அத்தனை யூனிட் முன்பாக பாண்டிராஜை கெட்டவார்த்தையால் திட்டிய சேரன் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

0
35
#image_title

அத்தனை யூனிட் முன்பாக பாண்டிராஜை கெட்டவார்த்தையால் திட்டிய சேரன் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் பாண்டியராஜ். இவர் எடுக்கும் சின்ன பட்ஜெட் படங்கள் கூட மாபெரும் ஹிட்டடித்துவிடும். ஆனால், இவர் பல அவமானங்களை தன்னுடைய சினிமா கேரியரில் அடைந்திருக்கிறார்.

சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நுழைய வேண்டும் என்பதுதான் பாண்டியராஜின் ஆசையாக இருந்து வந்தது. அதனால் யாருடைய பின்புலம் இல்லாமல் அவர் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இவருடைய தாய் இவருக்கு சின்ன வயதிலிருந்தே நிறைய கதை கூறுவாராம். அந்த கதையையெல்லாம் சினிமாவில் எடுக்க வேண்டும் என்று அப்போதே இவர் ஆசைப்பட்டுள்ளார்.

சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தார் பாண்டியராஜ். முதன்முதலாக இவர் இயக்குநர் பாக்யராஜின் அலுவலகத்தில் தான் வேலை பார்த்துள்ளார். அதன் பின்னர் சேரன் இயக்கிய பாண்டவர் பூமி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

சேரன் சம்பளமே கொடுக்கமாட்டாராம். இருந்தாலும் சினிமா அனுபவத்தை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவரிடம் உதவி இயக்குநராக இருந்துள்ளார். சேரன் அமைதியானவர்தான். ஆனால் அவருக்கு கோபம் வந்துவிட்டால் யார் பக்கத்தில் இருக்கிறார்கள் என்றுகூட பார்க்க மாட்டாராம். கடுமையாக திட்டிவிட்டுவிடுவாராம்.

ஒருமுறை ஆட்டோகிராப் படத்தின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும்போது, பாண்டிராஜை சேரன் கடுமையாக திட்டியுள்ளாராம். இந்தக் கோபத்தில் பாண்டியராஜ் படப்பிடிப்பில் இருந்த சினேகாவின் மேக்கப் மேனை திட்டியிருக்கிறார். உடனே அவர் சினேகாவிடம் சொல்ல, சினேகா சேரனின் காதுக்கு எடுத்து சென்று விட்டார்.

உடனே, அத்தனை யூனிட் முன்பாக சேரன் பாண்டியராஜை கெட்ட வார்த்தைகளால் கடுமையாக திட்டினாராம். இந்த அவமானத்தை தாங்கிக்க கொள்ள முடியாமல் இனி இந்த வேலையை வேண்டாம் என்று அங்கிருந்து கோபித்துக் கொண்டு சென்றுவிட்டாராம். இதன் பின்பு, சிம்பு தேவன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் பாண்டியராஜ் பணியாற்றினாராம்.

author avatar
Gayathri