கொரோனா தொற்று 12லட்சத்தை தாண்டியது : சர்வதேச மற்றும் மாநில புள்ளி விபரங்கள்!

0
112

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 12 லட்சத்து ஆயிரத்து 473 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 691-ஐ எட்டியுள்ளது, மேலும் 2 லட்சத்து 46 ஆயிரத்து 383 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5.5 லட்சத்தை கடந்துள்ளது, உலக அளவில் இந்த நோயால் பலியானார்களின் எண்ணிக்கையில் பாதியை தொடுகிறது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

இந்தியாவில் நேற்று புதிதாக 529 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, மொத்த எண்ணிக்கை 3,588 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில 13 பேர் பலியாகியுள்ளனர், அதில் மொத்த எண்ணிக்கை 99 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 229 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / குணமடைந்தவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 409/42/24
டெல்லி – 445/15/6
தமிழ்நாடு – 411/6/2
கேரளா – 295/41/2
ராஜஸ்தான் – 200/21/0
உத்தரபிரதேசம் – 174/19/2
ஆந்திர பிரதேசம் – 161/1/1
தெலுங்கானா – 159/1/7
கர்நாடகா – 128/12/3
குஜராத் -105/14/10
மத்திய பிரதேசம் -104/0/6
ஜம்மு & காஷ்மீர் -75/3/2
மேற்கு வங்கம் -69/3/3
பஞ்சாப் -57/1/5
ஹரியானா -49/24/0
பீகார் -30/0/1
அசாம் -24/0/0
சண்டிகர் -18/0/0
உத்தர்கண்ட் -16/2/0
லடாக் -14/3/0
அந்தமான் & நிக்கோபார் -10/0/0
சத்தீஸ்கர் -9/3/0
கோவா -7/0/0
இமாச்சல பிரதேசம் -6/1/1
ஒடிசா -5/0/0
பாண்டிச்சேரி -5/1/0
மணிப்பூர் -2/0/0
ஜார்க்கண்ட் -2/0/0
மிசோரம் -1/0/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0/0

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியானதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K