Home Blog Page 381

எது ஆபத்தான தலைவலி? இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே மருத்துவரை அணுகுங்கள்!!

0

தினசரி வாழ்வில் பெரும்பாலனோர் தலைவலி பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.மன அழுத்தம்,பணிச்சுமை,உடல் நலப் பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் தலைவலி பாதிப்பு ஏற்படுகிறது.

தலைவலி என்பது பொதுவானசொல்.ஆனால் இதில் பல வகைகள் இருக்கின்றது.ஒற்றைத் தலைவலி,நாள்பட்ட தலைவலி,பின்பக்க தலைவலி,சாதாரண தலைவலி,கொத்து தலைவலி,கிளஸ்டர் தலைவலி,இரண்டாம் நிலை தலைவலி என்று தலைவலி வகைகள் வித விதமாக இருக்கிறது.

இதில் திடீரென்று ஏற்படும் ஆபத்தான தலைவலி பாதிப்பு கடுமையானதாக இருக்கும்.இந்த தலைவலி தலையில் இடி முழக்கம் ஏற்படுவது போன்று இருக்கும்.சாதாரண தலைவலியை விட இந்த ஆபத்தான தலைவலி ஏற்பட்டால் அதன் வலியை தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

ஆபத்தான தலைவலியின் அறிகுறிகள்:

1)மயக்கம்
2)காய்ச்சல்
3)வாந்தி
4)கண் பார்வை குறைபாடு
5)கை மற்றும் கால்களில் வலி ஏற்படுதல்
6)பேசுவதில் சிரமத்தை சந்தித்தல்

இந்த அறிகுறியுள்ள தலைவலி உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டியது முக்கியம்.ஆபத்தான தலைவலி இருந்தால் அது மூளை சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கான அறிகுறியாக இருக்கக் கூடும்.

மூளையில் கட்டி,மூளையை சுற்றி இரத்தப் போக்கு,மூளை காய்ச்சல் பாதிப்பு இருந்தால் இதுபோன்ற ஆபத்தான தலைவலி ஏற்படும்.உங்களுக்கு வழக்கமான தலைவலி பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அவை சரியாகவில்லை என்றால் பாதிப்பு தீவிரமாகும்.

தலைவலி வகைகள் மற்றும் காரணங்கள்:

உங்களுக்கு நெற்றி பகுதியில் தலைவலி இருந்தால் அவை மன அழுத்தம் அல்லது தூக்கமின்மை போன்ற காரணங்களால் ஏற்படக் கூடிய பாதிப்பாக இருக்கும்.

பின்பக்க மண்டையில் தலைவலி இருந்தால் முதுகெலும்பு பிரச்சனையாக இருக்கக் கூடும்.இடது பக்க தலையில் வலி ஏற்பட்டால் அவை இருதய அழுத்தத்தின் காரணமாக ஏற்படலாம்.தலைமேல் வலி இருந்தால் அவை உடல் சோர்வு காரணமாக ஏற்படாமல்.இதில் இடி தலைவலி ஆபத்தான தலைவலியாக பார்க்கப்படுகிறது.

இந்த தலைவலி பாதிப்பு இருப்பவர்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பெண்கள் தாலியுடன் இதை சேர்த்து அணிந்தால் பல மகிமைகள் உண்டாகும்..!!

0

ஸ்ரீ சக்கரம் என்பதை தன்னுடைய கைப்பட எந்திரபூர்வமாக உருவாக்கியவர் யார் என்றால் சிவபெருமான். இந்த ஸ்ரீ சக்கரம் எந்த ஸ்லோகத்திற்கு உட்பட்டது என்றால் திருமாலே தன்னுடைய மனைவியை வர்ணித்த சௌந்தர்ய நகரியினுடைய 22 ஆவது ஸ்லோகத்திற்குரிய எந்திரம்.

அதாவது அம்பிகையின் உடைய ஒவ்வொரு அவையமும் ஒரு எந்திரமாக அவர் உருவாக்கம் செய்கிறார்.
அந்த உருவாக்கத்தினுடைய அடிப்படையில் அதை கொண்டு வந்து பூமியில் சேர்த்த பிராப்தம் ஆதிசங்கரரை சேரும். இந்த ஸ்ரீ சக்கரம் முதல் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடமாக காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தான் இருக்கிறது.

ஒரு வீட்டில் கர்மாவினால் நோய், நொடி, கடன், சண்டை, பிரச்சனை இதெல்லாம் இருக்கிறது என்றால் அது கர்மாவினுடைய வெளிப்பாடு. அதேபோன்று ஒரு வீட்டில் சந்திரனின் பலம் இல்லை என்றால் அந்த வீட்டில் செல்வ வளம் என்பது இருக்காது. அப்பொழுது சந்திரனை உச்சம் படுத்தக்கூடிய வாய்ப்பு தான் இந்த ஸ்ரீ சக்கரம்.

யார் ஒருவருடைய வீட்டில் இந்த ஸ்ரீ சக்கரம் இருக்கிறதோ அந்த வீட்டில் அம்பாள் எவ்வாறு சிரித்த முகத்துடன் இருக்கிறாரோ அதேப் போன்று, அந்த குடும்பத்தில் உள்ள அனைவரது முகமும் சிரித்த முகத்துடன் இருக்கும். அதேபோன்று பொன், பொருள், நவநிதி ஆகியவற்றிற்கு குறைவே இருக்காது.
குறிப்பாக நோய் என்பதே இருக்காது.

இந்த ஸ்ரீ சக்கரத்தை வெள்ளிக்கிழமை நாட்களில் மகாலட்சுமி படத்துடன் வைத்து பிரேம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த ஸ்ரீ சக்கரத்தை தனியாக வைத்து வழிபட்டால் அதற்கு என தனியான பூஜை சம்பிரதாயங்களை சரியாக செய்ய வேண்டும்.

எனவேதான் இந்த ஸ்ரீசக்கரத்தை லட்சுமி தாயாருடன் சேர்த்து வைக்கும் பொழுது அந்த லட்சுமி தேவியின் கடாட்சமும், சந்திரனின் அருளும் நமக்கு முழுமையாக கிடைக்கும். ஸ்ரீ சக்கரம் இருக்கக்கூடிய வீடுகளில் செல்வ வளம், மன அமைதி, நோயற்ற வாழ்வு ஆகியவை இருக்கும்.

இந்த ஸ்ரீ சக்கரம் ஆனது வெள்ளி அல்லது தங்கத்தில் இருந்தால் மிகுந்த சிறப்பை தரும். இந்த ஸ்ரீ சக்கரத்தை தனியாக வைத்து வழிபட்டால் அதற்கு என தனியாக பால், பழம், பிரசாதம் என தினமும் படைத்து வழிபட வேண்டும். இல்லை என்றால் இந்த ஸ்ரீ சக்கரத்தை பிரேம் போட்டு வைத்து வழிபட்டால் வாரத்திற்கு ஒருமுறை வழிபட்டால் போதும்.

இந்த ஸ்ரீ சக்கரம் ஆனது காசி அன்னபூரணி, சமயபுர தாயின் திருமாங்கல்யம், திருவானைக்காவல், திருவாரூர் போன்ற ஊர்களில் உள்ள ஆலயங்களில் இந்த ஸ்ரீ சக்கரத்தை நாம் காணலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஸ்ரீ சக்கரம் இருக்கக்கூடிய இடத்தில் செல்வ வளம், மகிழ்ச்சி, மன அமைதி, குடும்ப ஒற்றுமை ஆகியவற்றை ஏற்படுத்தும்.

இந்த ஸ்ரீ சக்கரத்தை குறிப்பாக பெண்கள், ஒரு டாலர் வடிவத்திலோ அல்லது திருமாங்கல்யத்துடனோ சேர்த்து அணிந்து கொள்ளும் பொழுது கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். எனவே இந்த ஸ்ரீ சக்கரத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் பெண்கள் அணிந்து கொள்ளலாம்.

இந்த ஸ்ரீ சக்கரத்திற்கு எந்த ஒரு தீட்டும் கிடையாது. எனவே அனைத்து நாட்களிலும் இந்த ஸ்ரீசக்கரத்தை நாம் அணிந்து கொண்டு இருக்கலாம். செல்வத்தை சேர்க்கும் பண்பு பெண்களிடம் மட்டும்தான் அதிகம் இருக்கும். எனவே இந்த ஸ்ரீ சக்கரத்தை பெண்கள் அணிந்து கொள்ளும் பொழுது செல்வ வளமும் அதிகரிக்கும்.

எச்சரிக்கை.. உங்கள் Pulse pressure இந்த அளவை மீறினால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்!!

0

பல்ஸ் பிரஷர் என்பது இதய துடிப்பின் போது தமனி சுருங்குதல் மற்றும் விரிவடைதல் ஆகியவற்றை குறிக்கிறது.இதயம் துடிக்கும் பொழுது தமனி சுருங்குவதை சிஸ்டாலிக் என்று அழைக்கின்றோம்.அதுவே இதயத் துடிப்பின் போது தமனி விரிவடைவதை டயஸ்டாலிக் அழுத்தம் என்று அழைக்கின்றோம்.

இந்த இரண்டு அழுத்தங்களுக்கும் இடையே ஏற்படும் அழுத்தத்தை துடிப்பு அழுத்தம் என்கின்றோம்.மனிதர்களுக்கு சாதாரண பல்ஸ் பிரஷர் என்பது 40mmHgக்குள் இருக்கும்.ஒருவேளை உங்களுக்கு பல்ஸ் பிரஷர் என்பது 60 mmHgக்குள் இருந்தால் அது உயர் துடிப்பு பிரச்சனை இருப்பதை காட்டுகிறது.

அதுவே உங்கள் பல்ஸ் பிரஷர் 50 mmHg அல்லது அதற்கு மேல் இருந்தால் கண் நோய்,இருதய நோய்,சிறுநீரக நோய் போன்றவை இருக்கிறது என்பதை குறிக்கிறது.இந்த பல்ஸ் பிரஷரை நாடியழுத்த மானியை கொண்டு கணக்கிடலாம்.

18 முதல் 60 வயதிற்குள் இருக்கும் நபர்களுக்கு அவர்களின் இரத்த அழுத்த அளவு 120/80 mmHg அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்.

60 வயதை கடந்தவர்களுக்கு இரத்த அழுத்த அளவு 140/90 mmHgக்கு கீழ் இருக்கும்.ஒருவர் ஓய்வு நேரத்தில் இருக்கும் பொழுது அவரின் இரத்த அழுத்த அளவு 140/90 mmHg என்ற அளவில் இருக்கும்.இந்த அளவு அதிகமானால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும்.பல்ஸ் பிரஷர் அதிகமாக இருந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே பல்ஸ் பிரஷரை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள சில விஷயங்களை அவசியம் பின்பற்ற வேண்டும்.

பல்ஸ் பிரஷர் அதிகரிக்காமல் இருக்க புகைப்பழத்தை கைவிட வேண்டும்.உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.எண்ணெய் உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு,வாழைப்பழம் போன்றவற்றை தினசரி சாப்பிட வேண்டும்.க்ரீன் டீ,பிளாக் போன்ற பானங்களை பருகி வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.பழச்சாறு,பச்சை காய்கறிகள் போன்றவை உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

உங்கள் தங்க நகை ரொம்ப நாட்களாக அடகு கடையில் இருக்கிறதா..?? செய்ய வேண்டிய பரிகாரம்..!!

0

இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து உழைத்தால் மட்டுமே அந்த குடும்பத்தை ஓரளவிற்காவது காப்பாற்ற முடியும் என்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இருந்தாலும் கூட குடும்பத் தேவைகளை நிறைவாக பூர்த்தி செய்யவும், திடீர் அவசர தேவைக்காகவும் தங்களுக்கு என வைத்திருக்கக் கூடிய தங்க ஆபரணங்களை அடகு கடையில் வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது.

அவ்வாறு வைக்கக்கூடிய தங்க ஆபரணங்களை என்னதான் முயன்றாலும் அதனை மீட்க முடியாமலே போய்விடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு எளிய பரிகாரத்தை செய்யும் பொழுது சிறிது சிறிதாக நமது ஆபரணங்களை மீட்டுக் கொள்வதற்கான வாய்ப்பு நமக்கு அமையும்.

தங்க நகைகளை அடகு வைக்கும் பொழுது நமது பெயரிலோ அல்லது நமது கையாலோ அடகு வைக்கக் கூடாது. நகை அடகு வைத்து அதிக வருடங்கள் ஆகிறது, அதற்கு வட்டி மட்டும்தான் கட்டிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நகையை மீட்க முடியவில்லை என்கின்றவர்கள், ஒவ்வொரு மாதமும் வருகின்ற ரேவதி நட்சத்திரத்தின் பொழுது அல்லது குளிகை நேரத்தில் ஒரு சிறிய தங்கத்தை யாவது மீட்டு நமது வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

குளிகை நேரம் என்பது ஒவ்வொரு தினமும் நமக்கு வரும் நமது வீட்டின் காலண்டரில் அந்த குளிகை நேரம் எப்பொழுது வருகிறது என்பதை பார்த்து அந்த நேரத்தில் அடகு கடைக்குச் சென்று ஒரு சிறிய அளவு நகையாவது மீட்க வேண்டும்.

ஒரு சிறிய நகையை கூட மீட்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள், சுந்தரர் பாடிய தேவாரப் பதிகத்தை நாம் முழு மனதுடனும், நம்பிக்கையுடனும், பக்தி உடனும் படிக்கும் பொழுது நிச்சயம் நமது நகையை மீட்பதற்கான வாய்ப்பை நமக்கு கடவுள் ஏற்படுத்திக் கொடுப்பார்.

இந்த வழிபாட்டில் உள்ள சூட்சுமம் என்னவென்றால் நாம் செய்யக்கூடிய பரிகாரத்தின் மீது முழு நம்பிக்கை மற்றும் பக்தி வேண்டும் என்பதே. இது நடக்குமா? இது உண்மையா? என்ற சந்தேகம் கொண்டு செய்தால் அதற்கான பலன் நமக்கு கிடைக்காது.

சுந்தரர் பாடிய தேவாரப் பதிகத்தில் உள்ள ஏழாம் திருமுறை பாடல்களை நாம் தினமும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படிக்கும் பொழுது, கண்டிப்பாக நமது நகையை மீட்பதற்கான சூழ்நிலையையும், வாய்ப்பையும் கடவுள் அமைத்துக் கொடுப்பார். மேலும் தங்க ஆபரணங்களை சேமிக்க விரும்புவர்களும் இந்த தேவாரப் பதிகத்தை படிப்பதன் மூலம் ஆபரணங்களை சேமிக்கவும் முடியும்.

தொட்டதெல்லாம் பொன்னாகும் தேய்பிறை சஷ்டி..!! இந்த நாளை தவிர விடாதீர்கள்..!!

0

முருகப்பெருமானின் வழிபாடுகளில் மிகவும் சிறந்தது மற்றும் உயர்ந்தது என்றால் சஷ்டி. அதிலும் தேய்பிறை சஷ்டி அன்று முருகனை நினைத்து வழிபட்டு, ஒரு சிறிய மற்றும் எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நாம் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். நமக்கு தேவையான வீரம், விவேகம், ஆற்றல் ஆகிய அனைத்தையும் தரக்கூடிய அதிபதி என்றால் அது முருகப் பெருமான் தான்.

மாதந்தோறும் வருகின்ற தேய்பிறை சஷ்டி அன்று வாழைப்பழம் தீபம் ஒன்றை ஏற்றி முருகனை வழிபடும் பொழுது, நாம் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியடையும். திதி விரதம், நட்சத்திர விரதம், வார விரதம் என மூன்று முறைகளில் முருகப்பெருமானை வழிபடலாம்.

தேய்பிறை சஷ்டி திதி அன்று முருகனை வழிபட்டால் செல்வ வளம் பெருகும், திருமணம் மற்றும் வாழ்க்கை தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தீராத பிரச்சனைகளையும் தீர்த்துக் கொடுப்பவர் இந்த முருகப் பெருமான்.எனவே இவரை தேய்பிறை சஷ்டி அன்று வாழைப்பழம் தீபம் ஒன்றை ஏற்றி வழிபடுவதன் மூலம், சகல விதமான சௌபாக்கியங்களையும் நாம் பெற முடியும்.

“யாமிருக்க பயமேன்” என்று முருகப்பெருமான் கூறுவது போல, இவரை தொடர்ந்து ஆறு சஷ்டி திதிகளில் வழிபடுவதன் மூலம் நாம் வேண்டிய காரியம் நிச்சயம் நிறைவேறும்.

தேய்பிறை சஷ்டி நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டின் பூஜை அறையில் முருகன் படம் அல்லது சிறிய சிலையை எடுத்து, சுத்தம் செய்து, அலங்கரித்து வைத்துக் கொள்ளுங்கள். முருகன் படம் அல்லது சிலைக்கு முன்பு இரண்டு செவ்வாழைப் பழங்களை ஒரு சிறிய தட்டில் எடுத்து வையுங்கள்.

அந்த வாழைப்பழத்தின் மத்தியில் சிறிதாக குழி போன்று ஏற்படுத்தி, அதில் சிறிதளவு சர்க்கரை மற்றும் நெய் விட்டு, திரிப் போட்டு தீபம் ஏற்றுங்கள். பஞ்சாமிர்தம் எப்படி முருகனுக்கு மிகவும் பிரியமான அபிஷேகப் பொருளோ அதே போல் வாழைப்பழ தீபமும் முருகப் பெருமானுக்கு மிகவும் பிரியமானதாகும். இந்த வாழைப்பழ தீபத்தை செவ்வாய்கிழமையிலும் கூட ஏற்றலாம்.

இருந்தாலும் சஷ்டி திதியில், அதுவும் தேய்பிறை சஷ்டி அன்று ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும். இந்த விளக்கை ஏற்றி வைத்து, ஏதாவது ஒரு கோரிக்கையை முருகனிடம் முன் வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த விளக்கை நம்பிக்கையுடன் ஏற்றி வந்தால் வாழ்வில் பல மாற்றங்களையும், அதிசயங்களையும் முருகப் பெருமான் நடத்துவதை காணலாம்.

பணத் தட்டுப்பாடு மற்றும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க செய்ய வேண்டிய தானம்..!! கண்டிப்பாக கடவுள் அருள் புரிவார்..!!

0

நமது உணவு பண்டங்களிலேயே மிகவும் பிரதானமான பொருள் என்றால் அரிசி தான். இந்த அரிசியை மற்றவர்களுக்கு தானமாக தருதல் என்பது தொன்று தொட்டு நமது பெரியோர்கள் செய்து கொண்டிருந்த ஒரு அழகான பழக்கமும் கூட. வீட்டிற்கு மடிப்பிச்சை கேட்டு வருபவர்கள் அரிசியை தானமாக பெற்றுச் சென்று, அதனை தனது பிரார்த்தனைக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.

அதேபோன்று ஒவ்வொரு இடங்களில், ஒவ்வொரு விதமான பண்டிகைகளை கொண்டாடும் பொழுது சில பழக்கங்களை நமது முன்னோர்கள் கடைபிடித்துள்ளனர். அதாவது புரட்டாசி மாதத்தில் பெருமாளின் பாடல்களை பாடிக் கொண்டு அட்சய பாத்திரத்தை ஏந்தி வருபவர்களுக்கு, நமது முன்னோர்கள் அரிசியை தான் தானமாக வழங்குவார்கள்.

முந்தைய காலங்களில் ஏதேனும் ஒரு ஊரில் பண்டிகை என்றால் அவர்கள் வீடு வீடாகச் சென்று பண்டிகையை அறிவிப்பார்கள். அப்பொழுது மற்றவர்கள் அவர்களால் முடிந்த தானியத்தை தானமாக கொடுப்பார்கள். கம்பு, கேழ்வரகு, நெல், அரிசி இது போன்றவைகளை தானமாக கொடுப்பார்கள். இந்த தானியங்களை அன்னதானத்திற்கு என அந்த கோவிலில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நாமும் அரிசியை தானமாக வழங்கலாம். அவ்வாறு வழங்குவதன் மூலம் பல புண்ணியங்களை நாம் பெற முடியும். நம்மால் பெரிய அளவில் அரிசியை தானமாக கொடுக்க முடியாவிட்டாலும் கூட, தினமும் நாம் சமைப்பதற்கு என அரிசியை எடுக்கும் பொழுது ஒரு கைப்பிடி அளவு மட்டும் தனியாக எடுத்து, ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ அந்த அரிசி சேர்ந்த பின்னர், அந்த அரிசியை நாம் தானமாக கோவில்களில் கொடுத்து விடலாம்.
இந்த அரிசியை கோவில்கள், ஆசிரமம், விடுதிகள், அனாதை இல்லம், ஏழை எளிய மக்கள் என யாருக்கு வேண்டுமானாலும் தானமாக வழங்கலாம். நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அரிசியை தானமாக கொடுத்தால் போதும்.

அரிசியை தானம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும்:
அரிசியை தானமாக வழங்கினால் அந்தக் குடும்பத்தில் பசி மற்றும் பஞ்சம் என்ற கொடுமை ஏற்படாமல் இருக்கும். நல்ல வசதியான குடும்பமாக இருந்தாலும் கூட எவ்வளவு தான் சமைத்தாலும் ஏதேனும் ஒருவர் அல்லது இருவருக்கு பற்றாமல் போய்விடும். அவ்வாறு இருக்கக்கூடிய வீடுகளில் தரித்திரம் குடியேறி இருப்பதாக அர்த்தம்.

ஆனால் அரிசியை தானமாக வழங்கும் பொழுது அந்த தரித்திரம் என்பது நீங்கி, நாம் போதுமான அளவு சமைத்தாலும் கூட, அந்த உணவானது மேலும் இருவர் சேர்ந்து சாப்பிடக் கூடிய அளவிற்கு உயர்ந்து இருக்கும். அப்பேர்ப்பட்ட நல்ல தன்மையை அந்த வீட்டிற்கு கொடுக்கும்.

அரிசியை தானமாக வழங்குவதால் செல்வ செழிப்பு ஏற்படும். ஜென்ம ஜென்மங்களாக இருந்து வந்த தோஷங்கள் விலகும். அன்னபூரணி தேவியின் அருள் கண்டிப்பாக அந்த வீட்டில் நிலைத்து இருக்கும். தனம், தானியங்கள் பெருகி வளரும்.

எனவே நமக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது ஏழை எளிய மக்களுக்கு அரிசியை தானமாக வழங்குவதால் இத்தனை பலன்களையும் நம்மால் பெற முடியும். ரேஷன் கடைகளில் கொடுக்கக்கூடிய அரிசியை நாம் பயன்படுத்துவதில்லை என்றால் அதனைக் கூட ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

கடைகளில் வழங்கக்கூடிய அரிசி நமக்கு குறைவாக தோன்றினாலும் கூட, அது ஏழை மக்களுக்கு பெரியதாக தோன்றும். எனவே நம்மால் முடிந்த அளவிற்கு அரிசியை தானம் கொடுப்பதால் பல நன்மைகளை நாமும் நமது குடும்பத்தினரும் பெறலாம்.

சனிப்பெயர்ச்சி 2025 – 2027..!! 12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் சனியின் நிலை..!!

0

நவகிரகங்களில் சனிபகவான் மட்டுமே ஈஸ்வரர் பட்டம் பெற்றவர். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக் கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் தலைவர். நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் – ஆயுள், தொழில், கர்மா.

இம்மூன்றிக்கும் அதிபதி அதாவது காரகன் சனியே ஆவார். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும், சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம்.

சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற தொழில்கள்: உழைப்பு, சமூக நலம், தேச தொண்டு, புதையல், தலைமை தாங்கும் வாய்ப்பு, உலகியல் அறிவு, பல மொழிகளில் பாண்டித்யம், விஞ்ஞானத்தில் தேர்ச்சி, எண்ணைய் கிணறு, பெரிய இயந்திரங்கள் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொடுப்பவர்.

கிரக வரிசையில் ஆறாவதாக வருபவர். கிழமைகளில் சனிக்கிழமைக்கு ஆதிக்கம் செலுத்துபவர். அளவின் அடிப்படையில் குருவிற்கு அடுத்த பெரிய கிரகம் சனி கிரகமாகும்.
இந்த சனிப்பெயர்ச்சியானது பங்குனி மாதம் 15ம் நாள் (29.03.2025)இரவு 11:01 க்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார்.

மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.
மீன ராசிக்கு வரும் சனி பகவான் மேஷ ராசிக்கு ஸ்ரீபிலவங்க வருடம் வைகாசி மாதம் 20ம் தேதி – 03.06.2027 – வியாழக்கிழமையன்று மாறுகிறார்.மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார்.

சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம்.

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:

நன்மை பெறும் ராசிகள்: மிதுனம் – கடகம் – துலாம் – மகரம்

நன்மை, தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: ரிஷபம்- விருச்சிகம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மேஷம் – சிம்மம் – கன்னி – தனுசு – கும்பம் – மீனம்

ஒவ்வொரு ராசியிலும் சனியின் நிலை:

நட்சத்திரம்        சனியின் நிலை
மேஷம்                    நீசம்
ரிஷபம்                     நட்பு
மிதுனம்                   நட்பு
கடகம்                       பகை
சிம்மம்                      பகை
கன்னி                      நட்பு
துலாம்                     உச்சம்
விருச்சிகம்            பகை
தனுசு                      நட்பு
மகரம்                     ஆட்சி
கும்பம்                   ஆட்சி
மீனம்                      நட்பு

’அவரு ஓடறதுலயும் கமிஷன் அடிப்பார்.. போடறதுலயும் கமிஷன் அடிப்பார்’..!! செந்தில் பாலாஜியை வெச்சி செய்த தமிழிசை..!!

0

இனி யாராவது என்னை ’இந்தி இசை’ என்று அழைத்தால் கெட்ட கோவம் வரும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் திருக்கோவிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமலாக்கத்துறை சொன்னதை தான் அண்ணாமலை கூறினார். டாஸ்மாக்கில் சுமார் லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த நிதி தமிழ்நாட்டிற்கு வந்தால், மாநில கடன் 36% குறையும்.

டாஸ்மாக் கடைகளில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்டி, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. தற்போது டாஸ்மாக்  துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, முன்னதாக போக்குவரத்துத் துறையில் இருந்தார். அவர் ஓடறதுலயும் கமிஷன் அடிப்பார்.. போடறதுலயும் கமிஷன் அடிப்பார்” என்று விமர்சித்தார்.

கெட்ட கோவம் வரும்

இதையடுத்து மும்மொழிக் கொள்கை குறித்து பேசிய தமிழிசை, “எதையும் திரித்துப் பேசக்கூடாது. தற்போதைய காலகட்டத்தில் இரு மொழி போதும் எனக் சொல்லக் கூடாது. 3 மொழிகள் நிச்சயம் தேவை. இனி யாராவது என்னை ’இந்தி இசை’ என்று அழைத்தால் கெட்ட கோவம் வரும். எனக்குத் தமிழ் பத்தி பேச அனைத்து உரிமையும் உள்ளது” என்றார்.

ஆபாச படத்திற்கு அடிமையான மனைவி..!! அடிக்கடி சுய இன்பம்..!! விவாகரத்து கேட்ட கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்..!!

0

மனைவி தனிமையில் ஆபாசப் படங்களை பார்ப்பது, கணவனுக்கு கொடுமை செய்வதாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

தன்னுடைய மனைவி ஆபாசப் படத்திற்கு அடிமையானதாகவும், அடிக்கடி சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என்றும் அவருக்கு பால்வினை நோய் இருப்பதாகவும் கூறி, அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், விவாகரத்து வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீமன்ற கிளையில், அந்த பெண்ணின் கணவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஒரு பெண் தனிமையில் ஆபாசப் படங்கள் பார்ப்பதையும், சுய இன்பம் செய்வதையும், கணவருக்கு இழைக்கப்படும் கொடுமையாக கருத முடியாது.

மேலும், தனது மனைவிக்கு பால்வினை நோய் இருப்பதை நிரூபிப்பதற்கான எந்த ஆதாரத்தையும் கணவர் சமர்ப்பிக்கவில்லை. அதே சமயம், வாழ்க்கைத் துணையை ஆபாசப் படங்களைப் பார்க்குமாறு வற்புறுத்தினால், அது விவகாரத்துக்கான காரணமாக ஏற்றுக் கொள்ள முடியும்” என்று கூறி கணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மருத்துவ காப்பீடு எடுக்கும் பொழுது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!!

0

மருத்துவ காப்பீடு என்பது எதிர்பாராத மற்றும் திடீரென ஏற்படக்கூடிய உடல் நலக் குறைவு விபத்து போன்றவற்றிற்கான காப்பீட்டுத் தொகையை உறுதி செய்யக்கூடிய விஷயமாகும். பொதுவாக மருத்துவ காப்பீடு என்பது எடுக்கும் பொழுது சில முக்கிய விஷயங்களை கவனித்தல் மிக மிக அவசியம். புதிதாக மருத்துவ காப்பீடு எடுக்கக் கூடியவர்கள் கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

✓ மகப்பேறு காப்பீடு :-

இந்த காப்பீடு ஆனது குழந்தை கருவுற்றது முதலே பயன்படுத்தும் வகையிலும் அல்லது குழந்தை பிறந்த பெண் குழந்தைக்கான செலவுகள் மகப்பேறு பிரசவத்திற்கான செலவுகள் என அனைத்தையும் உள்ளடக்கியது. இது காப்பீட்டு நிறுவனங்களை பொறுத்து 9 மாதங்கள் முதல் 6 ஆண்டுகள் வரை காத்திருப்பு காலத்தை உறுதி செய்கிறது.

✓ விபத்து காப்பீடு :-

திடீரென ஏற்படக்கூடிய தீராத வியாதி அல்லது விபத்துகளுக்கு இதன் மூலம் செலவுகளை சமாளிக்க முடியும். அதிலும் குறிப்பாக, இதய நோய், சிறுநீரக செயலிழப்பு அல்லது புற்றுநோய் போன்ற தீராத நோய்களுக்கு 90 நாட்கள் காத்திருப்பு காலமாக வழங்கப்படும். ஆனால் இந்த காப்பீட்டுத் தொகையானது ஒருமுறை பெறப்பட்டு விட்டால் அது அன்றோடு முடிந்துவிடும். இதன்பின் மீண்டும் பயன்பட வேண்டும் என நினைத்தால் அதற்காக புதிய காப்பீட்டை பெறுதல் வேண்டும்.

✓ மருத்துவமனை ரொக்க காப்பீடு :-

இந்த காப்பி டைப் பொறுத்தவரையில் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கூடியவர் 24 மணி நேரத்திற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நேரடியாக மருத்துவமனைக்கு கொடுக்கக்கூடிய பணத்தை ரொக்கமாக இந்த காப்பீட்டில் பெறலாம். இவ்வாறு பெறுவதன் மூலம் பயணம் உணவு போன்ற மருத்துவமனையின் பிற செலவுகளுக்கும் இந்த காப்பீடு கைகொடுக்கும்.

✓ ரூம் வாடகையில் விலக்கு :-

மருத்துவ காப்பீட்டில் இந்த ரைட்டரை தேர்வு செய்யக்கூடியவர்களுக்கு மருத்துவமனையின் ரூம் செலவு குறித்த எந்தவித கவலையும் இன்றி உடல் நலமில்லாமல் இருக்கக்கூடியவர்களுக்கு எந்த அறை வசதியாக இருக்குமோ அந்த அறையை தேர்வு செய்து கொள்ளலாம். எத்தனை நாட்கள் தங்குகிறோம் என்பது குறித்து எந்த வித கவலையும் இன்றி தங்களுடைய சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு இந்த ரைட்டர் உதவியாக உள்ளது.

✓ வெளி நோயாளிகள் பிரிவு :-

வீட்டில் குழந்தைகளை வைத்திருக்கக் கூடியவர்களுக்கு ஓபிடி ரைட்டர் தேர்வு செய்வதன் மூலம் அடிக்கடி நிகழக்கூடிய வெளி நோயாளி பிரிவுகளை அதாவது அடிக்கடி வீட்டில் ஏற்படக்கூடிய உடல் நலக்குறைவுகளுக்கு கையில் இருந்து எந்த ஒரு பணத்தையும் செலவு செய்யாமல் காப்பீட்டின் மூலமே மருத்துவர் வருகை, நோயறிதல் சோதனைகள், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

இதுபோன்ற ரைட்டர்களை சரியாக தேர்வு செய்தல் மூலம் உங்களுடைய மருத்துவ காப்பீடு ஆனது சிறப்பானதாகவும் அவசர நேரங்களில் உங்களுக்கு கை கொடுப்பதாகவும் அமையும்.