Home Blog Page 5801

ஆப்பி பர்த்டே டூ யூ..!! ஆங்கிலத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சீமான் குடும்பம்!!

0

ஆப்பி பர்த்டே டூ யூ..!! ஆங்கிலத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சீமான் குடும்பம்!!

தமிழர்களுக்கு தாய் மொழிப்பற்று, இனப்பற்று அறவே இல்லை. தமிழன் தூய தமிழை பேசாமல் ஆங்கிலமும், தமிழும் கலந்த தங்கிலீஷ் மொழியில் பேசுகிறான், உணவில் கலப்படத்தை விரும்பாத தமிழனுக்கு மொழியில் மட்டும் கலப்படம் எதற்கு..?

ஆப்பி பர்த்டே டூ யூ..!! ஆங்கிலத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சீமான் குடும்பம்!!

தமிழ்நாட்டில் இருக்கும் கடைகளின் பெயர்கள் தமிழில் இருக்கிறதா..? ஆங்கிலத்தில் கையெழுத்து போடுகிறாயே நீ ஆங்கிலேயனா..?  என்று தனது கட்சியின் அரசியல் மேடைகளில் தமிழுக்காக ஆவேசமாக முழங்கியவர் சீமான்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சீமானின் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட சீமான் தம்பிகளும் குடும்பத்தாரும் “ஆப்பி பர்த்டே டூ யூ”  என்று ஆங்கிலத்தில் பிறந்தநாளை கொண்டாடினார்கள். கடைசியில் தமிழில் சொல்லுங்கள் என்று சீமான் சொன்ன வீடியோ இணையத்தில் விமர்சனமாகி வருகிறது.

ஊருக்கு மட்டும் உபதேசம், என்பது போல் தமிழ், தமிழன் என்று பொதுவில் பேசிவிட்டு ஆங்கிலத்தில் பிறந்த நாள் கொண்டாடியதை சமூக வலைதளங்களில் சிலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதிலேயே குழந்தை பிறந்ததா? சர்ச்சையை கிளப்பிய வாலிபர்!

0

ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதிலேயே குழந்தை பிறந்ததா? சர்ச்சையை கிளப்பிய வாலிபர்!

நடிகைகள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது அந்த வகையில் உலக அழகி என்ற பட்டம் பெற்ற நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு எதிராகவும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. ஐஸ்வர்யா ராய் ஹிந்தி, தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் மற்றும் தாயார் பிருந்தா ஆகும்.

தமிழில் மணிரத்தினம் இயக்கிய இருவர் என்ற படத்தின் மூலமாக தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். உலக அழகி என்பதால் இவருடைய அழகிற்கும்,நடிப்பிற்கும் நிறைய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. திரைத்துறையில் கலக்கி கொண்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் மங்கல் ஊரை சேர்ந்த 31 வயது நிரம்பிய வாலிபரான சங்கீத்ராய் குமார் என்பவர் தான் ஐஸ்வர்யா ராய்க்கு எதிராக சர்ச்சையை கிளைப்பியுள்ளார். 31 வயதாகும் இந்த சங்கீத்ராய் குமார் கடந்த ஆண்டே நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு எதிராக அவர் தான் தன்னை பெற்றெடுத்த தாய் என்று சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பது, நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் செயற்கை கருத்தரித்தல் மூலமாக லண்டனில் 1988 ஆம் ஆண்டு என்னை பெற்றெடுத்தார். ஐஸ்வர்யா ராய் என்னை பெற்றெடுக்கும் போது அவருக்கு 15 வயது தான் ஆனது. 

ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதிலேயே குழந்தை பிறந்ததா? சர்ச்சையை கிளப்பிய வாலிபர்!

பின்னர் எனது அம்மா ஐஸ்வர்யா ராய்க்கு 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனுடன் திருமணம் ஆனது. ஆனாலும், அவர் தற்போது தனியாக தான் வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் என்னுடன் வசிக்க வேண்டும். என் அம்மாவை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். என் அம்மாவின் செல்போன் நம்பரையாவது எனக்கு தாருங்கள். எனக்கு என் அம்மா வேண்டும் என்றும் அந்த வாலிபர் கூறியிருக்கிறார். ஆனால், அந்த வாலிபர் சங்கீத்ராய் குமாருக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் தான் அவரது அம்மா என்று உறுதியாக நிரூபிக்க எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த வாலிபர் மீண்டும் தற்போது ஒரு புயலை கிளப்பியுள்ளார். இது குறித்து அந்த வாலிபர் மீண்டும் சமீபத்தில் பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, இரண்டு வயது வரை என்னை என் பாட்டி பிருந்தா மற்றும் தாத்தா கிருஷ்ணராஜ் ஆகியோர் தான் பார்த்துக் கொண்டார். பின்னர் என் தந்தை வடிவேலு ரெட்டி விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்று விட்டார். நான் அங்கு தான் வளர்ந்தேன். அந்த நேரத்தில் எனது உறவினர்கள் என்னுடைய பிறப்பு சான்றிதழ்களை எல்லாமே அழித்து விட்டார்கள். தற்போது நான் மும்பையில் என் அம்மா ஐஸ்வர்யாராயுடன் வசிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

சங்கீத்ராய் குமார் சமீபத்தில் கொடுத்த அந்த பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் என்னுடைய அம்மா என்று உறுதியாக கூறியிருக்கிறார். இந்த தகவலானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த சர்ச்சையான கருத்து குறித்து சம்பந்தப்பட்ட ஐஸ்வர்யாராயும், அபிஷேக் பச்சனும் ஏன் இன்னும் எந்தவிளக்கமும் கொடுக்கவில்லை என்று பலர் சந்தேக கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்

0

புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை அவ்விரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாட்டின் சந்தையும் தொடர்ந்து இறங்கு முகமாகவே சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனை ஓரளவு குறைந்திருப்பதால் கச்சா எண்ணெய் விலையும் சற்று குறைந்திருக்கிறது. இது மட்டுமில்லாமல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது அது 70.82 ரூபாய் என்ற அளவில் இறக்கம் கண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிந்த வர்த்தகத்தில் இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 41,599 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி முடிவடைந்தது. அதனையடுத்து இன்று காலை ஆரம்பித்த வர்த்தகத்தில் தொடக்க நிலையில் சென்செக்ஸ் 41,788 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,859 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி நிறைவடைந்துள்ளது.

அதாவது நேற்று முடிவடைந்த புள்ளியை விட, இன்று முடிவடைந்த வர்த்தகமானது 259 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதுபோலவே மும்பை பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 12,296 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,329 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி முடிவடைந்திருக்கிறது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸின் 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், மீதமுள்ள 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயிள்ளது. பிஎஸ்இ-யில் வர்த்தகமான 2,711 பங்குகளில் 1,545 பங்குகள் ஏற்றத்திலும், மீதமுள்ள 984 பங்குகள் இறக்கத்திலும், 182 பங்குகள் எந்தவொரு விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகியுள்ளன. இதில் 2,711 பங்குகளில் 79 பங்குகளின் விலையானது 52 வார அதிகத்திலும், 82 பங்குகளின் விலையானது 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகியுள்ளது.

குறிப்பாக இன்ஃபோசிஸ்,கோல் இந்தியா, கெயில்,இண்டஸ் இண்ட் பேங்க், பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் இன்று ஏற்றத்தில் வர்த்தகமாகியுள்ளன. அதேபோல டிசிஎஸ்,யெஸ் பேங்க், யூபிஎல், பார்தி இன்ஃப்ராடெல், ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின.

 

உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு!

0

உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு!

கேரளா மற்றும் கன்னியாகுமரி அருகே உள்ள களியக்காவிளையில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அவர்களின் குடும்பத்தினரிடம் 1 கோடி ரூபாய் நிவாரண தொகையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனைச் சாவடியின் பணியின் போது சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றாவளிகளை பிடிக்க தமிழக காவல்துறையின் சார்பாக 10 தனிப்படைகள் உருவாக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு!

உதவி ஆய்வாளரின் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், தமிழகத்தில் பெருமளவு பேசப்படவில்லை என்பதே உண்மை. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பணியின் போதே உயிர்விட்ட வில்சன் அவர்களின் இறப்பு பலருக்கு வருத்தம் தரக்கூடிய சம்பவமாகும்.

பொங்கலோ.. பொங்கல்..!! தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடக்கம்..!!!

0

பொங்கலோ.. பொங்கல்..!! தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடக்கம்..!!!

உலகெங்கும் வாழும் தமிழர்களின் பாரம்பரியமான திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது. பொங்கல் என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான் புத்தாடை, சூரிய வழிபாடு, விவசாய மாடுகளுக்கு கொம்பு சீவி வண்ணம் அடிப்பது, வீட்டை அழகு படுத்துவது, கோலம் போடுவது, வாகனங்களை சுத்தமாக்குவது என்று பண்டிகையின் நான்கு நாட்களுமே குதூகலமாக இருக்கும்.

பொங்கலோ.. பொங்கல்..!! தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடக்கம்..!!!

பழையன கழிந்து புதியன புகுதலை போகிப் பண்டிகை எனவும், பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைப்பதை பெரும் பொங்கல் எனவும், தமிழர்களின் மரபு விவசாயத்தின் தனி அங்கமான மாடுகளை சிறப்பித்து வழிபடுவது மாட்டுங் பொங்கல், உழவர்களின் பெருமைகளையும், மேன்மைகளையும் கொண்டாடும் கடைசி நாளை உழவர் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகிறது.

பொங்கலோ.. பொங்கல்..!! தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடக்கம்..!!!

நகரங்களை விட கிராமங்களில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆடிப்பட்டம் தேடி விதைப்பது கிராமங்களில் தான் அதனாலே பொங்கல் பண்டிகை கிராமங்களில் மிக சிறப்பாக பண்பாடு கலாச்சாரம் மாறாமல் நடந்து வருகிறது.

பொங்கலோ.. பொங்கல்..!! தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடக்கம்..!!!

பொங்கல் பண்டிகையையொட்டி பானை, கரும்பு, மஞ்சள், மாட்டுக் கயிறு, கிழங்கு வகைகள், அரிசி போன்ற பல்வேறு பொருட்களின் விலை பொங்கல் பண்டிகையின் காரணமாக உயர்ந்துள்ளது. சொந்த பந்தங்களோடு இந்த பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்.

செல்போன் திருட்டில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள் ! டிக்டாக் வெளியிட்டு போலிஸில் சிக்கிய சம்பவம் !

0

செல்போன் திருட்டில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள் ! டிக்டாக் வெளியிட்டு போலிஸில் சிக்கிய சம்பவம் !

சென்னையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட குழு ஒன்று டிக்டாக் வீடியோக்களை வெளியிட அதை வைத்துப் போலிஸார் அவர்களைப் பிடித்துள்ளனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும் மைனர் சிறுவர்கள் ஈடுபடும் குற்றச்செயல்கள் அதிகரிப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றங்களுக்கு போதை பழக்கத்துக்கு அடிமையான சிறுவர்கள்தான் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.

இது போன்றா சம்பவம் ஒன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன் நடந்தது.  ஐடி ஊழியர் ஒருவரைத் தாக்கி கும்பல் ஒன்று அவரிடம் இருந்த செல்போனைத் திருடி சென்றது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை வைத்து போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சம்மந்தப்பட்ட கும்பல் தி நகரிலும் இதுபோல ஒரு சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் வெளியிட்ட டிக்டாக் வீடியோ ஒன்று போலீஸாரின் கவனத்துக்கு வந்தது. அதை வைத்து போலீஸார் அந்த கும்பலை பிடித்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அனைவரும் 16, 17 வயதுடைய சிறுவர்கள். அவர்களைக் கைது செய்த போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் போதைக்கு அடிமையான அவர்கள் போதை மாத்திரைகள்  வாங்க செல்போன் திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டனர் எனப்து  தெரிய வந்துள்ளது. சிறுவர்களுக்கு போதை பொருட்களை விற்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

முருகதாஸூம் ரஜினியும் எத்தனை நாள் சிறையில் இருந்தார்கள் ?சீமான் ஆவேசம் !

0

முருகதாஸூம் ரஜினியும் எத்தனை நாள் சிறையில் இருந்தார்கள் ?சீமான் ஆவேசம் !

தர்பார் படத்தில் வைக்கப்பட்டு இருந்த காசு இருந்தால் சிறையில் இருந்து வெளியே போய் ஷாப்பிங் கூட செய்யலாம் என்ற வசனம் தொடர்பாக சீமான் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக கலவையான விமர்சனங்களையும் சுமாரான வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு காட்சிக்காக இப்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

படத்தில் சிறையில் செல்போன் உபயோகிப்பது போன்ற காட்சி ஒன்றில் ’காசு, பணம் இருந்தால் சிறையில் இருந்து வெளியே போய் ஷாப்பிங் கூட செய்யலாம்’ என்று ஒரு வசனம் வைக்கப்பட்டிருந்தது.  இது அமமுக தலைவர் சசிகலாவை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து அடுத்த நாளே அந்த வசனம் உடனடியாக படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது பற்றி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது ‘காசு இருந்தால் பணம் இருந்தால் சிறைக்குள் இருந்தாலும் வெளியே சென்று பொருள்களை வாங்கலாம் என்ற விமர்சனத்தை நான் ஏற்கவில்லை.

தம்பி முருகதாஸ், ரஜினி எல்லாம் எவ்வளவு காலம் சிறையில் இருந்தார்கள் என்று தெரியவில்லை. உண்மையிலேயே அவர்கள் வெளியே வந்தார்கள் என்று நிரூபிக்கபட்டால் நீங்கள் பேசலாம். அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் எப்படி பேசமுடியும்.’எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கமாக அரசியல் கருத்து பேசும் படங்களுக்கு ஆதரவளிக்கும் சீமான் ரஜினி படம் என்பதால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக பேச்சு எழுந்துள்ளது. அதுபோல சீமானின் இந்த திடீர் அமமுக ஆதரவு அவரது ஆதாரவாளர்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின்! தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை

0

பொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின்! தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை

தமிழக அரசியல் கட்சிகளில் சாதி சார்புடையது சாதி மதமற்றது என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக சாதி மதமற்ற அரசியல் செய்வதாக கூறும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்து மதத்திற்கு மட்டுமே எதிராகவும், மற்ற சிறுபான்மையினர் மதங்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளன.

இதிலும் குறிப்பாக திமுகவின் மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில் அந்த விமர்சனங்களை எல்லாம் உண்மையாக்கும் வகையில் தான் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதாவது கடந்த காலங்களில் சிறுபான்மை மதத்தினருக்கோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்களுக்கோ எதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக திமுக தலைமை குரல் கொடுக்கும்.

ஆனால் அதே சிறுபான்மை மக்களால் மற்ற பிரிவை சார்ந்தவர்கள் பாதிக்கப்படும் போது அதை கண்டு கொள்வதுமில்லை அல்லது கண்டிக்கவும் துணிவதில்லை திமுக தலைமை. கடந்த காலங்களில் சிறுபான்மையினர் கொண்டாடும் கிறிஸ்துமஸ், இஸ்லாம் மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் திமுக தலைவர்கள் இந்து மத பண்டிகையான தீபாவளி,சரஸ்வதி பூஜை மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதில்லை.

இவ்வாறு இந்துக்களின் பண்டிகைகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் திமுக தலைவர் பொங்கல் விழாவை மட்டும் தமிழர்கள் விழா என்ற பெயரில் கொண்டாடியுள்ளார்.இந்நிலையில் இந்த விழாவை கொண்டாடியதிலும் ஸ்டாலின் அரசியல் சூழ்ச்சி செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

பொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின்! தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை

அதாவது சில தினங்களுக்கு முன் சென்னை கொளத்தூரில் உள்ள அனித அச்சீவர்ஸ் அகாடமி வளாகத்தில் அப்பகுதியிலுள்ள திமுகவினரின் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா நடந்தது. இதில் கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்காவும் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பொங்கல் பரிசை வழங்கிய துர்கா ஸ்டாலின் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு பொங்கல் பரிசை வழங்கிய புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதை கண்ட எதிர்க்கட்சியினர் பொங்கல் விழாவிலும் ஸ்டாலின் தன்னுடைய அரசியல் சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டதாக விமர்சித்து வருகின்றனர்.

தற்போதைய சூழலில் திமுக தலைவர் எது செய்தாலும் சர்ச்சையாகி வருவது அவரது தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் சும்மா இருந்தால் கூட போதும் என பலர் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டனர்.

மருத்துவர் ராமதாஸ் கூறும் உலகின் எட்டாவது ஒன்பதாவது பத்தாவது அதிசயம்

0

மருத்துவர் ராமதாஸ் கூறும் உலகின் எட்டாவது ஒன்பதாவது பத்தாவது அதிசயம்

தமிழ்நாடு மின்வாரிய தேர்வு அறிவிப்பின் ஒருவர் தேர்வெழுதி வெற்றி பெற்று அரசு பணிகளில் சேருவது என்பது உலகின் எட்டாவது ஒன்பதாவது பத்தாவது அதிசயமாக தான் இருக்க முடியும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “மின்வாரிய பணியாளர்கள் தேர்வு: வயது வரம்பை உயர்த்த வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்பயன்பாட்டு அளவு கணக்கீட்டாளர், உதவிப் பொறியாளர்கள், இளநிலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கு 2400 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது. எனினும், அப்பணிகளுக்கான வயது வரம்பு காலத்திற்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்படாதது பலரின் வாய்ப்புகளை பறித்திருக்கிறது.

மின்சார வாரியத்தில் கணக்கீட்டாளர் பணிக்கு 1300 பேரும், உதவிப் பொறியாளர் பணிக்கு 600 பேரும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அனைவருக்கும் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பை பொறுத்தவரை பொதுப்பிரிவினருக்கு 30 வயது, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 32 வயது, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர இளநிலை உதவியாளர் (கணக்குகள்) பணிக்கு 500 பேர் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் பொதுப்பிரிவினருக்கு 30 வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.

உதவிப் பொறியாளர், கணக்கீட்டாளர் பணிகளில் அனைத்துப் பிரிவினருக்கும், இளநிலை உதவியாளர் பணிக்கு பொதுப்பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு எவ்வகையிலும் நியாயமற்றது. போட்டிகள் நிரம்பிய இன்றைய சூழலில் போட்டித்தேர்வுகளை எழுதி, நேர்காணலில் வெற்றி பெற்று பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள்ளாகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதிலும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்குள்ளும் அரசு பணிகளில் சேருவது என்பது உலகின் எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது அதிசயமாகத்தான் இருக்க முடியும். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் பொறியியல் படிப்பை முடித்து பட்டம் பெறுகின்றனர்; சுமார் 4 லட்சம் பேர் கலை மற்றும் அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்பை முடிக்கின்றனர். ஆனால், இவர்களில் ஒரு விழுக்காட்டினருக்குக் கூட ஆண்டு தோறும் அரசு வேலை கிடைப்பதில்லை. அதேபோல், அரசு பணிகளுக்கு ஆட்தேர்வு ஆண்டு தோறும் நடப்பதும் இல்லை. இளநிலைப் பட்டம் பெற்ற ஒருவர் 30 வயதுக்குள் இரு முறையும், 35 வயதுக்குள் மூன்று முறையும் அரசு பணிக்கான போட்டித் தேர்வை எழுதுவது மிகப்பெரிய வரம்.

உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது பொதுப்பிரிவினர் 30 வயதுக்குப் பிறகும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குப் பிறகும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்குப் பிறகும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும். மின்வாரியப் பணிகளுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்புகள் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நிர்ணயிக்கப்பட்டவை அல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில், மேற்கண்ட 3 பணிகளுக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதி பொறியியல் படிப்பு அல்லது கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பட்டப்படிப்புகள் ஆகும். எந்த வகுப்பிலும் தோல்வியடையாத ஒரு மாணவர் பட்டப்படிப்பை முடிக்கவே 21 அல்லது 22 வயதாகி விடும். ஆனால், இந்த 3 பணிகளுக்கும் குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 22 வயதில் தான் ஒருவரால் கல்வித்தகுதியையே பெற முடியும் எனும் சூழலில், அவரை 18 வயதில் தேர்வெழுத அனுமதிப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயலாகும்.

மின்வாரியத்தின் சார்பில் கடந்த ஆண்டு கேங்மேன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட போது, அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 37 ஆகவும், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு 40 ஆகவும் இருந்தது. ஒரே ஆண்டில் அதிகபட்ச வயது வரம்பை அனைத்துப் பிரிவினருக்கும் தலா 5 ஆண்டுகள் குறைந்தது நியாயமற்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சில போட்டித் தேர்வுகளை எழுத இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக உள்ளது. பல தேர்வுகளுக்கு வயது வரம்பு இல்லை.

மேற்கண்ட அம்சங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து மின்வாரியப் பணியாளர் தேர்வில் அதிக பட்ச வயது வரம்பை நிர்ணயிப்பதில் இழைக்கப்பட்டுள்ள அநீதியை அரசு களைய வேண்டும். அனைத்து பணிகளுக்கும் அதிகபட்ச வயதை குறைந்து 5 ஆண்டுகள் உயர்த்த மின்வாரியம் முன்வர வேண்டும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டாரோடு இணைந்த தனுஷ் – பாலிவுட்டில் அடுத்த இன்னிங்ஸ் !

0

ரஜினியின் வில்லனோடு நடிக்கும் தனுஷ் – பாலிவுட்டில் அடுத்த இன்னிங்ஸ் !

இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கும் புதிய படத்தில் தனுஷுடன் அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டில் ’கான்’ சூப்பர் ஸ்டார்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அக்‌ஷய் குமார். இவர் நடிக்கும் படங்கள் வரிசையாக ஹிட்டடித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார்.

சூப்பர் ஸ்டாரோடு இணைந்த தனுஷ் – பாலிவுட்டில் அடுத்த இன்னிங்ஸ் !

இந்நிலையில் இப்போது ரஜினியின் மருமகன் தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தில் அவருடன் இணைந்து நடிக்க இருக்கிறார் அக்‌ஷய். இந்த படத்தை தனுஷின் பாலிவுட் அறிமுகப் படமான ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்க இருக்கிறார்.

சாயிப் அலிகானின் மகள் சாரா அலிகான் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஹ்ருத்தி ரோஷன் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்காததால் அந்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.

பாலிவுட்டில் ஷமிதாப் படம் தோல்வி அடைந்ததை அடுத்து தனுஷ் இந்தி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். ஆனால் இப்போது வலுவான கதையம்சம் கொண்ட படம் என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பெயர் மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரம் இன்னும் வெளியாகவில்லை. திறமையான நடிகர்கள் இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.