முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இயக்குனர் ஏஎல் விஜய் அவர்களால் ’தலைவி’ என்ற பெயரிலும் இயக்குனர் பிரியதர்ஷினின் அவர்களால் ’தி அயர்ன் லேடி’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது
இந்த நிலையில் நேற்று முன்தினம் ’தலைவி’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியான நிலையில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்த கங்கனா ரனாவத்தை நெட்டிசன்கள் கேலி செய்தனர். ஜெயலலிதாவுக்கும் ரனாவத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை என்றும், ஜெயலலிதா படத்தை எடுக்க சொன்னால் தீபாவின் படத்தை எடுத்து வைத்துள்ளார் விஜய் என்றும் நெட்டிசன்கள் கேலி செய்தனர்
இந்நிலையில் ‘தி அயர்ன் லேடி’ படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் நடிகை நித்யா மேனன் பேட்டி ஒன்றில் கூறியதாவது: “ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் இருவருமே பெங்களூருவில் படித்துள்ளோம். பழக்க வழக்கம், பேசும் விதம், ஒழுக்கம், மேனரிசம் ஆகியவைகளில் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும்.
ஜெயலலிதா போன்றே நானும் பிடிக்காத விஷயங்களை பட்டென்று சொல்லி விடுவேன். ஜெயலலிதாவிடம் இருந்த நல்ல குணங்கள் என்னிடமும் உள்ளது. அதனால் ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நம்புகிறேன். அந்த வேடத்தில் சிறப்பாக நடிக்க எனது அதிகபட்ச ழைப்பை கொடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.
ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் இரண்டு தனுஷ் திரைப்படங்கள்
தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சுருளி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து அவர் பரியேறும்பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது
இந்த நிலையில் தனுஷ் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் நீண்ட கால தாமதத்துக்குப் பின் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ’The Extraordinary Journey Of The Fakir’ என்ற திரைப்படமும் அதே நவம்பர் 29ஆம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது. சீனாவில் 13 ஆயிரம் திரையரங்குகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக இந்த படத்தின் இயக்குநர் தனது சமூக வலைப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்
மேலும் சீனாவில் வெளியாகும் தனுஷின் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தனுஷின் இந்த படத்திற்கும் வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
ஓபிஎஸ் அவர்களை அப்படி சொல்ல என்ன காரணம்? குருமூர்த்தி விளக்கம்
நேற்று திருச்சியில் நடைபெற்ற துக்ளக் விழா ஒன்றில் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களை ஆண்மை இல்லாதவர் என்று குருமூர்த்தி பேசியதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’முதலில் குருமூர்த்தி அவர்கள் ஆண்மை உள்ளவர்தானா என்பதை பார்க்க வேண்டும் என்றும், ஆண்மை இல்லாத ஒருவர் தான் இன்னொருவரை பார்த்து ஆண்மை இல்லாதவர் என்று கூறுவார் என்றும் கூறியிருந்தார்
இந்த நிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, தான் பேசியது என்ன? என்பது குறித்து விளக்கமளித்ததோடு தான் பேசிய ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு தவறாக விமர்சனம் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமாருக்கு விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து குருமூர்த்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ஓபிஎஸ்சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலா விடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை
இதை ஏற்கனவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே, ஜெயாவை ஆதரித்த துக்ளக் அவரே ஏற்ற சசியை எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். பதில் கூறும்போது ஓபிஎஸ் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன்.
எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்து பரப்புவது கண்ணியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓபிஎஸ் மேல் தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து. இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்.
குருமூர்த்தி பேசியதற்கு ஓபிஎஸ் அவர்களே இதுவரை எந்த விமர்சனமும் தெரிவிக்காத நிலையில் ஜெயகுமார் திடீரென குருமூர்த்தியை கண்டனம் செய்துள்ள நிலையில் இந்த விளக்கத்தை ஏற்று அவர் வருத்தம் தெரிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
பாப் பாடகி வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு: பெரும் பரபரப்பு
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாப் பாடகி ஒருவர் வீட்டில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் திருட்டு போயிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி இக்கி அசலியா என்பவர் ஆஸ்திரேலியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர். இவர் அடிக்கடி அமெரிக்காவுக்கு பாப் பாடல்கள் பாடுவதற்காக அமெரிக்கா சென்று வருவதால், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கினார். கடந்த சில மாதங்களாக இவர் அமெரிக்காவில் தனது காதலருஅன் வசித்து வருகிறார் என்பதும் இக்கி அசலியாவின் காதலரும் ஒரு பிரபல ராப் பாடகர் என்பதும் குறிப்பிடத்தகக்து
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இரவு இக்கி அசலியா மட்டும் தனியாக வீட்டில் இருந்தபோது வீட்டின் பின்பக்கமாக வந்த சில மர்ம மனிதர்கள் இக்கி அசலியாவின் விலையுயர்ந்த தங்க, வைர, நகைகளை திருடி சென்றனர். திருடு போன நகைகளின் மதிப்பு சுமார். ரூ.2 கோடியே 62 லட்சத்து 76 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த திருட்டு சம்பவத்தை அ|றிந்த அதிர்ச்சி அடைந்த இக்கி அசலியா மற்றும் அவரது காதலர்கள் இருவரும் இணைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா: பாமக புறக்கணிப்பு! காரியத்தை சாதித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்
கடலூரில் இன்று நடைபெறவுள்ள ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழாவில் கூட்டணி கட்சியான பாமக புறக்கணிக்கப்பட்டது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்று விழா நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவிற்கான அழைப்பிதழ் கடைசி கட்டத்தில் வேண்டா வெறுப்பாக நேற்று தான் பாமகவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இதுவே இந்த சர்ச்சைக்கு ஆரம்பமாக இருந்தாலும் மேலும் சில காரணங்களும் பாமகவை அதிமுக புறக்கணிப்பது உறுதி என்பதை தெளிவாக காட்டுகிறது.
மேலும், வன்னியர் சமுதாய தலைவரான ராமசாமி படையாச்சி யார் நினைவு மண்டப திறப்பு விழா அழைப்பிதழில் அந்த சமுதாயத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவரும், அதிமுக கூட்டணி கட்சியான பாமகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அன்புமணி ராமதாஸ் பெயர் தவிர்க்கப்பட்டு, அந்த சமுதாயத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன் பெயர் அச்சிடப்பட்டுள்ளது தான் பாமக தொண்டர்களை சூடேற்றியது.
இதற்கு முன் ராமசாமி படையாச்சியார் படம் திறக்கப்பட்ட போது, பாமகவிற்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட முக்கியத்துவம் கூட தற்போது நடைபெறும் நினைவு மண்டப திறப்பு விழாவில் கொடுக்கப்படவில்லை என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்கது.
வன்னிய சமுதாயத் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான ராமசாமி படையாச்சியாரின் நினைவு மண்டப திறப்பு விழா இன்று கடலூரில் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அந்த மண்டபத்தை திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட நிர்வாகமும், அமைச்சர் எம்.சி.சம்பத்தும் செய்து வருகிறார்கள்.
இன்று நடைபெறவுள்ள படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா நிகழ்ச்சி அரசு விழா என்பதால் அதற்கான அழைப்பிதழில் கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பெயர் போடப்பட்டுள்ளது. மேலும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யான திருமாவளவன் பெயரும் அழைப்பிதழில் இடம்பெற்றிருப்பது தான் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அன்புமணி ராமதாஸ் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது இரு கட்சிகளுக்கு இடையேயான உரசலை தெளிவாக உணர்த்துகிறது.
மேலும், ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா இன்று நடைபெறவுள்ள நிலையில் விழாவுக்கான அழைப்பிதழ் நேற்று தான் பாமகவிற்கு தரப்பட்டுள்ளது. விழா இன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கு ஒரு நாள் முன்பாக நேற்று கடமைக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டதை பாமக தலைமை ரசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இன்று நடைபெறவுள்ள விழாவில் கட்சியின் சார்பில் பாமக தலைவர் கோ.க.மணி மட்டும் பங்கேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த மக்களவை மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக மக்களவை தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற முடியவில்லை என்றாலும் தமிழக அளவில் அதிமுக ஆட்சிக்கு தேவையான உறுப்பினர்களை அப்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் பெற்றது. இதற்கு வட தமிழகத்தில் பலமாக உள்ள பாமகவின் வாக்கு வங்கி தான் மிக முக்கியமான காரணம் என்று அதிமுக தரப்பே ஏற்று கொண்டது.
அதன் பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக vs திமுக என்பதை விட பாமக vs திமுக என்ற அளவிற்கு அதிமுகவிற்கு ஆதரவாகவும்,திமுகவிற்கு எதிராகவும் பாமக செயல்பட்டது. இந்நிலையில் போதுமான அளவிற்கு பாமக வாக்கு வங்கியை பயன்படுத்தி கொண்ட எடப்பாடி பழனிசாமி தற்போது பாமகவை கழட்டி விட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதை உறுதி செய்யும் வகையில் தான் இந்த புறக்கணிப்பு ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
குடியிருப்புகளில் விழுந்த விமானம்: 27 பேர் பரிதாப பலி!
காங்கோ நாட்டில் குடியிருப்பு பகுதியில் விமானம் ஒன்று விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த 27 பேர் பரிதாபமாக பலியாகினர். இன்னும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
கிழக்கு டெமாக்ரடிக் ரிபப்ளிக் காங்கோ என்ற நாட்டில் உள்ள கோமா என்ற நகரத்தில் திடீரென ஒரு விமானம் நிலை தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் கிளம்பிய ஒரு சில நிமிடங்களில் இந்த விபத்தில் நிகழ்ந்ததாகவும், இந்த விபத்திற்கு விமானத்தில் உள்ள எஞ்ஜீன்கள் பழுதானதே தான் காரணம் என்றும் கூறப்படுகிறது
இந்த விமானத்தில் ஓரிருவர் மட்டுமே பயணம் செய்த போதிலும் இந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் அங்குள்ள மக்கள் படுகாயம் அடைந்து உயிர்ப்பலி ஆகி உள்ளதாகவும், இதுவரை 27 சடலங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இன்னும் பல பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுவதாகவும் அந்த பகுதியினர் தெரிவித்தனர்
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமான நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாகவும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் உடனடியாக மீட்புப்பணி செய்ய காங்கோ நாட்டின் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கேம் விளையாடுங்கள், சிவகார்த்திகேயனை சந்தியுங்கள்: ஒரு அரிய வாய்ப்பு
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’ஹீரோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த படத்தின் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இதனை அடுத்து இந்த படத்தின் தடை உடைக்கப்பட்டதால், திட்டமிட்டபடி இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ’ஹீரோ’ என்ற ஆண்ட்ராய்டு கேமை அறிமுகப்படுத்தியது. கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து விளையாடும் வகைகயிலான இந்த கேம் தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது
இந்த கேமில் வெற்றி பெறுபவர்களுக்கு சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த கேமை டவுன்லோட் செய்து விளையாடும் இளைஞர்கள் சிவகார்த்திகேயனை சந்திக்கலாம் என்ற ஆர்வத்துடன் ஹீரோ கேமை மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்
சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ’இரும்புத்திரை’ இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்த படம் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
PRESS என்ற வார்த்தையை YouTube சேனல்கள் பயன்படுத்த தடை! மத்திய அரசு எச்சரிக்கை
யூடியூப் சேனல்கள் இனி PRESS என்ற வார்த்தையை பயன் படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இணைய உலகம் அசுர வளர்ச்சி அடைந்த பிறகு யூடியூப் சேனல்கள் ஆதிக்கம் மாபெரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்து வந்த பல்வேறு பல நிகழ்ச்சிகள், தற்பொழுது நொடியில் நமது செல்போன்களில் காட்டிவிடுகிறது. மேலும் தற்போது யூடியூப் பக்கம் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக நிறைய செய்தி சேனல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இவற்றை தனி நபர் அல்லது குழுவாக இணைந்து செய்திகளை தங்கள் யூடியூப் பக்கங்கள் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் தங்களை PRESS என்ற வார்த்தையை பயன்படுத்தி தவறான விஷயங்களில் ஈடுபடுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்துகொண்டிருந்தன.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசு அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி யூடியூப் சேனல்களில் பணிபுரிவோர்கள் நடத்துவோர்கள் தங்களைப் PRESS என்று பயன்படுத்தினால் அவர்கள் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இணை அமைச்சர் கர்னல் ராஜவர்த்தன்சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் மக்கள் தொடர்பு அமைச்சகத்தில் பதிவு செய்து ஆர்.என்.ஐ-யில் பதிவு செய்துள்ள பிரிண்ட் மற்றும் எலக்ட்ரானிக் மீடியாக்கள், ரேடியோ நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் மட்டுமே செய்தியாளர்களாக அங்கீகரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அடையாள அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூப் சேனல்களில் பணிபுரிபவர்கள் செய்தியாளராக அங்கீகரிக்கப்படுவதில்லை என்றும், அவர்கள் PRESS என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு PRESS என்ற வார்த்தையை பயன்படுத்தினால் அது சட்டப்படி குற்றம் எனவும், போலியாக செயல்படுவோர்கள் மீது காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் யூடியூப் சேனல்கள் நடத்துவோர்கள் கதிகலங்கி போயுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சகுப்பத்தில் வன்னியர் சமுதாயத்தின் முக்கிய தலைவரும் சுதந்திர போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான மறைந்த இராமசாமி படையாச்சி அவர்களுக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், முழு வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணியை தமிழக அரசு செய்து வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் திரு.இராமசாமி படையாச்சியின் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.
இந்த சூழ்நிலையில் நேற்று பாமக நிறுவனர் இராமதாஸ் அவர்களை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் சி.வீ.சண்முகம், MC.சம்பத் ஆகியோர் இராமசாமி படையாச்சி மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு வருகை தருமாறு மணிமண்டபம் அழைப்பிதழை கொடுத்தனர். அழைப்பிதழை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார் இராமதாஸ். அமைச்சர்களுடன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
போலி செய்திகளை தடுக்க டுவிட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை
சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உலக அளவில் செய்தி நிறுவனமாகவும் விளங்கி வருகிறது. உலகின் எந்தப் பகுதியில் எந்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள் நடந்தாலும் அடுத்த வினாடியே அது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வெளிவந்துவிடுகிறது. டுவிட்டர், பேஸ்புக் பயனாளிகள் செய்திகளை உடனுக்குடன் புகைப்படத்துடன் வெளியிட்டு வருகின்றனர். உலகின் பிரபல செய்தி நிறுவனங்களைவிட பேஸ்புக் டுவிட்டர் மிக வேகமாக செய்திகளை மக்களுக்குக் கொண்டு போய் சேர்ப்பதாக கருதப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் இந்த சமூக வலைதளங்களிலும் சில பொய்யான செய்திகளும் போலியான வதந்திகளும் பரப்பப்படுவதால் சில சமயம் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதும் உண்டு
இதனை தவிர்க்க ஏற்கனவே பேஸ்புக்கில் ஹைட் ரிப்ளைஸ் என்ற வசதியை அறிமுகம் செய்தது. அதன்படி எதிர்மறை கருத்துக்கள், பொய்யான கருத்துக்கள், போலியான கமெண்ட்டுகள், வதந்திகள் ஆகியவற்றை மறையச் செய்யும் வசதி இருப்பதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதே முறையை தற்போது டுவிட்டரும் பின்பற்ற முடிவு செய்துள்ளது. தற்போது டுவிட்டரிலும் ஹைட் ரிப்ளைஸ் வசதியை கொண்டு வந்துள்ளது. முன்னதாக இந்த வசதியை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் கனடா நாடுகளில் சோதனை முறையில் செய்யப்பட்டது. இந்த சோதனை முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது உலகம் முழுவதும் உள்ள டிவிட்டர் பயனாளிகள் இந்த ஹைட் ரிப்ளைஸ் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். பொய்யான செய்திகள், வதந்திகள் என தெரிந்தால் அதை ஹைட் செய்யும் வசதி இருப்பதால் இனிமேல் பொய்ச்செய்திகள் பரவுவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது