ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி விடுத்த கடுமையான எச்சரிக்கை!

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், மற்றும் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் ,உள்ளிட்டோர் இன்று ஆலோசனை கூட்டம் முன்னரே அறிவித்தபடி நேற்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆரம்பித்து இரவு 10.45 மணி வரை நீடித்து இருக்கின்றது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நிச்சயமாகிவிட்டதா? ரஜினி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கின்றதா ?என்ற கேள்விகளுக்கு இடையினில் நேற்றைய தினம் இந்த கூட்டம் நடந்திருக்கின்றது. கட்சியின் 31 மண்டல பொறுப்பாளர்கள், 73 மாவட்ட … Read more

தேர்தல் ஆணையத்தின் அந்த செயலால் ஏமாற்றமடைந்த கமல்!

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டு, அதன் பின்னர் ஆர் .கே நகர் இடைத்தேர்தல் நடந்தபோது டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி அடைந்தார். அதன்பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர் தினகரன் ஆரம்பித்த நிலையிலே மக்களவைத் தேர்தல், மற்றும் சட்டசபை இடைத்தேர்தலிலும், போட்டியிடுவதற்காக அந்த கட்சியின் வேட்பாளர்களுக்கு … Read more

ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எல்.முருகன்!

திமுகவின் தூண்டுதலின் பெயரில் தான் விவசாயிகளுடைய போராட்டம் நடந்து வருகின்றது என்று தமிழக பாஜக வின் தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியிருக்கிறார். சென்னை தியாகராயநகரில் இருக்கின்ற கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த, அந்த கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் ,ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரின் அரசியல் வருகை பாஜகவிற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. பாஜக கூட்டணியில் நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சி இணைவது தொடர்பாக மேலிடம் தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். இப்போது வரையில் … Read more

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக கூட்டணி!

விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து இருக்கின்றது திமுக கூட்டணி. மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடும் குளிரையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் 19வது தினமாக விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையிலே இன்றுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பேராதரவு தர வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன தமிழ்நாட்டில் எதிர்வரும் 18ஆம் தேதி விவசாய … Read more

நடிகர் விஷாலின் தேர்தல் வியூகம் இதுதான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆக்ஷன் மற்றும் அயோக்கியா புகைப்படங்கள் வெளியானது அதனைத் தொடர்ந்து துப்பரிவாளன் 2 மற்றும் போன்ற படங்கள் தயாராகி வருகின்றன சக்ரா திரைப்படம் முழுமையாக முடிந்து விட்ட நிலையில் ஓ.டி.டி வெளியீட்டிற்கு தயார் ஆகி விட்டது. ஒரு நடிகராக இருந்த வந்த நேரத்திலேயே திரைத்துறை சங்கங்களில் தன்னை இணைத்துக்கொண்ட விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் … Read more

ஸ்டாலினுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கின்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவின் அரசையும் விமர்சனம் செய்கிறார்கள் தெரிவித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக பல காலகட்டங்களில் தமிழக அரசின் சார்பாக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. தன்மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலினுக்கு எதிரான 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது சென்னை … Read more

இரண்டாவது தலைநகரைப் பற்றி வாக்குறுதி கொடுத்த கமல்ஹாசன்! ஒரே வார்த்தையில் வீணாக்கிய ஹச்.வி. ஹண்டே!

மதுரை இரண்டாவது தலைநகராக்குவதற்கு எம்.ஜி.ஆர் விருப்பப்பட்டார் என்று கமல்ஹாசன் தெரிவித்து குறித்து ஹண்டே கருத்து தெரிவித்திருக்கின்றார். மதுரையில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பேசிய மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்றவேண்டும் என எம்.ஜி.ஆர் கனவு கண்டதாக தெரிவித்தார். எம் ஜி ஆர் கனவின் நீழ்ச்சி தான் இன்று குறிப்பிட்ட கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் ஆட்சியில் மதுரை இரண்டாவது தலைநகராக மாற்றப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதற்கு முன்னரே மதுரையை … Read more

டி.டி.வி தினகரன் போட்ட அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகள்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் போன்றவர்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர்களுக்கு அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் உத்தரவிட்டிருக்கிறார், என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் ஏற்பட்ட தகராறு காரணமாக, சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் என்று அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தது. அதன்பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் ஆக்கிவிட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் … Read more

நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த அந்த கருத்தால் அதிர்ச்சிக்குள்ளான அரசியல் தலைவர்கள்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கின்றார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் என்று இரண்டாவது தினமாக மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 31-ஆம் தேதி ரஜினிகாந்த் கட்சி தொடர்பாக அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள், ரஜினியுடன் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும். நடிகர் ரஜினிகாந்தை வைத்து பாரதிய ஜனதா கட்சியினர் அரசியல் … Read more

அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்த புதிய தகவல்! உற்சாகத்தில் பெண்கள்!

தமிழக அரசின் சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துக் கூறினால் மாற்றுக் கட்சியினர் கூட அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்திருக்கின்றார். விழுப்புரம் மாவட்ட மகளிரணி மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பேரூராட்சி கிளை கழக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வாறு அவர் தெரிவித்திருக்கின்றார். இப்பொழுது இங்கே வந்திருக்கின்ற பெண்களை விழிப்புணர்வு படுத்த்தினாலே அதிமுகவை இன்னும் நூறு வருட காலத்திற்கு யாராலும் அசைக்க இயலாது. அதிமுகவில் இனிவரும் காலங்களில் பெண்களுக்கு கூடுதல் மதிப்பு கொடுக்கப்படும். … Read more