செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 2, 2025
Home Blog Page 43

விவசாயிகளே 20ஆம் தேதி வரை தான் டைம்; இத பண்ணலன்னா பணம் கிரெடிட் ஆகாது!

0

இந்திய அரசு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தகுதி வாய்ந்த விவசாயிகளையும் தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு 6000 ரூபாய் மானியம் கொடுக்கப்படுகின்றது.

இதை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் 3 தவணையாக வழங்கப்படும். இந்திய அரசாங்கம் அண்மையில் வெளியிட்டு அறிவிப்பில் பதிவு செயல்முறையை முடித்த விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற முடியும் எனவும் அறிவித்தது. மேலும் eKYC கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். 

இருபது தவணை பெற விவசாயிகள் பார்மர் ரிஜிஸ்டர் யூபி மொபைல் செயலி அதிகாரபூர்வ, பிஎம் கிசான் வலைதளம் அல்லது ஏதேனும் பொது சேவை வசதியை முதலில் பார்வையிட வேண்டும். அதன் மூலம் பதிவு நடைமுறையை முடிக்க வேண்டும் கூடுதலாக அவர்கள் KYC பூர்த்தி செய்திருப்பது அவசியம். அதனுடன் ஆதார் அட்டை, நில சரிபார்ப்பு மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட செயலில் உள்ள வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

பி எம் கிசான் யோஜனா என்ற அதிகாரவபூர்வ வலைதளத்தை பார்வையிட்ட பிறகு, பார்மர் பகுதிக்குச் சென்று தங்களது விருப்பத்தை தேர்வு செய்து ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.

அவை அனைத்தும் சரி பார்க்கப்பட்ட பிறகு மொபைல் எண்ணிற்கு ஓடிபி வழங்கப்படும் அதனை அதில் பயன்படுத்தினால் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக விஜய்யுடன் பாமக கூட்டணி உறுதி?? ராமதாஸ் சொன்ன தகவல்!!

0

PMK TVK: தமிழக அரசியல் களத்தில் அதிமுக திமுக பாஜக பாமக என இவர்கள் ஒருமித்த கூட்டணி இல்லாமல் தனித்து இருப்பதால் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தற்போது திமுக மட்டுமே தனது கூட்டணியில் உறுதியாக உள்ளது. மேற்கொண்டு பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பது குறித்து தற்போது வரை வாய் திறக்கவில்லை.

அதிலும் பாமகவில் உட்கட்சி மோதல் அப்பா மகனுக்கிடையே நிலவி வருகிறது. அதிலும் கட்சி தலைமை பொறுப்பிற்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி என இருவரும் போட்டி போட்டுக் கொண்டும் நிர்வாகிகளை வெளியேற்றியும் அறிவிப்பு விடுகின்றனர். மேற்கொண்டு கூட்டணி குறித்து ராமதாஸ் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர். அதிலும் விஜய் கட்சியில் இணை போகிறீர்களா என்று கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

இதற்கு ராமதாஸ், தற்போது வரை விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. வரும் காலங்களில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து விஜய்யுடன் கூட்டணி வைக்கலாமா?? என்பது குறித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார். அதேபோல வரப்போகும் சட்டமன்ற தேர்தல் வரை நான் தான் தலைவர் பதவியில் இருப்பேன் சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்பு தான் அன்புமணி அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யப்படும் என்று ராமதாஸ் கூறியது சற்று யோசிக்க வேண்டியதாக உள்ளது. விஜய்யுடன் கூட்டணி இல்லை எனக் கூறாததால் காலப்போக்கில் அவருடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

அதிமுக வுக்கும் நமக்கும் 50- 50 தொகுதி.. பிளானை உடனே மாத்துங்க!! மோடிக்கு ஐடியா கொடுத்த அண்ணாமலை!!

0

ADMK BJP: அதிமுக, பாஜகவுடன் கூட்டணி தான் வைத்துள்ளமே தவிர கூட்டணி ஆட்சி கிடையாது என்று தெள்ள தெளிவாக கூறிவிட்டது. ஆனால் தமிழக வருகை புரிந்த மத்திய மந்திரி அமித்ஷா செய்தியாளர்கள் சந்திப்பில், 2026 ஆம் ஆண்டு அதிமுக பாஜக ஒன்றிணைந்த கூட்டணியில் தான் ஆட்சி அமையும் எனக் கூறியிருந்தார். இவ்வாறு அவர் பேசியது ரீதியாக அதிமுக கட்சிக்குள் சர்ச்சை வெடிக்க ஆரம்பித்தது.

ஏதேனும் சலுகைக்காக எடப்பாடி, மறைமுக ஒப்பந்தம் ஏதாவது பாஜக தலைமையில் போட்டு விட்டாரா என்ற கேள்வியும் எழுப்பி வந்தனர். ஆனால் எடப்பாடி மீண்டும் கூட்டணிக்காக தான் ஒன்றினைந்திருக்கிறோம் ஆனால் கூட்டணி ஆட்சி கிடையாது என விவரித்து கூறினார். இவ்வாறு இருக்கும் சமயத்தில் தற்பொழுது அண்ணாமலை மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்த கடிதத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்து நின்ற பத்தொன்பது சதவீத வாக்குகளையும், பாஜக கூட்டணி வைத்து 11.4 சதவீத வாக்குகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஏன் ஒரு சில இடங்களில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்து அதிமுகவை பின்னுக்கும் தள்ளியுள்ளது. சமீப காலங்களில் பாஜகவின் வளர்ச்சியானது அபரிமிதமாக இருப்பதால் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் சரிக்கு சமமாக தொகுதிகளை கேட்க வேண்டும்.

அதிமுக 140 தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் அதில் 70 தொகுதிகளை பாஜக கேட்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் கூட்டணி ஆட்சி முறையானது தமிழகத்தில் உருவாகும். சட்டமன்றத் தேர்தலில் இதனை செயலுக்கு கொண்டுவரும் பட்சத்தில் அடுத்து 2029 யில் வரப்போகும் மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட 30 இடங்களிலாவது NDA கூட்டணி வெற்றி பெறும் என்று உறுதியளித்து கூறியுள்ளார். இவ்வாறு அவர் மோடிக்கே அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்காலிக கிராம உதவியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்; தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு!!

0

தமிழக அரசு சார்பாக கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

அதில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள், மதிப்பெண் விவரங்கள், மற்றும் தேர்வு முறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. பணிக்காக தகுதி மற்றும் தேர்வு முறை என்று பார்க்கும் பொழுது தமிழ் ஒரு பாடமாக தேர்வு எழுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இதற்காக பத்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஓட்டும் திறன் கொண்டவராகவும் ஓட்டுனர் உரிமம் இருந்தால் நேரடியாக 10 மதிப்பெண்கள் இல்லையெனில் தேர்வின் மூலம் திறன் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழில் வாசித்து, எழுதும் திறன் கொண்டிருந்தால் 30 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட கிராமம் அல்லது குறைந்தபட்சம் தாலுகாவில் வசிப்பவர்களுக்கு வசிப்பிடச் சான்றிதழ் இருந்தால் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பிறகு நேர்காணல் நடத்தப்படும். வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் நடத்தும் நேர்காணலில் அடிப்படையில் 15 மதிப்பெண்கள் SSLC தேர்ச்சி இல்லாதவர்களுக்கும் வாசிக்கும் எழுத்துத்திறனை நிரூபித்தால் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்காலிகமாக கிராம உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் இந்த புதிய உத்தரவை நிரந்தர அரசு பணிக்காக வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி தட்டச்சு தேர்வு இப்படித்தான் நடக்கும்; ஆசிரியர்கள் தலையில் இடியை எறக்கிய தமிழக அரசு!!

0

தமிழகத்தில் வரும் 2027 முதல் தட்டச்சு தேர்வுகள் கணினி மூலம் மட்டுமே நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐந்தாயிரம் தட்டச்சு பள்ளிகள் மற்றும் ஐந்து லட்சம் ஆசிரியர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கின்றது. இந்நிலையில் தட்டச்சு தேர்வுகள் பல ஆண்டுகளாக தட்டச்சு பொரியின் வாயிலாக தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் நிலையில் முதலில் பள்ளிக்கல்வித்துறை தான் இந்த தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது.

ஆனால் தொழில்நுட்ப கல்வி இயக்கம் தட்டச்சு சுருக்கு எழுத்து தேர்வுகளை நடத்தி வரும் நிலையில் தமிழகத்தில் சுமார் 5000 தட்டச்சு பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்று தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதில் 4000 தட்டச்சு பள்ளிகளில் கணினி வகுப்புகளும், தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் அறிவுறுத்தலால் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது தமிழகத்தில் இன்னும் சில தேர்வுகளுக்கு மட்டும் தட்டச்சு இயந்திரங்கள் மூலமாக நடைபெறும். 2025 மற்றும் 26 ஆம் ஆண்டுகளில் நடைபெறும் தட்டச்சு தேர்வுகள் தட்டச்சு இயந்திரத்தின் மூலம் நடைபெறும் அதன் பிறகு 2027 ஆம் ஆண்டு முதல் கணினி பயன்பாட்டில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ள தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற ஐந்தாயிரம் தட்டச்சு பள்ளிகளில் உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 5000 தட்டச்சு பள்ளிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தட்டச்சு பொறிகளும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கணினிகளும் உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த முடிவால் அனைவரும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனால் சென்னையில் வணிகவியல் பள்ளியல் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பள்ளிகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்க வேண்டும். COA கணினி தேர்வினை நடத்திடவும் குறைந்தபட்சம் கல்வி தகுதியான தட்டச்சு ஆங்கில மற்றும் தமிழில் இடைநிலை மற்றும் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்களையே இந்த தேர்விற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் புதிய தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கு வந்த குட் நியூஸ்; ரூ27.20 கோடி நிதி ஒதுக்கீடு!!

0

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவு செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர் விடுப்பு உள்ளிட்ட காரணங்களால் பள்ளிக்கு வராமல் இருப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க 27 கோடியே 20 லட்சத்தி 96 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றி அறிக்கையை ஒன்றை அனுப்பியுள்ளார். தொடக்க கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நகராட்சி, மாநகராட்சி ,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகள், ஆகியவற்றில் நிரப்பத்தக்க காலி பணியிடங்களை நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தற்காலிக அடிப்படையில் பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியருக்கு 12,000 ரூபாயும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 15 ஆயிரம் ரூபாயும் மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனால் 2024 – 25 ஆம் கல்வியாண்டில் தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மார்ச் வரை மதிப்பூதியம் பெரும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 2025-26 ஆம் கல்வியாண்டில் மேற்கண்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க 93 கோடியே 41 லட்சத்து 78 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பெறப்பட்டுள்ளது. அதனால் தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் மதிப்பூதியம் வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து கோரிக்கை பெறப்பட்டது.

ஆனால் இதில் தாமதம் ஏற்பட்டதால் ஜூன் ,ஜூலை ஆகிய மாதங்களில் தற்காலிக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

தட்கல் டிக்கெட் எடுக்க போறீங்களா இதை உடனே பண்ணிருங்க; ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாகும் புதிய திட்டம்!

0

ரயில்வே அமைச்சகம் சார்பாக பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில் மற்றும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி மூலம் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தக்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிகள் இரண்டு மாதத்திற்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். முக்கியமான வழித்தடங்களில் முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே டிக்கெட் தீர்ந்துவிடும். குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் கன்னியாகுமரி அதிவேக ரயில், சூப்பர் பாஸ்ட், அனந்தபுரி, வந்தபாரத் ,செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட் கிடைப்பது மிகவும் சவாலாக உள்ளது. டிக்கெட் மின்னல் வேகத்தில் காலியாகும் நிலையில் கடைசி நேரத்தில் டிக்கெட் எடுக்க விரும்பும் பயணிகள் தட்கல் டிக்கெட்டை முயற்சி செய்கின்றனர்.

ஒரு ரயிலில் 20% டிக்கெட்டுகள் தட்கலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் இனி ஆதாரை ஐஆர்சிடிசி கனக்குடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

இதனை ஜூலை ஒன்றாம் தேதி முதல் சரிபார்க்கப்படுவதினால் ஆதார் இணைத்தவர்களும் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் எனவும் ஜூலை 15ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் வெரிபிகேஷன் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் இத உடனே பண்ணுங்க; அரசு அதிரடி உத்தரவு!!

0

ரேஷன் கார்டு என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் அவ்வப்போது புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இந்நிலையில் தற்போது 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் நிலையில் பெயர், முகவரி திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வரும் ஜூன் 14ஆம் தேதி சென்னையில் 19 மண்டல அலுவலகங்களில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பாமாயில், கோதுமை, பருப்பு, சர்க்கரை, உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றது.

தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தம் 35,083 ரேஷன் கடைகள் இருக்கும் நிலையில் இந்த கடைகளில் 2,25,24,784 குடும்ப அட்டைகள் இருக்கின்றது. தமிழகத்தில் அரிசி இலவசமாக வழங்கப்படும் நிலையில் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மானிய விலையில் உணவுப்பொருட்களை பெற்று வருகின்றனர்.

ரேஷன் கார்டுகள் இருந்தால் மட்டுமே அரசு வழங்கக்கூடிய பல்வேறு நலத்திட்டங்களை பெற முடியும். அதில் குறிப்பாக மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசு உள்ளிட்ட அரசின் திட்டங்கள் பெறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை சரி செய்ய முடியாமல் அடைந்து வருவதால் உடனடியாக அவற்றை திருத்தம் செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற இருக்கின்றது.

இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் குறைதீர்க்கும் முகமூலம் ரேஷன் கடையில் உள்ள திருத்தங்களை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.

செயற்கை இரத்தத்தை உருவாக்கிய ஜப்பான்!!

0

 

ஒவ்வொரு மருத்துவமனை, ஆம்புலன்ஸ் மற்றும் போர்க்களமும் பாதுகாப்பான, உலகளாவிய இரத்தத்தை உடனடியாக அணுகக்கூடிய ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள் – தட்டச்சு இல்லை, குளிர்பதன சேமிப்பு இல்லை, தாமதம் இல்லை. அந்த உலகம் இனி அறிவியல் புனைகதை அல்ல. ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு நன்றி, செயற்கை இரத்தம் விரைவில் உயிர்காக்கும் யதார்த்தமாக மாறக்கூடும்.

 

உலகளாவிய பிரச்சினைக்கு ஒரு உலகளாவிய தீர்வு

 

அவசர மருத்துவம், அறுவை சிகிச்சைகள், அதிர்ச்சி சிகிச்சை மற்றும் இராணுவ பயன்பாடுகளில் இரத்தமாற்றம் மிக முக்கியமானது. ஆனால் அவை கட்டுப்பாடுகளுடன் வருகின்றன: நன்கொடையாளர்கள் இரத்த வகையைப் பொறுத்து பொருத்தப்பட வேண்டும், துல்லியமான வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும் மற்றும் வாரங்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.

 

ஜப்பானின் செயற்கை இரத்தத் திட்டம் இந்தக் கதையை மாற்றுகிறது. செயற்கை இரத்தம் உலகளாவிய இணக்கத்தன்மை கொண்டது, அதாவது இரத்த வகையைப் பொருட்படுத்தாமல் யாருக்கும் அதை மாற்றலாம். நேரமும் பொருந்தக்கூடிய தன்மையும் மிக முக்கியமான உயர்-பங்கு சூழ்நிலைகளில், இந்த கண்டுபிடிப்பு ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும்.

 

மேலும், இந்த செயற்கை இரத்தம் அறை வெப்பநிலையில் இரண்டு ஆண்டுகள் வரை நிலையானதாக இருக்கும், இது 42 நாட்களுக்குள் காலாவதியாகும் மற்றும் நிலையான குளிர்பதனம் தேவைப்படும் பாரம்பரிய இரத்தத்தைப் போலல்லாமல். இது தொலைதூர இடங்கள், பேரிடர் மண்டலங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பு கொண்ட பகுதிகளில் பயன்படுத்த ஏற்றதாக அமைகிறது.

 

இது எவ்வாறு செயல்படுகிறது: ஒரு குமிழியில் அறிவியல்

 

ஜப்பானின் தேசிய பாதுகாப்பு மருத்துவக் கல்லூரி மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை இரத்தம், ஹீமோகுளோபின் வெசிகல் (HbV) தொழில்நுட்பம் எனப்படும் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே:

 

ஹீமோகுளோபின் காலாவதியான தானம் செய்யப்பட்ட இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

 

பின்னர் அது செயற்கை லிப்பிட் சவ்வுகளுக்குள் இணைக்கப்பட்டு உண்மையான சிவப்பு இரத்த அணுக்களைப் பிரதிபலிக்கும் நானோ அளவிலான வெசிகல்களை உருவாக்குகிறது.

 

இந்த வெசிகல்கள் இயற்கையான சிவப்பு இரத்த அணுக்களைப் போலவே இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல முடியும்.

 

சில பதிப்புகளில் பிளேட்லெட் மாற்றீடுகளும் அடங்கும், அவை இரத்த உறைதலுக்கு உதவுகின்றன – காயங்கள் அல்லது அறுவை சிகிச்சைகளின் போது முக்கியமானது.

 

இந்த கலவையானது மனித இரத்தத்தின் இரண்டு முக்கிய செயல்பாடுகளை செயற்கை இரத்தம் பிரதிபலிக்க அனுமதிக்கிறது: ஆக்ஸிஜன் போக்குவரத்து மற்றும் உறைதல்.

 

2030 ஆம் ஆண்டுக்கான ஆரம்பகால சோதனைகளை உறுதியளிக்கிறது

 

இந்த செயற்கை இரத்தத்தின் சிறிய அளவுகளை (சுமார் 100 மில்லி) விலங்குகள் மற்றும் ஆரோக்கியமான மனித தன்னார்வலர்களுக்கு கடுமையான பக்க விளைவுகள் இல்லாமல் பாதுகாப்பாக வழங்க முடியும் என்பதை ஆரம்பகால சோதனைகள் காட்டுகின்றன. 2025 ஆம் ஆண்டில், பாதுகாப்பு, உறிஞ்சுதல் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனை மையமாகக் கொண்டு விரிவாக்கப்பட்ட மனித சோதனைகள் தொடங்கியது.

 

மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நேர்மறையான முடிவுகளைக் காட்டினால், 2030 ஆம் ஆண்டுக்குள் வணிக ரீதியான அங்கீகாரத்தையும் பொது வெளியீட்டையும் ஜப்பான் நோக்கமாகக் கொண்டுள்ளது. அவசரகால மருத்துவம், இராணுவ நடவடிக்கைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான நெருக்கடிகளில் இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

 

மருத்துவ முன்னேற்றத்தை விட – இது ஒரு உலகளாவிய உத்தி

 

ஜப்பானின் கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான நேரத்தில் வருகிறது. உலகின் பழமையான மக்கள்தொகையில் ஒன்று நாட்டில் உள்ளது, மேலும் அதன் இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை சுருங்கி வருகிறது. அதிகமான நாடுகள் மக்கள்தொகை மாற்றங்களை அனுபவிக்கும் போது மற்றும் பாதுகாப்பான இரத்தமாற்றத்திற்கான தேவை அதிகரித்து வருவதால், செயற்கை இரத்தம் விரிவடையும் இடைவெளிகளை நிரப்ப உதவும்.

 

மேலும், நெருக்கடி சூழ்நிலைகளில் – இயற்கை பேரழிவுகள், பயங்கரவாத தாக்குதல்கள், போர் மண்டலங்கள் – வகை-பொருத்தமான, குளிரூட்டப்பட்ட நன்கொடையாளர் இரத்தத்தின் நிலையான விநியோகத்தை நம்பியிருப்பது ஒரு தளவாடக் கனவாகும். செயற்கை இரத்தம், பாதுகாப்பு அல்லது செயல்திறனில் சமரசம் செய்யாத, எடுத்துச் செல்லக்கூடிய, பயன்படுத்தத் தயாராக உள்ள மாற்றீட்டை வழங்குகிறது.

 

சவால்கள் இன்னும் முன்னால் உள்ளன

 

உற்சாகம் இருந்தபோதிலும், கடக்க இன்னும் தடைகள் உள்ளன:

 

தேசிய மற்றும் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரித்தல்.

 

சிக்கலான ஒழுங்குமுறை ஒப்புதல் செயல்முறைகளை வழிநடத்துதல்.

 

வணிகமயமாக்கப்பட்டவுடன் தயாரிப்பு மலிவு விலையிலும் அணுகக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்தல்.

 

அதிக மன அழுத்தம், நிஜ உலக மருத்துவ சூழல்களில் செயல்திறனை சோதித்தல்.

 

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளும், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட சிவப்பு இரத்த அணுக்கள் முதல் உறைந்த-உலர்ந்த ஹீமோகுளோபின் பொடிகள் வரை பல்வேறு முறைகள் மூலம் செயற்கை இரத்த தீர்வுகளைப் பின்பற்றுகின்றன. ஆனால் ஜப்பானின் அணுகுமுறை, அதன் நிலைத்தன்மை மற்றும் பொருந்தக்கூடிய நன்மைகளுடன், மிகவும் நம்பிக்கைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

வெற்றி பெற்றால், ஜப்பானின் செயற்கை இரத்தம் அவசரகால சுகாதாரப் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும், இரத்த பற்றாக்குறை மற்றும் பொருந்தக்கூடிய சிக்கல்களை கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாற்றும். இது ஒரு மருத்துவ கண்டுபிடிப்பு மட்டுமல்ல – இது உலகளாவிய தாக்கங்களைக் கொண்ட ஒரு மனிதாபிமான கருவியாகும்.

2030-ஐ நெருங்கி வரும் வேளையில், ஒரு விஷயம் தெளிவாகிறது: மருத்துவத்தின் எதிர்காலம் நன்கொடைகளைச் சார்ந்ததாக இருக்காது, மாறாக ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட சிவப்பு நிறத்தைச் சார்ந்ததாக இருக்கலாம்.

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; 1.50 லட்சம் வரை கடனுதவி..சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

0

தமிழ்நாடு அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கடன் உதவிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவு கடன் உதவி கிடைக்கும். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பாக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சுய உதவி குழு நடத்தி வருகின்றது.

அந்த குழுக்களின் மூலம் சிறு கடன்கள் வழங்கப்படுகின்றது. இதில் சிறுபான்மையின பெண்கள் மற்றும் ஆண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து தனித்தனியாக அல்லது சேர்ந்தோ சிறு வியாபாரம் அல்லது தொழில் செய்து தங்களது குடும்ப வருமானத்தை அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் காய்கனி கடை, பலகாரக் கடை, கைத்தொழில்கள், சிறுவணிகம், பூ வியாபாரம், மீன் வியாபாரம், உள்ளிட்ட தொழில்களை நடத்த கடன்கள் வழங்கப்படுகின்றது. இதில் பயன்பெற விண்ணப்பதாரர் சிறுபான்மையினர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

அவர்கள் குழுவில் குறைந்தது ஆறு மாதம் சேமித்தல் மற்றும் கடன் அளித்தல் பணியில் தொடர்ந்து செயல்பட வேண்டும். மேலும் ஒரு சுய உதவி குழுவில் 60 சதவீதம் சிறுபான்மையினராக இருப்பது அவசியம். மீதமுள்ள 40 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர வகுப்பினர் இடம்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 20 உறுப்பினர்களும் குறைந்தபட்சமாக 10 உறுப்பினர்களும் ஒரு குழுவில் இருப்பது அவசியம் சிறுபான்மையினர் குழுக்களில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

இதில் இரண்டு திட்டங்கள் இருக்கும் நிலையில் முதல் திட்டத்தின் அடிப்படையில் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். ஒரு ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டியாகவும் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்குள் தவணைத்தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்தும் வசதியும் உள்ளது. இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இரண்டாவது குழுவில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகின்றது. ஒரு ஆண்டுக்கு வட்டி விகிதம் 10 சதவீதமும், பெண்களுக்கு எட்டு சதவீதமும் வழங்கப்படும். அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குள் தவணை தொகையை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டும். இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.