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

0
37
Ban on appointment of doctors!! Sensational judgment of Chennai High Court!! Action order flown to the charity department!! Madras High Court Notice!!
Ban on appointment of doctors!! Sensational judgment of Chennai High Court!!

மருத்துவர்களுக்கான பணி நியமனத்துக்கு தடை!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கரோனா என்ற கொடிய நோயானது நாட்டையே சூறையாடிக் கொண்டிருந்தது. அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவத்துறையை சேர்ந்த அனைவர்களுக்கும் அரசு பணியில் முன்னுரிமை வழங்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது.

அதாவது, கரோனா சிகிச்சை பிரிவில் ஆறு மாதம் பணி செய்தவர்களுக்கு போட்டி தேர்வில் ஐந்து ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் 1,021 மருத்துவ பணியிடங்கள் உள்ளது. இதற்கு நடத்தப்பட்ட தேர்வில், கரோனாவில் வேலை செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை.

எனவே, இதற்கு எதிராக 14 மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில்,

இதற்காக வாதாடிய வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன், ஆறு மாதம் கரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றிய மருத்துவத்துறை சேர்ந்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறிய நிலையில்,

தற்போது அனைத்து மாநிலங்களிலும் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதை செய்யவில்லை. மேலும், மனுதாரர்கள் அனைவருமே கரோனா சிகிச்சை பிரிவில் 300 நாட்களுக்கு பணியாற்றியவர்கள் என்று கூறினார்.

இதன் பிறகு பேசிய நீதிபதி என்.சதீஷ்குமார், தற்போது 1.021 மருத்துவ பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று அதற்கான முடிவு வெளியான நிலையில்,

அதில், தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதை சில நாட்களுக்கு ஒத்தி வைத்து இடைகால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை தள்ளி வைப்பதாகவும் கூறி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

author avatar
CineDesk