காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அனுபவித்த பேராசிரியர்! சக பேராசிரியை கண்ணீருடன் புகார்.!! நடந்தது என்ன?

0
87

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அனுபவித்த பேராசிரியர்! சக பேராசிரியை கண்ணீருடன் புகார்.!! நடந்தது என்ன?

தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி சக பேராசிரியையை ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அருகேயுள்ள கரந்தை பகுதியைச் சேர்ந்த அஸ்வின்ராஜ் என்பவர் வல்லம் அடைக்கலமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் பணிபுரிந்த சக பேராசிரியை ஒருவருடன் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்வதாக கூறி அவருடன் அடிக்கடி தனிமையில் நெருக்கமாக பழகியுள்ளார்.

இந்நிலையில், காதல் ஜோடிகளாக பழகி வந்த இவர்களுக்கு இடையே திடீரென்று பிரிவு ஏற்பட்டது. பேராசிரியர் அஸ்வின்ராஜ் தனது காதலியிடம் இருந்து நெருக்கத்தை குறைத்துக் கொண்டு விலக ஆரம்பித்தார். இதனால் கோபமடைந்த அவரது காதலி போலீசில் புகார் அளித்துள்ளார்.

தன்னை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துவிட்டு தற்போது புறக்கணிக்கிறார். இவரால் நான் ஏமாந்துள்ளேன் அவரை உடனடியாக விசாரிக்குமாறு காவல் நிலையத்தில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் பேராசிரியர் அஸ்வின்ராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

என் மகனை தொந்தரவு செய்தால் கொன்று விடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்த பேராசிரியர் அஸ்வின்ராஜின் தந்தை செல்வராஜையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதல் என்கிற பெயரில் சக பேராசிரியரே ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Jayachandiran