Home Blog Page 291

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண் பெண் தங்கள் 30+ வயதில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

0

நாம் இளம் வயதில் பின்பற்றும் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை பழக்கங்கள்தான் நமக்கு வயதான பிறகுதான் அதன் விளைவுகளை காண்பிக்கும்.ஆரோக்கிய உணவுமுறையை பின்பற்றினால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும்.முதுமையை சில ஆண்டுகளுக்கு தள்ளிப்போடலாம்.ஆனால் இளமையில் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிட்டால் வயதாகும் பொழுது பல்வேறு பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.

30 வயதை கடந்தவர்கள் தங்கள் உணவுமுறையில் அதிகளவு அக்கறை செலுத்த வேண்டும்.30 வயதிற்கு பிறகு உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.கடந்த காலங்களில் 50 வயதை கடந்த பின்னரே முதுமை எட்டி பார்த்தது.ஆனால் இன்றைய உலகில் 30 வயதிற்குள்ளேயே முகச்சுருக்கம்,முழங்கால் வலி,தலை வழுக்கைக்கு போன்ற முதுமை கால பாதிப்பை சந்திக்கின்றனர்.

எனவே 30 வயதை கடந்தவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.எலும்பு வலிமையை அதிகரிக்க கால்சியம் உணவுகளை சாப்பிட வேண்டும்.பால்,சோயா போன்றவற்றில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.

முருங்கை,பேரிச்சை போன்ற பழங்களில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது.முட்டை,அசைவத்தில் புரதம் நிறைந்திருக்கிறது.வைட்டமின் டி சத்து சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீன்,பாதாம்,வால்நட்,அவகேடோ போன்றவற்றில் இருந்து பெறலாம்.

நார்ச்சத்து அனைத்து கீரைகளிலும் கிடைக்கும்.அதேபோல் நீர்ச்சத்து பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து கிடைக்கும்.அசைவ உணவுகளை அதிக எண்ணெய் சேர்க்காமல் சமைத்து சாப்பிடலாம்.மாவுச்சத்து உணவுகளை தவிர்ப்பது நல்லது.உலர் விதைகள்,உலர் பழங்களை தினமும் உட்கொள்ளலாம்.

ஆரோக்கிய உணவுகளுடன் உடற்பயிற்சி,யோகா,தியானம்,மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.இதுபோன்ற ஆரோக்கிய பழக்கங்கள் மூலம் உடல்,மனம்,சரும் ஆரோக்கியம் மேம்படும்.

ஏசி கேரவான்ல போறவர் இல்ல எங்க உதயநிதி!.. விஜயை வம்பிழுக்கும் சத்தியராஜ் மகள்!..

0

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகி விட்டாலும் விஜய் இன்னமும் தீவிர அரசியலில் இறங்க்கவில்லை. அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு சினிமா படப்பிடிப்பில் இடைவெளி கிடைக்கும்போது மக்களிடம் அரசியல் பேசி வருகிறார். கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இதுதான் அவரின் கடைசிப்படம். இந்த படம் முடிந்தபின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார்கள் என்கிறார்கள். இடையில் விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் பங்கேற்று திமுகவை திட்டி பேசினார். திமுக ஆட்சியை மன்னராட்சி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார் விஜய்.

விஜய் வொர்க் ஃபிரம் பாலிடிக்ஸ் செய்து வருகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து கமெண்ட் அடித்து வந்தார். விஜய் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கவில்லை என்கிற விமர்சனம் பரவலாக எல்லோராலும் வைக்கப்படுகிறது. சமீபத்தில் பாராளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய வக்பு மசோதாவுக்கு எதிராக இன்று தமிழகமெங்கும் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், விஜய் இதில் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் விஜய்க்கு அன்று ஷூட்டிங் எதுவுமில்லை. அவர் வீட்டில்தான் இருந்தார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

இந்நிலையில், சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துகொண்ட சத்ய்ராஜ மகள் திவ்யா விஜயை உதயநிதியோடு ஒப்பிட்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது ‘உதயநிதி சாரை பற்றி பேசுவது எனக்கு பெருமை. அவர் ஒன்றும் ஏசி கேரவானிலும், தோழியோடு விமானத்திலும் செல்லும் அரசியல்வாதி இல்லை. மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் மக்களுக்கு ஒரு பிரச்சனை எனில் உடனே இறங்கி வேலை செய்வார். பாஜக அரசிடமிருந்து தமிழகத்தை காக்க வந்த மாமன்னன் அவர். அவரை எதிர்த்து யார் எங்கு நின்றாலும் டெபாசிட் போய்விடும். அவர் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு ஹீரோ’ என புகழந்து தள்ளியிருக்கிறார்.

சைதை துரைசாமி ராமதாஸை சந்தித்தது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்

0

பாமக தலைவராக இனி நானே செயல்படுவேன் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக செயல்படுவார் என திடீரென மருத்துவர் ராமதாஸ் அறிவித்தது அக்கட்சியில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மருத்துவர் ராமதாஸ் சமாதானம் செய்ய முயற்சிக்கும் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல இரண்டு நாட்களாக அமைதி காத்த அன்புமணி ராமதாஸ் இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கட்சியின் தலைவராக தானே தொடர்வதாக தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவராக பொறுப்பேற்ற தன்னை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்துள்ளதையும் அவர் அதில் சுட்டி காட்டியுள்ளது கட்சியினர் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.மருத்துவர் ராமதாஸ் அறிவித்ததை தான் ஏற்கவில்லை என்பதையே இந்த அறிக்கையும் தெளிவுபடுத்தியது.

இந்நிலையில் இன்று காலை தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை அதிமுகவின் மூத்த நிர்வாகி சைதை துரைசாமி சந்திக்க வந்துள்ளது தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கூட்டணி விவகாரமா அல்லது உட்கட்சி விவகாரமா என்றெல்லாம் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்த சந்திப்பின் பின்னணி குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிய சைதை துரைசாமி குரூப் 1 தேர்வு வெற்றி பெற்ற மாணவி MBC பிரிவை சேர்ந்த வன்னியர் சமூக மாணவி என்பதால் அவர் தனக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் இதனையடுத்து அதற்கு அவருக்கு நன்றி தெரிவிக்க வந்ததாகவும் கூறினார்.மேலும் அவரிடம் அன்புமணி ராமதாஸ் விவகாரம் குறித்து கேட்டதற்கு இங்கு அரசியல் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அன்புமணிக்கு பதவிக்கு ஆப்பு வைத்த ஆதரவாளர்கள்! கலகமூட்டிய அந்த குரூப்

0

கடந்த சில மாதங்களாகவே பாமக உட்கட்சி விவகாரம் பொது வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்ட பிறகு அவர் ஏற்கனவே வகித்த வந்த இளைஞர் அணி தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் இந்த கருத்து வேறுபாடு வெளியே தெரிய ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் இப்பதவிக்கு கட்சியின் கௌரவ தலைவர் GK மணி அவர்களின் மகன் தமிழ்குமரனை நியமிக்கும் போதே அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மூலமாக எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து சமீபத்தில் இப்பதவிக்கு மருத்துவர் ராமதாஸ் அவர்களின் மகள் வழி பேரன் முகுந்தனை நியமித்த போதும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மூலமாக அதே எதிர்ப்பு கிளம்பியது.

இதில் அவரது ஆதரவாளர்கள் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக இருக்கும் போது அவரை மீறி கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் எப்படி இளைஞர் அணி தலைவரை நியமிக்க முடியும். கட்சி தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்படும் முன்பு வரை அப்பதவிக்கு பெயரளவில் மட்டுமே அதிகாரம் இருந்த நிலையில் பெரும்பாலான முடிவுகளை கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் தான் எடுத்து வந்தார்.

இந்நிலையில் திடீரென பாமக தலைவர் பதவிக்கு அதிகாரம் தரும் வகையில் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்க இது மருத்துவர் ராமதாஸ் அவர்களை கொதிப்படைய செய்துள்ளது. மேலும் நிர்வாகிகள் நியமனம் முதல் கூட்டணி விவகாரம் வரை என அனைத்திலும் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தரப்பு அவருக்கான அதிகாரத்தை காட்ட முயற்சிக்க இது மேலும் மருத்துவரை கோபம் கொள்ள வைத்துள்ளது.

இதன் உச்சகட்டமாகவே அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு தான் அளித்த பதவியை மாற்றி அவரே தலைவராகவும், அன்புமணி ராமதாஸ் செயல்தலைவராகவும் செயல்படுவார் என அறிவித்தார். இதன் பிறகு அன்புமணி ராமதாஸ் தரப்பு அமைதி காக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அண்புமணியின் ஆதரவாளர்கள் கட்சியின் சட்ட விதிகளை காட்டி அன்புமணி ராமதாஸ் தான் தலைவர் என்றும் அவரை நீக்க மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து இரு தினங்கள் அமைதிக்கு பிறகு நேற்று அறிக்கை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ் அவர்களும் தனது ஆதரவாளர்கள் கருத்தை உறுதி செய்யும் வகையில் பொதுக்குழு மற்றும் தேர்தல் ஆணையம் தன்னை கட்சியின் தலைவராக அங்கீகாரம் செய்துள்ள நிலையில் தானே தலைவராக தொடர்வேன் என அறிவித்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு குடும்ப பிரச்சனை, கூட்டணி மற்றும் கோஷ்டி அரசியல் என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் குறிப்பாக பாமக தலைவராக பொறுப்பேற்ற பிறகு அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மட்டுமே அனைத்து அதிகாரமும் இருக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் முயற்சித்ததே முக்கிய காரணமென கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.இதனால் தான் இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது என குமுறி வருகின்றனர்.

பாமகவினர் மாவீரன் என பெருமை கொள்ளும் மறைந்த காடுவெட்டி குரு உள்ளிட்ட எவ்வளவு பெரிய ஆளுமைகளாக இருந்தாலும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு என்பதே இருந்ததில்லை. ஆனால் அன்புமணி ராமதாஸ் தரப்பு நிர்வாகத்திற்கு வந்தது முதல் அவருக்கு எதிரான கருத்துக்கள் அவ்வப்போது எழுந்த நிலையில் இந்த விவகாரத்தில் அது தீவிரமடைந்துள்ளது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

100 கோடி வசூலை தாண்டிய குட் பேட் அக்லி!.. மீண்டும் இணையும் ஆதிக் – அஜித் கூட்டணி!…

0

Good bad ugly: விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக்.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களிலும் வந்த அஜித்தின் லுக்கை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். அதோடு, அஜித் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ, அவர்கள் அஜித்திடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது எல்லாமே படத்தில் இருக்கிறது. படத்தில் அழுத்தமான கதையோ, செண்டிமெண்டோ, லாஜிக்கோ இல்லை. ஆனால், ரசிகர்கள் ரசிக்கும்படி படம் எடுத்திருக்கிறார்கள். படம் முழுக்க ரசிகர்களை அஜித் என்கேஜாக வைத்திருக்கிறார்.

எனவே, அவருக்காகவே படம் பார்க்கலாம். படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் கூட சிறப்பாக இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். ஒன் மேன் ஆர்மியாக அஜித் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். முதல் நாளிலேயே இப்படம் 30.9 கோடி வசூலை அள்ளியது. மேலும், அஜித்தின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் அதிக வசூல் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் நாள் அதை விட இரண்டு மடங்களாக வசூல் செய்து மொத்த வசூல் 90 ஆடி ஆனது. இப்போது 3 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இப்படம் 118 கோடியை தாண்டி இப்படம் வசூலை பெற்றிருக்கிறது.

இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. எனவே, ஆதிக் இயக்கத்தில் அஜித் மீண்டும் ஒரு படத்தில் நடிப்பார் என பலராலும் சொல்லப்பட்டு வருகிறது.

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!.

0

மக்களை மிகவும் அசிங்கமாக விமர்சித்து திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்கிற விமர்சனம் பல வருடங்களாக திமுகவின் மீது இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதாவாக இருந்தால் இதுபோன்ற விஷயங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுப்பார். எனவே, அதிமுக அமைச்சர்கள் மிகவும் கவனமாக பேசுவார்கள். ஆனால், திமுகவில் அப்படி இல்லை. குறைந்த பட்சம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதவியை பறிப்பார்கள். அதிக எதிர்ப்பு வந்தால் சம்பிராதயத்திற்கு மன்னிப்பு அல்லது வருத்தம் மட்டும் தெரிவிப்பர்கள். இதுதான் திமுகவில் காலம் காலமாக இருக்கும் நடைமுறை.

சமீபத்தில் சைவம், வைணவம் என பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பொன்முடி. ஏற்கனவே, திமுக அரசு மகளிருக்கு இலவச பயணம் கொடுத்ததை ஓசி என பேசி எதிர்ப்பை பெற்றார். பட்டியலின பெண் ஊராட்சி ஒன்றிய தலைவரின் சாதி குறித்து கேட்டதாக இவர் மீது சர்ச்சை எழுந்தது. ஒருமுறை தொகுதிக்கு போன போது சில கோரிக்கைகள் பற்றி பெண்கள் அவரிடம் பேச ‘நீங்களாம் எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சீங்களா?’ என கடிந்துகொண்டார். இப்போது கடந்த 6ம் தேதி சைவம், வைணவம் என பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். எனவே, இவரிடமிருந்து துணை பொதுச்செயலாளர் பதவியை இப்போது ஸ்டாலின் பறித்திருக்கிறார்.

May be denied opportunity to contest 2026 Legislative Assembly elections!! A sensation due to the speech of the famous Arisial leader !!

துணை பொதுச்செயலாளர் பதவியை பறித்தால் மட்டும் போதுமா?.. அதிலென்ன பாதிப்பு இருக்கிறது. அவரின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும். குறைந்தது. ஒரு வருடத்திற்கு அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பத்திரிக்கையாளர் சொல்லி வருகிறார்கள். பொன்முடியின் பேச்சால் மக்களின் கோபம் திமுக மீது திரும்பியிருக்கிறது. பொன்முடிக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடையாமல் இருக்க அமைச்சர் பதவியில் இருந்து அவரை நிக்க வேண்டும் என அரசுக்கு உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவே ஜெயலலிதாவாக இருந்திருந்தால் அமைச்சர் பதவியை பறித்திருப்பார். ஆனால், திமுகவில் அது நடக்காது. ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ப்ளீஸ் எங்களை விட்டு போகாதீங்கண்ணா!.. அண்ணாமலையிடம் கதறி அழுத தொண்டர்கள்!…

0

2021ம் வருடம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். தமிழகத்தில் பாஜக என்கிற ஒரு கட்சி இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் இவர்தான். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை.

இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கினால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் சேர்கிறோம் என பழனிச்சாமி சொன்னதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில்தான் அண்ணாமலையிடமிருந்த பதவி இப்போது நயினார் நாகேந்திரனிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாஜக தலைவரை மாற்றுமாறு நாங்கள் சொல்லவில்லை என அதிமுக சொன்னாலும் அதில் உண்மையில்லை என்கிறார்கள். மாலை 4 மணி வரை காத்திருந்து இனிமேல் பாஜக தலைவர் அண்ணாமலை இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை பார்க்க ஐடிசி கிராண்ட் ஹோட்டலுக்கு வந்தார் என்கிறார்கள்.

annamalai

நேற்று தொண்டர்கள் முன் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், செருப்பு அணியாமல் இருந்த அண்ணாமலைக்கு புது செருப்பு கொடுத்து அணிந்துகொள்ள சொன்னார். அதன்பின் அங்கிருந்து அண்ணாமலை கிளம்பிய போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் ‘அண்ணா எங்களை விட்டு போகாதீங்க அண்ணா’ என அழுதபடியே அவரின் காரை மறித்துக்கொண்டனர். இதனால் சில நிமிடங்கள் அங்கிருந்து அவரால் செல்ல முடியவில்லை. அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இனிமேல் அண்ணாமலை டெல்லியில் அரசியல் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

மங்காத்தா கதை வெங்கட் பிரபுவோடது இல்ல!.. அட அவரே சொல்லிட்டாரே!…

0

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011ம் வருடம் வெளியான திரைப்படம்தான் மங்காத்தா. இந்த படத்தில் பிரேம்ஜி, திரிஷா, ராய் லட்சுமி, அர்ஜூன், வைபவ், மஹத், அஞ்சலி, ஆண்ட்ரியா என ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே நடித்திருந்தது. சாக்லேக் பாய் லுக்கில் நல்லவராக மட்டுமே திரைப்படங்களில் நடித்து வந்த அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்தார். அதிலும் பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு கெட்டவனின் வேடம்.

அஜித்தை இப்படிப்பார்த்த ரசிகர்களுக்கு அது மிகவும் பிடித்துப்போனது. அதோடு, யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. Fast Furious பட ஸ்டைல் ஒருவரிடமிருந்து பணத்தை எப்படி ஸ்கெட்ச் போட்டு ஆட்டையை போடுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. படம் சூப்பர் ஹிட் அடித்து அதிக வசூலை பெற்றது. இந்த படத்திற்கு பின்னர்தான் வேதாளம் போல நெகட்டிவ் சேட் உள்ள கதைகளில் நடிக்கும் தைரியம் அஜித்துக்கு வந்தது. இப்போது வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படம் கூட நெகட்டிவ் சேட் உள்ள கதைதான்.

இந்நிலையில். மங்காத்தா படத்தின் வெங்கட்பிரபுவுடையது இல்லை என ஒருவர் சொல்லி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல. வெங்கட்பிரபுவின் அப்பா கங்கை அமரன்தான். அந்த கதையை நான்தான் எழுதினேன். இந்த கதையை வெங்கட்பிரபுவிடம் கொடுத்து நீயே எடு. கதை உன்னுடது என போட்டுக்கொள் என்று சொல்லிவிட்டேன்.

இப்படி ஒரு கதை வெங்கட் பிரபுவிடம் இருப்பதை தெரிந்துகொண்டு அஜித் நடிக்க முன் வந்தார். இது நெகட்டிவ் சேட் இருக்கும் கதாபாத்திரம். உங்களுக்கு ஓகேவா என வெங்கட்பிரபு கேட்க ‘நோ பிராப்ளம்’ என அஜித் சொல்லிவிட்டார். அப்படித்தான் மங்காத்தா படம் உருவானது’ என சொல்லியிருக்கிறார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம்!!

0

முன்னாள் முதலமைச்சர் அதிமுகவில் நீண்ட காலம் பணியாற்றிய வருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அதிமுக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் தொண்டர்களோ பொதுமக்களோ பயப்பட வேண்டாம் என்றும் பன்னீர்செல்வம் அவர்களில் சாதாரண மருத்துவ சிகிச்சை தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பல ஆண்டுகளாக முதுகு வலியால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் பன்னீர்செல்வம் அவர்கள் கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கணபதி நகரில் உள்ள ஆர் கே நேச்சர் கியர் ஹோம் என்று மருத்துவமனையில் சேர்ந்து முதுகுவலிக்கான சிகிச்சை ஒவ்வொரு வருடமும் பெற்று வருவதாகவும், அதேபோல தான் இந்த வருடமும் முதுகுவலி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கக்கூடிய இந்த தருணத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அவரை சந்தித்து கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் இணைவார் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இவர் மருத்துவமனையில் சென்று சேர்ந்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2022 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து முழுவதுமாக வெளியேற்றப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பொறுப்பில் அதிமுக சரணடைந்தது. அதனைத் தொடர்ந்து அதிமுகவில் பன்னீர்செல்வம் இணைவதற்கான பல முயற்சிகளை செய்தும் எடப்பாடி முழுவதுமாக மறுக்கவே 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி மூலமாக ஆவது அதிமுகவில் சேர்ந்து கொள்ளலாம் என பன்னீர்செல்வம் நினைத்திருந்த நிலையில் ஏன் திடீரென மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்காமல் மருத்துவமனையில் சேர்ந்தார் என பலரும் தங்களுடைய கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

வேறு வழி இன்றி விஜயின் படத்தை இயக்கிய அவரின் தந்தை!! எஸ் எ சி கூறும் படம் இதுவா!!

0

தமிழ் சினிமா துறையில் உச்ச நடிகராகவும் தற்பொழுது மிகத் தீவிரமாக அரசுகளில் இறங்கி இருக்கக்கூடிய அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருபவர் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் முதல் திரை அனுபவம் குறித்தும் அவரை திரையில் அறிமுகப்படுத்துவதற்காக எஸ் எ சி பட்ட கஷ்டங்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

எஸ் எ சந்திரசேகர் பேட்டியில் கூறி இருப்பதாவது :-

தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகன் என்பதாலோ அல்லது மிகப் பெரிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் மகன் என்பதாலோ மிக எளிதாக சினிமா வாழ்க்கையை தொடர முடியாது என்றும் விஜயினுடைய சினிமா துறை அனுபவத்தை துவங்குவதற்காக அவருடைய போட்டோ ஆல்பத்தை கையில் ஏந்தியவாறு பல இயக்குனர்களிடம் சென்று விஜய் அவர்களை வைத்து திரைப்படம் எடுக்கும்படி தான் வேண்டி நின்றதாகவும் கடைசியில் யாருமே துணை நிற்காத நிலையில், வேறு வழி இன்றி தானே தன்னுடைய மகனின் உடைய முதல் திரைப்படம் ஆன நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தை இயக்கியதாக சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய கனவு தன்னுடைய மகனை மற்றொரு இயக்குனர் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் என்றும் ஆனால் அது விஜயினுடைய வாழ்வில் நடைபெறாமல் போனது தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக இருந்தாலும் தற்பொழுது அவர் சினிமாவின் உச்ச நடிகரில் ஒருவராக இருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். சினிமாவில் நடிகர் விஜய் அவர்களின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். இது தமிழகம் மட்டும் இன்றி உலக அளவில் விஜய் ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு ஆளாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது