ஆசனவாயில் துர்நாற்ற வாயுக்கள் வெளியேறாமல் இருக்க.. இந்த விதையை மென்று சாப்பிடுங்கள்!!

0
111

உங்கள் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் நீங்க பெருஞ்சீரகம்,இஞ்சி போன்ற பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம்.

தீர்வு 01:

உணவு உட்கொண்ட பிறகு ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

பெருஞ்சீரகம் அஜீரணப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.பெருஞ்சீரகத்தில் டீ செய்து குடித்தாலும் பலன் கிடைக்கும்.

தீர்வு 02:

உணவு உட்கொண்ட பிறகு இஞ்சி டீ செய்து குட்டித்தல் அஜீரணக் கோளாறு நீங்கும்.வாயுத் தொல்லை அகல இஞ்சி டீ செய்து குடிக்கலாம்.

தீர்வு 03:

ஒரு கப் தண்ணீரில் நான்கு புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து வடித்து குடித்தால் வாயுத் தொல்லை குணமாகும்.

தீர்வு 04:

மஞ்சள் தூளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வாயுத் தொல்லை அகலும்.மஞ்சள் நீர் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்க உதவுகிறது.

தீர்வு 05:

சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் வாயுத் தொல்லை அகலும்.அதேபோல் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் வாயுப் பிரச்சனை சரியாகும்.

தீர்வு 06:

தினமும் உணவு உட்கொண்ட பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.வயிற்றில் உள்ள வாயுக்களை வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் வெளியேற்றலாம்.

தீர்வு 07:

தினமும் ஒரு கிளாஸ் ஓமத் தேநீர் செய்து குடித்தால் வாயுத் தொல்லை குணமாகும்.வயிற்றில் இருக்கின்ற கெட்ட வாயுக்கள் அகல இந்த ஓம நீர் உதவும்.

Previous articleகல் உப்பில் இந்த ஒரு பொருளை மட்டும் மறைத்து வையுங்கள்..!! கோடிக் கடனும் தீர்ந்து விடும்..!!
Next articleஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு அற்புத வீட்டு வைத்தியம்!! முதல் முயற்சியில் பலன் காணலாம்!!