Home News இலங்கை தமிழர்களின் நலன் காப்பு குழு அமைப்பு! முடிவுக்கு வருமா இலங்கை தமிழர்களின் துயரம்?

இலங்கை தமிழர்களின் நலன் காப்பு குழு அமைப்பு! முடிவுக்கு வருமா இலங்கை தமிழர்களின் துயரம்?

0
இலங்கை தமிழர்களின் நலன் காப்பு குழு அமைப்பு! முடிவுக்கு வருமா இலங்கை தமிழர்களின் துயரம்?

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் பொது மற்றும் மறுவாழ்வு துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கை தமிழர்கள் மற்றும் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு, முன்னாள் படை வீரர்கள் உட்பட பல்வேறு பணிகளில் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் தலைநிமிரும் தமிழகம் தொலைநோக்கு திட்டத்தில் அறிவுறுத்தி இருக்கிறார் .அதன்படி வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காத்திட அங்கே பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவிடவும், நாடு திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்தை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற ஒரு புதிய துறையை அமைப்பதற்கு போதுமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றும், வெளிநாடுவாழ் தமிழர்களின் நலவாரியம் அமைப்பதற்கும் போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கட்ட வழிகாட்டுதல் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதற்கும் குடிநீர், கழிவறை வசதி, தெருவிளக்கு, மின் வசதி, போன்ற பல அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து விடவும், மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி வழங்கிடவும் சமையல் பாத்திரங்கள் மற்றும் உடுப்புகள் வழங்குவதற்கான ஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்குவதற்கும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கும், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு காப்பீட்டு திட்டம், அடையாள அட்டை, கட்டணமில்லா தொலைபேசி உதவி மையம் வெளிநாடுவாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை இணையவழியில் கற்றுத் தருவதற்கான தமிழ் இணையக் கல்வி கழகம் அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.