Home Blog Page 5780

சகோதரியுடன் பாஜகவில் இணைந்த சாய்னா நேவல்:

0

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது சகோதரியுடன் இன்று பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜகவின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

கடந்த சில வருடங்களாகவே கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். முகமது அசாருதீன், கௌதம் காம்பீர், சித்து உள்பட பலர் அரசியல் கட்சிகளில் இணைந்து அரசியல் செய்து வரும் நிலையில் தற்போது அந்த வரிசையில் சாய்னா நேவால் இணைந்துள்ளார்

சற்று முன்னர் பாஜக தேசிய செயலாளர் அர்ஜூன்சிங் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்ட சாய்னா நேவல், பாஜகவின் உறுப்பினர் அட்டையும் பெற்றுக் கொண்டார். சாய்னாவை அடுத்து அவரது சகோதரியும் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பாஜகவில் இணைந்துள்ள சாய்னா நேவாலுக்கு விரைவில் முக்கிய பதவி ஒன்று அளிக்கப்படும் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன அவர் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ அல்லது எம்பி ஆவாரா? அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவி அவருக்கு கொடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இதுக்கெல்லாம் உங்க போராளி குரல் வராதா..? மூடர்கூடம் இயக்குனர் மீது திரெளபதி இயக்குனர் சாட்டையடி கேள்வி.!!

0

இதுக்கெல்லாம் உங்க போராளி குரல் வராதா..? மூடர்கூடம் இயக்குனர் மீது திரெளபதி இயக்குனர் சாட்டையடி கேள்வி.!!

திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், 17 வயது பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய செய்தியை ஆதாரத்துடன் பதிவிட்டு மூடர்கூடம் படத்தின் இயக்குனரை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம்பூர் அருகே திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்கிற இளைஞன் 17 வயதான இசுலாமிய பெண் ஒருவரை காதலிப்பது போல் நாடகமாடி அப்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவாகி உள்ளான். அரவிந்த் மீது உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, புகாரளித்த பெண்ணின் குடும்பத்திற்கு சிலரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பாதுகாப்பு வேண்டும் என்று காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், ஜனவரி ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட திரெளபதி படத்தின் டிரெய்லர் தமிழ்நாடு முழுக்க சிறப்பான வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், அனைத்து சமூக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றது. திரெளபதி படம் குறித்த கேள்விக்கு, குப்பை என பதில் அளித்த மூடர்கூடம் படத்தின் இயக்குனரை திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி தகுந்த ஆதாரத்துடன் சாட்டையடி கேள்வி எழுப்பியுள்ளார்.

இயக்குனர் மோகன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: நடுநிலையான மனிதர்களே.. இதற்கு பெயர் என்ன?? ஹரே பாய் உங்க போராளி குரல் இதுக்கெல்லாம் வராதா… ஓஓஓ இது நீங்க சொல்லி கொடுத்த விஷயம்ல உங்க படத்துல.. மறந்துட்டேன். என்று இயக்குனரை டேக் செய்து பதிவு செய்துள்ளார். இயக்குனர் மோகனின் கருத்திற்கு நடுநிலையாளர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திரெளபதி இயக்குனர் மோகனின் கேள்விக்கு பதில் வருமா என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு !

0

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு !

ரஜினி வேலு பிரபாகரனின் ஒரு இயக்குனரின் காதல் கதை என்ற படத்துக்கு உதவி செய்தது ஏன் என எழுத்தாளர் விநாயக முருகன் தன்  முகநூல் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் பெரியாரை அவமதிக்கும் வகையில் ரஜினி பேசியதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த யாரும் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மெளனமாக இருந்தனர். இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகர், இயக்குனர், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

எனக்கு அரசியல் தெரியாது! ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும்! திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை, யார் மனதையும் நோகும்படி பேசக்கூடியவர் அல்ல! ஏன் அவரை திட்டுபவர்களைக் கூட பதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர்! எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ அவதூறாக பேசக்கூடியவர் அல்ல! ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டதாக கூறுகின்றனர்.

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு !

அப்படி பேசக்கூடியவர் என்றால் 2006 ஆம் ஆண்டு பெரியாரின் தீவிரத்தொண்டரான இயக்குநர் திரு வேலு பிரபாகரன் அவர்கள், “பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது திரு வேலுபிரபாகரனே எதிர்பாராத பெரும் தொகையை கொடுத்து, அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி சார் உதவி செய்ய வேண்டும்? பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் திரு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்கள், எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். இதை இயக்குனர் வேலு பிரபாகரனும் ஆமோதித்துள்ளார்.

ஆனால் இது சம்மந்தமாக எழுத்தாளர் விநாயக முருகனின் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த பதிவு :-

பெரியார் திரைப்படம் வெளிவர நடிகர் ரஜினிகாந்த் ஐந்துலட்சம் பணஉதவி செய்ததாக சில செய்திகள் படித்தேன். அந்த திரைப்படம் வெளிவரும்போது வளசரவாக்கத்தில் இயக்குநர் வேலுபிரபாகரன் எதிர்வீட்டில்தான் நான் வசித்தேன். முதல்சுவரொட்டியை எங்கள் தெருவில்தான் ஒட்டினார்கள். அந்த திரைப்படத்தின் பெயர் ‘பெரியார்’ இல்லை. அது இயக்குநர் ஞானராஜசேகரன் இயக்கியது. அந்த திரைப்படம் வெளிவரும்போதும் சில பணப்பிரச்சினைகள். பெரியார்கழகத் தோழர்கள் சிலர் பணம் தந்து உதவினார்கள்.

அப்படியென்றால் வேலுபிரபாகரன் சொல்வது என்ன? அந்த திரைப்படத்தின் பெயர் காதல் அரங்கம். படம் ஆரம்பித்து சில பிரச்சினைகள். பிறகு படத்தின் பெயரை காதல் கதை என்று மாற்றினார்கள். பிறகு வேலுபிரபாகரனின் காதல்கதை என்று மாற்றினார்கள். அது ஒரு பிட்டுப்படம். லோபட்ஜெட் பி கிரேடு படங்கள் வெளிவந்து வெற்றிப்பெற்ற காலம் அது. வேலுபிரபாகரனின் காதல்கதை சில பிரச்சினைகளால் நின்றுபோனது. அந்தக்காலத்தில் வேலுபிரபாகரன் ரஜினியை கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தார். ரஜினி தன்னை யாராவது கடுமையாக விமர்சித்தால் அவர்களை அழைத்து சிறுபொருளாதார உதவி செய்து வாயை அடைத்துவிடுவார்.

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு !

தன்னை விமர்சித்த மனோரமாவுக்கு அருணாச்சலம் படத்தில் உதவி செய்தார். மன்சூரலிகானுக்கு படையப்பாவில் சிறுவேடம். இப்படித்தான் வேலுபிரபாகரனை அழைத்து சிறுபணஉதவி செய்தார். அதற்கே வேலுபிரபாகரன் காலில்விழுந்துவிட்டார். அன்றிலிருந்து ரஜினியை பாராட்டி பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார். ரஜினி நல்லவர். நான்தான் அவரை தவறாக புரிந்துக்கொண்டேன் என்று ஆனந்த விகடனில் பேட்டிக்கொடுத்தார். பிறகு இன்னொரு விஷயம் எல்லா பிட்டுப்படங்களிலும் இறுதியில் ஒரு டாக்டர் வருவார். சுயஒழுக்கத்தோடு வாழ்வதுப்பற்றி ஐந்து நிமிடங்கள் போதிப்பார். அதுபோல அந்தப்பிட்டுப்படத்தில் வேலுபிரபாகரன் வந்து ஐந்துநிமிடம் பெரியார் சொன்ன கற்புநெறிகளை பற்றி பேசுவார். மத்தபடி அந்தப்படத்துக்கும், பெரியாருக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. வேலுபிரபாகரன் அந்த படத்தில் நடித்த நடிகை ஹீரோயின் சிர்லி தாஸை திருமணமும் (ஏற்கனவே ஜெயதேவி எனும் நடிகை மற்றும் பெண் படத்தயாரிப்பாளரை புரட்சித்திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்) செய்துக்கொண்டார். ரஜினி உதவிசெய்தது பெரியார் திரைப்படத்துக்கு இல்லை. ஒரு பிட்டுபடத்துக்கு.

பழனிபாபா தீவிரவாதி கிடையாது; பழனிபாபாவை போல நானும் ஒரு தீவிரவாதி! சீமானின் இடியாப்ப சிக்கல் பேச்சு..!!

0

பழனிபாபா தீவிரவாதி கிடையாது; பழனிபாபாவை போல நானும் ஒரு தீவிரவாதி! சீமானின் இடியாப்ப சிக்கல் பேச்சு..!!

மதுரையில் நடந்த பழனிபாபாவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பழனிபாபாவை போல தானும் ஒரு தீவிரவாதிதான் என்று ஆவேசமாக பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் மூலமாக மத்திய அரசு நாடகம் போடுவதாக குற்றம் சாட்டினார். ரஜினியின் படங்கள் எல்லாமே வன்முறையை தூண்டும் படங்களாகவே இருப்பதாகவும், நிஜத்தில் வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று ரஜினி நடிப்பதாகவும் விமர்சித்தார். துக்ளக் படிப்பவர்கள் அறிவாளி என்று கூறிய ரஜினி, தான் நடித்த படம் ஓடுவதற்காக மண் சோறு சாப்பிடும் தனது ரசிகர்களுக்கு அறிவு வளர துக்ளக் வாங்கி கொடுக்க வேண்டும் என்று நகைச்சுவையாக சிரித்து கிண்டலடித்தார்.

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்று மேடையில் பேசினார். மேலும், பழனிபாபாவை தீவிரவாதியாக ஏற்க கூடாது என்று கூறிய சீமான், பழனிபாபாவை போல நானும் ஒரு தீவிரவாதிதான் என்று ரோலிங் ஆகி எல்லோரையும் குழப்பினார்.

கருத்தால் வீழ்த்தி இருந்தால் பழனிபாபா ஒரு தீவிரவாதி என்றும், அவரை வெட்டி வீழ்த்திய செயலே தீவிரவாத பயங்கரவாதம் என்றும் மீண்டும் இடியாப்ப சிக்கலாக பேசினார். பழனிபாபாவை தீவிரவாதியாக ஏற்க கூடாது என்று கூறிவிட்டு, பழனிபாபாவை போல நானும் ஒரு தீவிரவாதிதான் என்று பேசியது அங்கு இருந்த கூட்டத்தினரிடையே கையை தட்டலாமா வேண்டாமா என்கிற யோசிக்க வைத்துவிட்டது.

சிசிடிவி காட்சிகள் ஏன் இல்லை?மிஷ்கின் சொல்லும் அடடே விளக்கம்!

0

சிசிடிவி காட்சிகள் ஏன் இல்லை?மிஷ்கின் சொல்லும் அடடே விளக்கம்!

சைக்கோ படத்தில் கொலை நடக்கும் இடங்களில் ஏன் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை என்பது குறித்து இயக்குனர் மிஷ்கின் விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை விமர்சனம் செய்த ஒரு சில விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருப்பதாக கூறினர். குறிப்பாக இத்தனை கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரன் ஒரு சிசிடிவி கேமராவில் கூட மாட்டவில்லைஎன்றும் எங்குமே சிசிடிவி கேமரா இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார். அதுபோல ரசிகர்களும் இதுபோல படத்தில் உள்ள லாஜிக் குறைகளை குறிப்பிட்டு பேசி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள் ஏன் இல்லை?மிஷ்கின் சொல்லும் அடடே விளக்கம்!

இதற்கு மிஷ்கின் ரசிகர்கள் மற்றும் உதயநிதி போன்றவர்கள் விளக்கம் அளித்து வரும் வேளையில் மிஷ்கினே அதுபற்றி விளக்கமளித்துள்ளார். பட ரிலிஸுக்குப் பின் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இது சம்மந்தமாக கேள்வி எழுப்பப்பட்ட போது ’படத்துல சிசிடிவி இல்ல. அதனால் என்ன இப்போ? தியேட்டர்ல கொலைகாரன் கொலை எப்படி பன்றான்னு பாக்காம? ஏன் சிசிடிவிய தேடுறீங்க. ஒரு கொலைகாரன் கொலை செய்யும் போதோ அல்லது கடத்தும் போதோ அந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அப்புறப்படுத்திட்டுதான் செய்வான். அத நீங்கதான் புரிஞ்சிக்கணும். என்னுடைய துப்பறிவாளன் படத்துல சிசிடிவி காட்சிகள வச்சுதான் கதைய நகர்த்துனேன்.

அதனாலதான் சைக்கோ படத்துல் சிசிடிவி கேமரா சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்கிட்டோம். ஒவ்வொரு கொலைக்கும் சிசிடிவி காட்சிகள காட்டிட்டே இருந்தா உங்களுக்கே போரடிக்காதா? அதையெல்லாம் நீங்களேதான் புரிஞ்சுக்கணும்.  படத்துல நான் சொல்றது 50 சதவீதம். மீதி 50 சதவீதத்த நீங்கதான் புரிஞ்சுக்கணும்’ என விளக்கமளித்துள்ளார். கூறியுள்ளார்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்:வெற்றி வாகை சூடிய U-19 அணி !

0

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்:வெற்றி வாகை சூடிய U-19 அணி !

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதிக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை போட்டியின் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உலக 19 வயதிக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற கால் இறுதி சூப்பர் லீக் போட்டியில் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிதானமாக ஆடி 50 ஓவர்களில் 233 ரன்களை சேர்த்தது. அதிக பட்சமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜஸ்வால் 62 ரன்களை அடித்திருந்தார். இதையடுத்து 234 என்ற இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை தொடக்கம் முதலே இந்திய பவுலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

கார்த்திக் தியாகி வீசிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்களை இந்திய அணி சாய்த்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி ஆமை வேகத்தில் விளையாட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது. நடுவரிசை ஆட்டக்காரர்களான பேட்ரிக்-21 மற்றும் ஸ்காட்-35 ஆகியோர் சிறிது நேரம் தாக்குப் பிடித்தாலும் அவர்களால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியவில்லை. இதனால் ஆஸி 159 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 43.3 ஓவரில் ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் கார்த்திக் தியாகி அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணி வரிசையாக வெற்றி வாகை சூடி வருவது போல 19 வயதுக்குட்பட்ட அணியும் இந்த தொடரில் வரிசையாக வெற்றிகளைப் பெற்று வருகிறது. அதனால் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

கொலைப்பசியில் சுற்றிய புலி:தனியாக மாட்டிக்கொண்ட மனிதன்!என்ன நடந்தது பாருங்கள்!

0

கொலைப்பசியில் சுற்றிய புலி:தனியாக மாட்டிக்கொண்ட மனிதன்!என்ன நடந்தது பாருங்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் புழங்கும் பகுதிக்குள் வந்த புலி ஒன்றிடம் மனிதன் ஒருவர் தனியாக மாட்டிக்கொண்டு தப்பித்த சம்பவம் நடந்துள்ளது.

மகாராஹ்டிரா மாநிலத்தின் பந்தாரா மாவட்டத்தில் வனத்தில் இருந்து புலி ஒன்று வெளியே வந்து சுற்றிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து பீதியான மக்கள் கூட்டமாக சேர்ந்து அதை விரட்ட ஆரம்பித்துள்ளனர். அதனால் அந்த புலியும் பதற்றமடைந்து சுற்றிக் கொண்டிருந்தது.

அப்படிப்பட்ட புலியிடம் தனியாக ஒரு மனிதர் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும்? ஆம் அப்படி ஒரு நபர் அந்த நபரிடம் தனியாக மாட்டிக் கொண்டார். ஆனால் தனது உயிரைக் காக்க அவர் எடுத்த சமயோஜித முடிவு அவரது உயிரையே காப்பாற்றியுள்ளது.

புலி அவர் அருகில் வரும் போது அதை எதிர்த்து எதுவும் செய்யாமல் இறந்து போனவர் போல அசையாமல் அப்படியே கிடந்துள்ளார். அவரை வந்து சீண்டிப்பார்த்த புலி அவரையே சுற்றி வந்தது. ஆனால் அந்நபர் தன் உடலில் சிறு அசைவைக் கூட காட்டவில்லை. இந்தக் காட்சியைப் பார்த்த கூட்டமாக இருந்த மக்கள் சத்தங்களை எழுப்பி புலியை பயமுறுத்த ஒரு கட்டத்தில் புலி பயந்து ஓட ஆரம்பித்தது. இதையடுத்து மக்கள் அந்த புலியைத் துரத்தி விரட்டினர்.

புலி வேட்டையாடாமல் இறந்து போனவற்றை தனது உணவாக உண்ணாது என்பதைப் புரிந்து கொண்ட அந்நபர் புத்திசாலித் தனமாக தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார். இந்த காட்சிகளைக் கொண்ட பல்வேறு நபர்கள் எடுத்த வீடியோக்கள் சமுக வலைதளங்களில் இப்போது வைரலாகப் பரவி வருகிறது.

மீண்டும் விஜய்சேதுபதி படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்: நாயகி யார் தெரியுமா?

0

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் உருவான ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்காக நயன்தாராவுக்கு விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் திடீரென இந்த படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய்சேதுபதி படத்தை இயக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளார். இந்த படத்தை ’மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்து வரும் லலித் என்பவர் தயாரித்து இருப்பதாகவும், இந்த படத்திலும் நயன்தாரா தான் ல் நாயகி என்றும் கூறப்படுகிறது

விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி, நயன்தாரா, அனிருத் ஆகிய நால்வரும் மீண்டும் இணையும் இந்த படமும் ‘நானும் ரெளடிதான்’ போலவே நல்ல வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய தகவல்

0

சிவகார்த்தியன் நடித்த ஹீரோ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ’இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்

இந்த திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டது என்பதும் தற்போது இந்த படம் புத்துயிர் பெற்று மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் இயக்கும் இந்த படம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியதை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் 24ஏம் ஸ்டுடியோஸ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக இந்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தின் டைட்டில் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழக அரசை விமர்சித்த ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு! இயலாமையில் ஸ்டாலின் புலம்புவதாக அமைச்சர் பேட்டி!!

0

தமிழக அரசை விமர்சித்த ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு! இயலாமையில் ஸ்டாலின் புலம்புவதாக அமைச்சர் பேட்டி!!

தமிழக அரசின் சார்பில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீது இரண்டு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை விட தமிழகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்த காரணத்தால், மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து நல்லாட்சி விருதுகளை பெற்றிருந்தது.

இந்த விருதினை விமர்சிக்கும் விதமாக ஸ்டாலின் கொடுத்த பேட்டி ஒன்று முரசொலியின் வாயிலாக கடந்த மாதம் வெளியிடப்பட்டது. மேலும், விருது கொடுத்தவர்களை கொண்டு வந்து அடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாக மாறியது. இதற்கு பதிலடி தரும் விதமாக அதிமுகவின் மீள்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் பேட்டி அளித்திருந்தார்.

தமிழகத்தின் நல்லாட்சி விருது விமர்சனம் மற்றும் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தில் அவதூறு கருத்து கூறியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்படுள்ளது.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, கல்லுப்பட்டி பகுதி ஒருவழித்தட சாலையை இருவழி சாலையாக மாற்றி அமைக்கும் திட்டத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பின்னர், நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசியிருப்பது அவரது இயலாமை மற்றும் நிர்வாக திறமையின்மையை காட்டுவதாக கூறினார்.