பிறந்தநாள் கேக்கால் வந்த வினை! 2 பேர் பலி

0
141
Birthday cake problem cause murder
Birthday cake problem cause murder

பிறந்தநாள் கேக்கால் வந்த வினை! 2 பேர் பலி!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் மஜிதா சாலையில் தனியார் ஹோட்டலில் நண்பர்கள் சிலர் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு வந்துள்ளனர்.பிறந்த நாள் கொண்டாட்டங்களை செய்வதற்கு பல ஏற்பாடுகள் செய்துள்ளனர் அவர்கள்.தருன்ப்ரீத்சிங் என்பவருக்கு நேற்று பிறந்தநாள்.பிறந்த நாள் கொண்டுடாவதற்க்கு கேக் வெட்டி கொண்டாட அவரது நண்பர்களும் அவரும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

மாலை 6 மணிக்கு மேல் இந்த கொண்டாட்டங்களை அவர்கள் ஆரம்பித்தனர்.மேலும் இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் கொண்டாட்டத்திற்கு வந்துள்ளார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நண்பர்கள் அனைவரும் 20 வயதுடையவர்கள் அல்லது அந்த வயதினை ஒத்த வயதுடையுவர்கள்.அப்போது கேக் வெட்டி கொண்டாட்டத்தை ஆரம்பித்தனர் அவர்கள்.இதில் பிறந்த நாள் கொண்டாடும் நபரான தருன்ப்ரீத்சிங் மீது நண்பர்கள் கேக்கை எடுத்துப் பூசினர்.அப்போது அங்கு இருந்த நண்பர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.மேலும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைப் பார்த்த அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட விருந்தினர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார்.மேலும் அவர் முனீஸ் ஷர்மா மற்றும் விக்ரம் சிங் ஆகிய இரண்டு இளைஞர்களையும் சரமாரியாக சுட்டுத் தள்ளினார்.அவர் 5 முறை துப்பாக்கியால் சுட்டார் என்று கூறப்படுகிறது.அந்த நபரின் பெயர் மோனி தில்லன்.இந்தத் துப்பாக்கிச்சூட்டில் முனிஸ் சர்மா என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

மேலும் விக்ரம் என்பவர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மோனி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.மேலும் அந்த பார்டியில் கலந்து கொண்டவர்களின் 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் 5 நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

author avatar
Parthipan K