Home Blog Page 277

பழனிச்சாமி போட்ட கணக்கு!. டிடிவி தினகரன் மீதான வழக்கு வாபஸ்!.. காரணம் இதுதானா?!..

0

எல்லோரும் எதிர்பார்த்தபடி பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது அதிமுக. செய்தியாளர்களிடம் பேசிய அமித்ச்ஷா ‘ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் கூட்டணியை ஏற்பது அதிமுகவின் முடிவு. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். அதிமுகவின் தனிப்பட்ட விஷயங்களில் பாஜக தலையிடாது. தேர்தல் விவகாரங்களில் மட்டுமே பங்கேற்போம். யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என கூறியிருந்தார்.

ஒருபக்கம், இந்த கூட்டணி இணைய அதிமுக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என அமித்ஷா சொன்னதில் உண்மையில்லை என்கிறார்கள் சிலர். ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க மாட்டேன். இது உங்களுக்கு சம்மதம் எனில் கூட்டணி’ என அமித்ஷாவிடம் பழனிச்சாமி உறுதியாக சொல்லிவிட்டாராம். இதை அமித்ஷாவும் ஏற்றுக்கொண்டார். அதனால்தான் செய்தியாளர்களிடம் ‘அது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை’ என சொல்லி அமித்ஷா கடந்துபோய் விட்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

eps

அதேநேரம், இந்த கூட்டணி அறிவிப்புக்கு முன்வரை செங்கோட்டையன் மூலம் பழனிச்சாமி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகிய எல்லோரையும் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவாக மாற்றி அதோடு கூட்டணி அமைக்கும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டிருந்தார் எனவும், பழனிச்சாமி கறாராக இருந்ததால் அது கடைசி நடக்கவில்லை எனவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில்தான், அதிமுகவின் பெயர், கொடி போன்றவற்றை டிடிவி தினகரன் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை எடப்பாடி பழனிச்சாமி வாபஸ் பெற்றிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த நடவடிக்கையை பார்க்கும்போது அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ops

பாஜகவுடன் கூட்டணியே இல்லை என சொல்லி வந்த பழனிச்சாமி இப்போது யுடர்ன் அடித்து வருகிறார். டிடிவி தினகரன் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவும் இருக்கும். இதனால்தான் இப்போது வழக்கை வாபஸ் வாங்கியிருக்கிறார் பழனிச்சாமி. அதேநேரம், ஓபிஎஸ் தனியாக கட்சியெல்லாம் துவங்கவில்லை. எனவே, அவரை கூட்டணிக்குள் கொண்டுவர பழனிச்சாமி சம்மதிக்க மாட்டார் என்கிறது அரசியல் வட்டாரம். அதனால்தான், சென்னை வந்தபோது தன்னை ஓபிஎஸ் தன்னை பலமுறை பார்க்க முயன்றும் அமித்ஷா அனுமதிக்கவில்லை என சொல்லப்படுகிறது

சற்று முன்: EPS- யை முதல்வராக்க எல்லாம் பாடு பட முடியாது!! அதிமுக விலிருந்து கூட்டணி கட்சி விலகல்!!

0

ADMK : அதிமுக பாஜக மீண்டும் இணைந்த நிலையில் கட்சிக்குள் பணி போரானது ஆரம்பித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருப்போம் ஆனால் கூட்டணி ஆட்சி நடக்காது என்பதை தெரிவித்தது தான். இப்படி அவர்கள் கூறியதால் புதிய தமிழக கட்சியானது அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி வைத்தது குறித்து செய்தியாளர்கள் கூட்டணி ஆட்சி அமைக்குமா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி அரசு இன்று எதுவும் அமித்ஷா கூறவில்லை. கூட்டணி மூலம் ஆளும் கட்சியை இருந்திருப்போம் ஆனால் கூட்டணி ஆட்சி கிடையாது. டெல்லிக்கு பிரதமர் மோடியின் தமிழ்நாட்டிற்கு என் பெயரை தான் கூறினார் என்று தெரிவித்தார். இதனையடுத்து கொள்கை பரப்பு செயலாளர் தம்பி துரையும் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது சரியான ஒன்று. கூட்டணி முறையில் தேர்தலை எதிர்கொள்ளலாம் ஆனால் கூட்டணி ஆட்சி கிடையாது.

மேலும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணி வெற்றி பெற்றாலும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார். இதனை முழுமையாக எதிர்த்து புதிய தமிழகம் கூட்டணியை முறித்துக் கொண்டது. இது ரீதியாக அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில், யாரோ ஒருவரை முதல்வராக்க நாங்கள் ஏன் பாடுபட வேண்டும். கூட்டணி ஆட்சியை தான் எதிர்பார்க்கிறோம். கூட்டணி பங்கு என்பது கட்டாயம் வேண்டும். இப்படி இருக்கும் சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் கூட அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக கூறுவது ஏற்புடையதல்ல. அதனால், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

குட் பேட் அக்லி விவகாரம்!. இளையராஜா சம்பளத்தை திருப்பி கொடுக்கணும்!.. பொங்கும் நடிகர்!..

0

அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. குறுகிய காலகட்டத்தில் மிகவும் அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர் இவர். தமிழகத்தில் ஹிந்தி பாடல்களின் தாக்கம் அதிகமாக இருந்த காலத்தில் அதை மாற்றி தமிழ் பாடல்களை கேட்க வைத்தவர் இவர். 70,80களில் பிறந்தவர்கள் இப்போதும் இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.

ஒருபக்கம், அவரின் பாடல்களை திரைப்படங்களிலும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அப்படி பயன்படுத்தப்படும்போது தன்னுடைய அனுமதி வாங்க வேண்டும். இல்லையேல் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார் இளையராஜா. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி பாடல் பயன்படுத்தப்பட்டதற்கும் ராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தற்போது குட் பேட் அக்லி பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

இந்த படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல், ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ போன்ற பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், படத்தில் தன்னுடைய பாடல்களை பயனடுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும், 7 நாட்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

good bad ugly
good bad ugly

ஆனால், இளையராஜாவின் நோட்டீஸுக்கு விளக்கமளித்துள்ள குட் பேட் அக்லி பட நிறுவனம் ‘காப்புரிமை வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவங்களிடம் அனுமதி வாங்கியே குட் பேட் அக்லி படத்தில் பாடல்களை பயன்படுத்தி இருக்கிறோம். முறையாக என்.ஓ.சி வாங்கியிருக்கிறோம்’ என விளக்களித்துள்ளனர்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் ‘என்னட்ட இன்னும் ஆரம்பிக்கலையேன்னு பார்த்தேன். பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களிடம்தான் இருக்கிறது. இளையராஜா சம்பளம் வாங்கி கொண்டுதான் படத்திற்கு இசையமைத்தார். இப்போது காப்புரிமை கேட்கிறார் எனில் அவர் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுக்க வேண்டும்’ என கருத்து கூறியிருக்கிறார்.

முடிவுக்கு வரப்போகும் ADMK BJP-கூட்டணி!! இதெல்லாம் செட்டே ஆகாது.. அதிமுக தலைமை திட்டவட்டம்!!

0

ADMK BJP: அதிமுக பாஜக கட்சிகளிடையே மீண்டும் விரிசல் உருவாக ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் தமிழகத்திற்கு அமித்ஷா வருகை புரிந்த போது அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார். இந்த கூட்டணிக்காக அண்ணாமலையையே பதவியில் இருந்து விலகுமாறு கூறினர். இதற்கு பதிலாக நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அமைச்சர் கூட்டணி உறுதி செய்த போது மத்தியில் ஆளுவதற்கு மோடியும் மாநிலத்தில் எடப்பாடி எனக் கூறியிருந்தார்.

மேற்கொண்டு இவர்கள் கூட்டணி முறிந்து மீண்டும் இணைந்து தான் கூட்டணி ஆட்சி தான் இவர்களின் அக்ரீமெண்ட் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதனை முழுமையாக மறுத்து வருகிறார். மற்ற கட்சிகளைப் போல நாங்களும் கூட்டணி வைத்துக் கொண்டுமே தவிர இரண்டு கட்சியும் சேர்ந்து ஆட்சி செய்யப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதேபோல நாங்கள் மீண்டும் கூட்டணி வைத்தது ரீதியாக ஆளும் கட்சி உள்ளிட்டோருக்கு பயம் வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இப்படி கூட்டணி ஆட்சி இல்லை என்று எடப்பாடி கூறிய நிலையில் இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில், அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் முடிவை எடுத்தது தலைமைதான். அதனால் கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பதை அவர்களே பேசி முடிவெடுப்பார்கள் என்று சூசகமாக கூறி பின் வாங்கிக் கொண்டார். அதுமட்டுமின்றி நான் தென்றல் மாதிரி அண்ணாமலை புயல் மாதிரி என்று ஒப்பிட்டும் பேசினார்.

அதில் இவர் மறைமுகமாக கூற வருவது என்னவென்றால், ஆனா அண்ணாமலை போல் கூட்டணி கட்சி குறித்து பேச மாட்டேன் என்பதுதான். இப்படி இரு கட்சிகளும் இணைந்து நிலையில் முன்னுக்கு பின்னாக கூட்டணி ஆட்சி அமைக்க மாட்டோம் என்று அதிமுக தடாலடி காட்டுவது மீண்டும் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் முஸ்லீம் விரோதியா?!.. ஜமாத் சொல்வது சரியா?.. பின்னணியில் யார்?…

0

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, அவரை பனையூர் பண்ணையார் எனவும், வொர்க் பிரம் ஹோம் பாலிட்டிக்ஸ் எனவும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விஜய் எதற்கும் விளக்கம் அளிப்பததில்லை. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ரமலான் நோன்பு கொடுக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டார்.

அதில் இஸ்லாம் இயக்கத்தை சேர்ந்த சிலரும் கலந்துகொண்டனர். அந்த விழாவில் நிறைய குளறுபடிகள் நடந்தது. டோக்கன் வைத்திருந்த பலரையும் உள்ளேவிடவில்லை. அதேநேரம், மது அருந்திவிட்டு சில விஜய் ரசிகர்கள் உள்ளே புகுந்தனர் என புகார்கள் எழுந்தது. இந்நிலையில்தான், விஜய் ஒரு முஸ்லீம் விரோதி என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் ஷஹாபுதீன் ரஸ்வி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் தனது படங்களில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டியவர். அவர் ஒரு முஸ்லீம் விரோதி. அவரை நம்ப வேண்டாம். இஸ்லாம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்க வேண்டாம். அவர் ஒரு சைத்தான். முஸ்லீம்களை வாக்குகளை பெறுவதற்காக அவர் நாடகம் போடுகிறர்’ என பேசியிருக்கிறார். மேலும், சென்னையில் நடந்த இப்தார் விருந்தில் குடிகாரார்கள், சூதாட்டக்காரார்களை வரவழைத்து இப்தார் விருந்தையே கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டார்’ என பேசியிருக்கிறார்.

இப்தார் விருந்து நடந்து பல நாட்கள் ஆகிவிட்டது. இத்தனை நாட்கள் கழித்து இப்போது ஏன் அவர் இப்படி கருத்து தெரிவித்திருக்கிறார் என தெரியவில்லை. இதன் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.

கூட்டணி மட்டும்தான்.. கூட்டணி ஆட்சி இல்லை!. தம்பிதுரை பரபரப்பு பேட்டி!…

0

2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார்.

அதாவது, இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என அமித்ஷா சொல்லவிலை. அதாவது கூட்டணி அரசு என்பது போல அவர் பேசியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமையும். வெற்றிக்கு பிறகு மற்றவை பேசி முடிவு செய்யப்படும் என சொல்லியிருக்கிறார். இதிலிருந்து அமித்ஷா மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம் என அரசியல் விமர்சகர்கள் பேசினார்கள்.

ஆனால், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘கூட்டணி ஆட்சி மட்டும்தான். கூட்டணி அரசு என அமித்ஷா சொல்லவில்லை. அதுதான் எங்கள் நிலைப்பாடும். டெல்லியில் பிரதமர் மோடி தலமையிலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் என அமித்ஷா தெளிவாக சொல்லியிருக்கிறார். நீங்களாக எதையும் கற்பனை செய்யகூடாது’ என விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது நான்தான் முதல்வர்.. பாஜக சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் இருக்காது என்பதைத்தான் மறைமுகமாக பழனிச்சாமி சொல்லியிருக்கிறார்.

தற்போது அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாலரும், அதிமுக எம்.பியுமான தம்பிதுரையும் இந்த கருத்தை உறுதி செய்திருக்கிறார். செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது ‘கட்சியின் பொதுச்செயலாளர் பழனிச்சாமி சரியாக சொல்லி இருக்கிறார். சுதந்திரத்திற்கு பின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது அமைந்ததே இல்லை. பாஜக கூட்டணி மட்டும்தான். ஆட்சியில் அவர்களுக்கு பங்கு கொடுக்க முடியாது’ என சொல்லியிருக்கிறார். கூட்டணி ஆட்சி இல்லை என பழனிச்சாமி பற்றவைத்த நெருப்பு இன்னும் பல நாட்கள் எரியும் என எதிர்பார்க்கப்படுகிற்து.

பெற்ற மகனிடமே NOC கேட்கும் இளையராஜா!! நீங்க எல்லாம் எங்க!!

0

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பு பெற்று இருக்க கூடிய திரைப்படமாக குட் பேட் அக்லி திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் உடைய பாடல்கள் அவருடைய அனுமதி இன்றி போடப்பட்டிருப்பதாக அதற்கு இழப்பீடு தர வேண்டும் என இளையராஜா தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தன்னுடைய பாடலை யார் பயன்படுத்தினாலும் அதற்கு ராயல்டி கேட்பதை வழக்கமாக வைத்திருக்கக் கூடிய இளையராஜா தற்போது மைத்திரி மூவிஸ் தயாரிப்பில் வெளியாகியிருக்கக்கூடிய இந்தத் திரைப்படத்திலும் தன்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதால் ராயல் டி கேட்டிருக்கிறார். அதோடு மட்டுமல்லாது தனக்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கைப்பட மன்னிப்பு கடிதம் அதுவும் 7 நாட்களுக்குள் எந்த நிபந்தனையும் இல்லாமல் எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும் படத்தில் இருந்து தன்னுடைய இரண்டு பாடல்களான ஒத்த ரூபாயும் தாரன் போன்ற பாடல்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தெரிவித்த நிலையில் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பை பெற்று வருகிறார். மறுபடியும் இளையராஜாவின் ரசிகர்கள் அவர் கேட்பதில் என்ன தவறு என்பது போல அவருக்கு ஆதரவையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜாவின் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இருக்கக்கூடியதாவது :-

வை ராஜா வை என்ற திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இவன் சங்கர் ராஜா திரைப்படத்தில் இசையமைத்திருக்கிறார். அப்பொழுது அந்த படத்திற்கு அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்ற பாடலை வைக்கலாம் என யோசித்த பொழுது யுவன் சங்கர் ராஜா அவர்கள் தன்னுடைய தந்தையிடம் NOC பெறுவதற்காக சென்று கேட்டிருக்கிறார். ஆனால் இளையராஜாவோ இந்த பாடல் ஏற்கனவே இப்பொழுது காலகட்டத்திற்கு ஆனால் இளையராஜாவோ இந்த பாடல் ஏற்கனவே இப்பொழுது காலகட்டத்திற்கு ஏற்றார் போல் மாற்றப்பட்டுள்ளது இதில் நீ மாற்றி என்ன இருக்கிறது என கேள்வி கேட்டாராம். தந்தையாக இருந்தால் கூட அவருடைய பாடலை பயன்படுத்த வேண்டும் என்றால் அவரிடம் நாக் பெற வேண்டும் என யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருக்க கூடிய வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

ரூ.7500 ஆக உயர்த்தப்பட்ட உதவித்தொகை!! தமிழக அரசு சட்டப்பேரவையில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0

தமிழக சட்டப்பேரவையில் தற்பொழுது மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. இந்த கூட்டத்தொடரில் தினந்தோறும் துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை தொடர்பான கலந்துரையாடலின் பொழுது தமிழ் மொழி தாய்நாடு என பற்று கொண்ட தமிழறிஞர்களுக்கு ஒவ்வொரு திங்கள் தோறும் வழங்கப்படக்கூடிய உதவித்தொகை இணை உயர்த்தி கொடுக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி,

✓ தமிழ் அறிஞர்கள் – 4500 ரூபாயிலிருந்து 7500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

✓ அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் – 3,500 லிருந்து 7500 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது

✓ எல்லைக் காவலர்கள் – 5500 இல் இருந்து 7500 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதற்காக தமிழக அரசு தரப்பில் இருந்து தொடர் செலவினமாக 3,90,60,000 ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தமிழுக்காக தொண்டாற்ற கூடிய அகவை முன் இருந்த தமிழறிஞர்களை ஒவ்வொரு ஆண்டு 100 வீதம் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி 150 என அகவை உதிர்ந்த தமிழறிஞர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமென அவர்களுடைய எண்ணிக்கையை தமிழக அரசு உயர்த்தி இருக்கிறது. இதற்காக 48 லட்சம் கூடுதலாக ஒதுக்கப்பட்ட இருப்பதாகவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மறைமுகமாக நடந்த விஜய் டிவி பிரியங்காவின் திருமணம்!! யாரெல்லாம் இருந்தாங்க தெரியுமா!!

0

பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுதியாக பணியாற்றி வரக்கூடிய பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை கண்ட தங்களுடைய கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

பிரியங்காவின் முதல் திருமணம் 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவர் உடன் நிகழ்ந்தது. ஆனால் இந்த உறவு நீடிக்காமல் 2022 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையில் விவாகரத்து ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். பிரவீன் குமாரும் விஜய் டிவியில் வேலை பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் பிரிந்த நிலையில் தற்போது பிரியங்கா 2 ஆவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த திருமணம் மிகவும் எளிமையாகவே நடத்தப்பட்டிருக்கிறது. காரணம் இத்திருவனத்தில் பிரியங்காவின் குடும்பத்தினர் நெருங்கிய நண்பர்கள் மற்றும் மாப்பிள்ளை வசிய என்னுடைய குடும்பத்தினர் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மணமேடையில் மாப்பிள்ளை வசி அவர்கள் பிரியங்காவிற்கு தாலி கட்டிய பொழுது மிகவும் எமோஷனலான பிரியங்கா கண்ணீர் சிந்திய படி பார்க்க பிரியங்காவை ஆறுதல் படுத்த வசி அவர்கள் பிரியங்காவின் நெற்றியில் முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை பரிமாறி இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

தெரிந்து கொள்ளுங்கள்! இத்தனை நாளுக்கு மேல் பிரிட்ஜில் உணவு வைத்தால் கொடிய விஷமாகிவிடும்!!

0

இந்த காலத்தில் பிரிட்ஜ் இல்லாத வீட்டை பார்ப்பது அரிதாக உள்ளது.உணவு பதப்படுத்தி வைக்க,காய்கறிகளை பிரஸாக வைத்துக் கொள்ள பிரிட்ஜ் பயன்படுகிறது.இருப்பினும் உணவு வைத்து பயன்படுத்துவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

நாம் பிரிட்ஜில் சேமிக்கும் ஒவ்வொரு உணவிற்கும் கால வரைமுறை இருக்கிறது.காய்கறிகளை அதிகபட்சம் 4 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.பழங்களை அதிகபட்சம் 4 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.அசைவ உணவுகளான ஆட்டிறைச்சி,கோழி,மீன் போன்றவற்றை ப்ரீசரில் மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

சமைக்கப்பட்ட உணவுகளை அதிகபட்சம் 2 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.குழம்பு,சட்னி,சாதம் போன்ற உணவுகளை அதிகபட்சம் 2 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.வெட்டி வைக்கப்பட்ட காய்கறிகளை 2 நாட்கள் காரை வைத்து பயன்படுத்தலாம்.அரிசி மாவு,சப்பாத்தி மாவு போன்றவற்றை இரண்டு நாட்கள் வரை வைக்கலாம்.

நறுக்கிய பழங்களில் தர்பூசணியை 5 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.நறுக்கிய எலுமிச்சம் பழத்தை 8 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.இஞ்சி பூண்டு விழுதை ஒரு வாரம் வைத்து பயன்படுத்தலாம்.

தேங்காய் பாலை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம்.அதேபோல் வெள்ளை சாதத்தை ஒரு நாள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.வெங்காயத்தை பிரிட்ஜில் வைக்க கூடாது.உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது.அழுகிய பழங்கள்,காய்கறிகள் இருந்தால் தூக்கி ஏறிய வேண்டும்.

தக்காளி பழத்தை அதிகபட்சம் ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம்.முட்டைகோஸ்,காளான் போன்ற பொருட்களை மூன்று நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.