Home Blog Page 134

“விசிக வுக்கு ஆப்பு” திமுக-வுடன் பாமக கூட்டணி.. விளக்கமளிக்கும் ராமதாஸ்!!

0

PMK: பாமக கட்சிக்குள் தலைமை பதவிக்கான போட்டி நிலவு வருகிறது. இதனால் கட்சி இரண்டாக பிரியும் சூழல் உண்டாகியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் மகள் வழி பேரனை பொறுப்பில் அமர்த்தியது ரீதியாக கருத்து வேறுபாடு உண்டானது. நாளடைவில் இதுவே நீயா நானா என்று போட்டி போடும் நிலைமைக்கு தள்ளியுள்ளது. அதிலும் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்கியதோடு எனது கடைசி மூச்சு வரை நான் தான் தலைவர் எனக் கூறி வருகிறார்.

இதனை அன்புமணி ஒருபோதும் ஏற்கவில்லை. மாறாக அவருக்கு கட்சிக்குள்ளேயே தங்களின் சுயநலத்திற்காக சொல்லிக் கொடுக்கிறார்கள் எனக் கூறி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் பணி அமர்த்துபவர்களை அன்புமணி நீக்கும் செயலானது தொடர்ந்து வருகிறது. அதில் சேலம் மாவட்டம் பாமக எம்எல்ஏ அருளுக்கு ராமதாஸ் முக்கிய பதவியை கொடுத்தார்.

இதையடுத்து அன்புமணி அவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ராமதாஸ் கூறியதாவது, பாமக எம்எல்ஏ அருள் கொறடாவாக இருப்பதால் அவரை நீக்க முடியாது. மேற்கொண்டு அவரை நீக்க வேண்டுமென்றால் ஜிகே மணி-யிடம் கடிதம் கொடுத்து சபாநாயகருக்கு அனுப்பி வைத்து தான் இதனை செயல்படுத்த முடியும் என்று கூறினார்.

அதுமட்டுமின்றி அதிமுக அல்லது திமுக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றாலும் அதனை மாநில செயற்குழு பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு என அனைவரும் ஆலோசனை செய்து தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆனால் இவர் திமுகவுடன் கூட்டணி வைக்க மும்மரம் காட்டுவதாக பாமக வட்டாரங்கள் பேசுகின்றனர். அப்படி திமுக வுடன் கூட்டணி வைத்தால் திருமா கூட்டணியிலிருந்து விலக கூடும்.

மீண்டும் அமைச்சராக போகும் பொன்முடி.. அடக்கி வாசி இல்லையென்றால் அவ்வளவு தான்!! ஸ்டாலின் சரமாரி தாக்கு!!

0

DMK Ponmudi: ஸ்டாலின் தனது அமைச்சரவையில் இரண்டு முறை மாற்றத்தை கொண்டு வந்துள்ளார், அதிலும் சமீப காலமாக கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் யாராக இருந்தாலும் அவரை பதவியிலிருந்தே நீக்கம் செய்து விடுகிறார். குறிப்பாக அமைச்சர் பொன்முடி ஆரம்ப கட்டத்திலிருந்து பெண்களைப் பார்த்து ஓசி பஸ்ஸில் செல்கிறீர்கள் என கூறியதை அடுத்து தற்போது சைவ வைணவ இனத்தை ஒப்பிட்டு மாது விலை பெண்களுடன் தொடர்பு படுத்தி பேசினார்.

இதனால் எதிர்க்கட்சி என தொடங்கி கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துவிட்டது. இதனால் அவர் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இவரைப் போலவே பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசரையும் கட்சித் தொண்டரை தாக்கியது ரீதியாக அவரது பதிவையும் பறிபோனது. இதனையடுத்து பொன்முடி பலமுறை ஸ்டாலினை சந்திக்க முயற்சி செய்தும் அதனை மறுத்து வந்தார்.

தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழகம் முழுவதும் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பொதுக்குழு கூட்டத்தை நடத்தி மக்களிடம் ஆட்சி தொடங்கியதிலிருந்து செய்தவற்றை எடுத்துரைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓரணியில் தமிழ்நாடு இயக்கமானது விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. அதன் முழு பொறுப்பையும் பொன்முடிக்கு வழங்கியுள்ளனர். இதனால் கூடிய விரைவிலேயே அவருக்கு பழைய பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதே சமயம் பல கண்டிஷன்கள் முன் வைக்கப்பட்டுள்ளதாம். அவரது மகனுக்கு சீட் கேட்டு வரக் கூடாது. கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல நாவடக்கம் என்பது தேவை. அதனால் இனி பொதுமக்கள் மத்தியில் பார்த்து பேச வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொலையை நியாயப்படுத்துகிறாரா ஸ்டாலின்? கூட்டணி கட்சி தலைவர் சரமாரி கேள்வி!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகில் உள்ள மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். 10 பவுன் தங்கநகைகளை கோவிலுக்கு வந்தபோது என்னுடைய காரில் இருந்து அஜித் திருடிவிட்டார் என்று பெண்மணி கொடுத்த புகாரின் அடிப்படையில் FIR கூட பதிவு செய்யாமல் அஜித்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் அவரை அடித்து உதைத்து கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கம் போல திமுக கூட்டணியில் உள்ள தொல்.திருமாவளவன், வைகோ போன்றோர் எந்த ஒரு கடினமான வார்த்தைகளையும் உபயோகிக்காமல் திமுகவிற்கு ஆதரவாகவே இந்த சம்பவம் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள CPM கட்சி மாநில தலைவர் ஷண்முகம் அவர்கள் முதல்வரை கடுமையாக சாட்டியுள்ளார். விசாரணையின் போது மாரடைப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று என முதல்வர் சொல்வது ஏற்புடையதல்ல. இந்த மாதிரி சொல்லி கொலையை நியாயப்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை.

அஜித்குமாரை காவல்துறை அடித்து கொலை செய்திருக்கிறது என்று ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் கூட்டணி தலைவர் ஷண்முகம். சண்முகத்தின் இந்த பேச்சு திமுக விசிறிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாற்றுத்திறனாளியை ராடல் தாக்கிய போலீஸ்.. அடுத்தடுத்து அரங்கேறும் அராஜகம்!! வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!!

0

DMK: திருபுவனத்தில் காவலாளி அஜித் குமார் லாக்கப் மரணமானது தற்போது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதலில் விசாரணையின் போது 10 சவரன் நகை திருட்டுப் போனதால் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்ததாக கூறினர். தற்போது ரூ 500 ரூபாய் தகராறுக்காக அஜித்குமார் மீது பொய் புகார் சூட்டி அடித்து துன்புறுத்தி கொல்லப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. போலீசாரின் இந்த அராஜகத்தை மாற்ற கட்சியினர் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேற்கொண்டு தமிழக அரசு மீது பல குற்றச்சாட்டுகளையும் முன்னிறுத்தி உள்ளனர்.

இப்படி இந்த விவகாரமே ஆராத நிலையில், இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்திரங்குடியில் திருவிழா நடைபெறுவதால் பாதுகாப்பு பணிக்காக போலீசார் வந்துள்ளனர். அதில் சிஐடி லிங்கசாமி என்பவர் அங்கு பெட்டிக்கடை நடத்தி வந்த தங்கவேலுவிடம் தகராரில் ஈடுபட்டுள்ளார். மேலும் அங்கிருந்த ராட் கம்பியை கொண்டு தங்கவேலுவை மாற்றித்திறனாளி என்று கூட பாராமல் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் அவரது இடது கை உடைந்துள்ளது. மேற்கொண்டு இது ரீதியாக அக்கம் பக்கத்தினர் கேட்ட பொழுது அவர்களையும் கடுமையாக மிரட்டியுள்ளார். இவர் அந்த மாற்றுத்திறனாளியை தாக்கிய சிசிடி வீடியோவையும் போலீசார் வாங்கிக் கொண்டு சென்றுள்ளனர். தற்போது தாக்குதல் நடத்திய போலீசார் லிங்கசாமி மீது புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று குற்றம் சாட்டி உள்ளார். இது ரீதியாக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

போராடிய மக்களை மிரட்டிய எஸ்.பி! மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய எடப்பாடியார்!

தமிழ்நாட்டில் தற்போது நாளுக்கு நாள் வன்முறை பெருகி வருகிறது. காவல்துறை மற்றும் திமுக கட்சியை சேர்த்த நபர்கள் செய்யும் தில்லுமுல்லு விஷயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தனை நாட்களாக முடி மறைக்கப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக நடந்த விஷயங்கள் எல்லாம் தற்போது வெட்ட வெளிச்சமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அஜித்குமார் லாக் அப் மரணத்தில் தமிழக அரசு மீதும், காவல் துறை மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அந்த பிரச்சனையே இன்னும் முடியாத நேரத்தில் அடுத்த பிரச்சனை தற்போது ஆரம்பித்துள்ளது. அதாவது விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தின் போது 8 பேர் பலியான நிலையில் அவர்களுக்கு நிவாரணம் கேட்பதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அந்த போராட்டத்தை கலைக்க முயற்சி செய்த எஸ்.பி. ஒழுங்கா இருக்கணும், இல்லைனா வேற மாதிரி ஆகிடும் என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதுபற்றி அறிந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காவல்துறை மற்றும் தமிழக அரசை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வேற மாதிரி ஆகிடும்னா எப்படி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் ஸ்டாலின் அரசின் குரல்கள் உயர்கின்றதா? சட்டத்தை மீறி செயல்படும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்த ஸ்டாலின் மாடல் அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கண்டித்துள்ளார் எடப்பாடிபழனிசாமி.

ஏழு நாள் ஓய்வு உனக்கு பத்தலையா? பும்ராவை வறுத்தெடுக்கும் முன்னாள் ஜாம்பவான்கள்!

0

இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை விளையாடி வருகிறது. ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி போன்ற முன்னணி வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் இந்த தொடரில் இந்தியா மீதிருந்த எதிர்பார்ப்பு ரசிகளிர்களிடையே இல்லாமல் போய்விட்டது.

அதற்கு ஏற்றார் போல் முதல் டெஸ்ட் போட்டியில் கையில் இருந்த ஆட்டத்தை இங்கிலாந்துக்கு தாரை வார்த்ததை போல இந்திய அணி முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பும்ரா ஏற்கனவே தன்னால் இந்த தொடரில் மொத்தம் 3 டெஸ்ட் தான் விளையாட முடியும் என சொல்லி இருந்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அணித்தேர்வை கடுமையாக விமர்சித்துள்ளார். லார்ட்ஸில் நடக்கும் போட்டிக்காக பும்ராவுக்கு ஓய்வு கொடுத்துள்ளீர்கள். பும்ரா போன்ற முன்னணி வீரர் இல்லாத நேரத்தில் குல்தீப் யாதவ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரரை எடுக்காமல் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. இந்திய கிரிக்கெட் கமிட்டியின் இந்த தேர்வு எனக்கு குழப்பமாக உள்ளது என்று பேட்டி கொடுத்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

அதேபோல முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் இந்திய இங்கிலாந்தை விட பின் தங்கிய நிலையில் இருக்கிறது. முதல் டெஸ்டுக்கும், இரண்டாவது டெஸ்டுக்கும் 7 நாட்கள் இடைவெளி உள்ளது. இந்த 7 நாள் ஓய்வு உங்களுக்கு பத்தலையா பும்ரா என்று காட்டமாக விமர்சித்துள்ளார் ரவி சாஸ்திரி.

அஜித் லாக்கப் மரணம்.. நீயெல்லாம் முதல்வராக இருக்க தகுதி இல்லை-ஆ ராசா சரமாரி கேள்வி!!

0

DMK: தமிழ்நாட்டில் அஜித் குமாரின் லாக்கப் மரணம் குறித்த பேச்சுதான் பரபரப்பாக உள்ளது. நடந்த அசாம்பாவித்திற்கு பொறுப்பேற்காமல் உயிர் போனதுக்கு Sorry என்று சொல்லி முடித்துவிட்டனர். இதே போல அதிமுக ஆட்சி காலத்தில் சாத்தான்குளம்  லாக்கப் மரணம் நடந்த போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவை சேர்ந்த ஆ ராசா ஆளும் கட்சியை நோக்கி பல கேள்விகளை முன் வைத்தார். நல்ல முதலமைச்சர் என்றால் லாக்கப் மரணத்திற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

காவல்துறையை தங்களது கட்டுப்பாட்டில் கூட வைக்க முடியவில்லை, சர்வ சாதாரணமாக பதில் அளித்தால் எப்படி?? நீங்கள் முதலமைச்சராக இருப்பதற்கு தகுதியே இல்லை என்று சரமாரியாக பேசியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. தற்போது திமுக ஆட்சி செய்து வரும் நிலையில் காவலாளி அஜித்குமாரின் லாக்கப் மரணமானது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் தற்போது மட்டும் காவல்துறை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை?? உங்களது தலைவர் முதலமைச்சராக இருக்க தகுதி இல்லையா?? என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆ ராசா அப்போது எதிர்க்கட்சியாக இருந்து வைத்த கேள்விகள் அனைத்தும் அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளது. நேரமிருந்தால் ஆ ராசா கேட்கும் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லட்டும் என கூறி வருகின்றனர்.

அஜித் லாக்கப் மரணம்.. காணமல் போன ஜெய்பீம் சூர்யா!! DMK வை சப்போர்ட் செய்யும் டாப் நடிகர்கள்!!

0
Lockup Death Ajith: சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் கோவில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் மரண வழக்கானது தற்போது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் உருவாகியுள்ளது. முதலில் 10 சவரன் நகை திருட்டுக்காக அஜித்குமாரை கைது செய்து விசாரணை செய்ததாக கூறினர். தற்போது அப்படி ஒரு புகார் ஏதும் இல்லை, வெறும் 500 ரூபாய் பேரம் பேசியதற்காக அவரை இந்த பொய் புகாரியின் மூலம் கைது செய்துள்ளனர்.

மேற்கொண்டு அவரை கோவில் பின்புறம் அழைத்து வந்து சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் கொடூரமான விஷயம் என்னவென்றால் அந்தரங்க உறுப்பு என பல இடங்களில் மிளகாய் பொடி தூவி உள்ளதாகவும் கூறுகின்றனர். அதிலும் அஜித்குமார் மீது புகார் தந்த நிகிதா என்ற பெண் தற்போது தலைமறைவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க இதே போல் அதிமுக ஆட்சி காலத்தில் கடைசி ஆண்டில் சாத்தான்குளத்தில் அப்பா மகன் லாக்கப் மரணம் நடைபெற்றது.

இதே போல தமிழ்நாட்டின் பெரும்பான்மையான கட்சிகள் எடப்பாடிக்கு எதிராக குரல் ஓங்கினர். அதிலும் சினிமா துறையிலிருந்து சூர்யா, சித்தார்த், பிரகாஷ்ராஜ் இன்னும் பல நடிகைகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திமுக ஆட்சியில் தற்போதும் அதே போல் ஒரு சம்பவம் நடந்திருக்கும் நிலையில் சூர்யா வாய் திறக்கவில்லை. அவர் நடித்த ஜெய் பீம் இதே போல கதையை தழுவி தான் இருக்கும். தற்போது இந்த நடிகர்கலெல்லாம் வாய் திறக்காததால் சினிமா துறை முழுவதும் திமுக கட்டுப்பாட்டில் உள்ளதா இவர்களெல்லாம் எங்கே போனார்கள் என்று கேள்வியை பலரும் முன் வைத்து வருகிறார்கள்.

நடுநிலைவாதிகளாக இருந்திருந்தால் தற்போதும் ஆதரவு தெரிவித்திருப்பார்கள். ஆனால் இவர்களின் இரட்டை வேடமானது இந்த அசம்பாவிதத்தின் மூலம் அம்பலமானதுடன் யாருக்கு எங்களது சப்போர்ட் என்பதையும் இதன் மூலமே வெளி கான்பித்துள்ளனர்.

பெண் குழந்தையை கர்ப்பம் தரிக்கும் பெண்ணுக்கு வயிறு பெரிதாக இருக்குமா..!!

0

பெண்குழந்தையை கர்ப்பத்தில் தாங்கும் பெண்ணுக்கு வயிறு பெரிதாக இருக்கும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். குழந்தை பிறந்தபின் அது பெண் தான் என்று அறியும் போது பெரியவர்கள் கூறியது சரி என்று தெரியவரும்.

இன்று கருத்தரித்து சில மாதங்களுக்குள் ‘ஸ்கேன்’ செய்து என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், பண்டைக் காலத்தில் இதுபோன்ற நவீன கருவிகள் எதுவும் இல்லை.

குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிவதற்கு எல்லோருக்கும் ஆசை தான். இதனால் பலருக்கும் மகிழ்ச்சியும் உண்டாகும் என நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனால், என்ன குழந்தை என்று கண்டறிவதனால் சில வட்டாரங்களில் இருந்து தீங்கு விளைவிப்பதாக செய்திகள் கேட்கின்றோம். வளரும் சிசு பெண்ணாக இருந்தால் கருச்சிதைவு செய்து கொண்ட பல பெண்களை கதைகளிலும் செய்திகளிலும் நாம் காண்கின்றோம்.

பெண் குழந்தையை கருத்தரிக்கும் பெண்ணின் வயிறு பெரிதாக இருக்க காரணம் உண்டு. கர்ப்பம் தரிப்பதில் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் பெரிதாக காணப்படுவதில்லை. ஆனால், ஆண் குழந்தையை சூழ்ந்திருக்கும் திரவங்களை விட பெண் குழந்தையை சூழ்ந்திருக்கும் திரவங்கள் சற்று கூடுதலாக இருக்கும். இதனால் பெண் குழந்தையை கருத்தரித்த பெண்ணின் வயிறு பெரிதாக இருக்கும்.

பெண்கள் ஏன் காலுக்கு மேல் கால் வைத்து அமரக்கூடாது?

0

பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகளை மனு மகரிஷி முதல் வைகுண்ட சுவாமி வரை பலரும் போதித்துள்ளனர். இவற்றை இன்றைய பெண்ணுரிமை வாதிகள் அங்கீகரிப்பது மிக அபூர்வம்.

ஆனால் முன்னோர்கள் விதித்திருந்த ஆசாரங்களை பெண்கள் கடைபிடிக்க தயாரானால் அது குடும்பத்துக்கும், நாட்டுக்கும் அதன் விளைவாக பிரபஞ்சத்துக்கும் நன்மை உண்டாகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பெண்கள் காலுக்கு மேல் கால் வைத்து அமரக்கூடாது என்று பழைய தலைமுறை எப்போதும் ஞாபகப்படுத்துவது உண்டு. அது அகங்காரத்தின் அறிகுறி என்று அவர்கள் கூறியிருந்தனர். ஆனால் நவீன யுகத்தில் பல பெண்களும் ஆண்களுக்கு சமமாக நினைப்பது இதுபோன்ற சில விஷயங்களில் மட்டுமே என்பதை காணலாம். கால் தாழ்த்தி வைத்திருப்பதாலோ, ஆண்களையோ, முதியோர்களையோ கண்டால் எழுந்து மரியாதை செலுத்துவதையோ பெண்கள் ஒரு குறைபாடாக கருதி வருகின்றனர்.

ஆனால் பெண்கள் எப்போதும் கால் மேல் கால் வைத்து அமரும் வழக்கம் இருந்தால் அது தீமை விளைவிக்கும் என்பது மருத்துவத்துறை கூறுகிறது. அப்படி செய்வது திருமணமனமானவர்களுக்கும் கன்னிப் பெண்களுக்கும் தீங்கானது.

கால் மேல் கால் வைத்து அமரும் பழக்கம் இருந்தால் பெண்களுக்கு காலப்போக்கில் கர்ப்பப்பை சேதமடைய வாய்ப்பு உண்டு என்பதை முன்னோர்கள் புரிந்து கொண்டுதான் இந்த போதனையை விட்டுச் சென்றனர் போலும்.