வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க முடிவு!! தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தும் உயர்நீதிமன்றம்!! தொடரும் அதிரடி குற்றச்சாட்டு!!

0
121
Decided to suspend the counting of votes !! High Court charges Election Commission with murder Continuing Action Charge !!
Decided to suspend the counting of votes !! High Court charges Election Commission with murder Continuing Action Charge !!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க முடிவு!! தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தும் உயர்நீதிமன்றம்!! தொடரும் அதிரடி குற்றச்சாட்டு!!

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பரவல் பொதுமக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்ப்படுத்தியது. இதனால் மாக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸின் 2 ஆம் அலை இந்த வருடம் பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கி தற்போது மக்களிடையே வேகமாக பாரவி வருகிறது. இதனால் மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது பொது இடங்களில் இருவருக்கு மேல் சேர்ந்து செல்ல கூடாது, தனிநபர் இடைவெளி பின்பற்றுதல் போன்ற முக்கிய  கட்டுப்படுகளை விதித்திருந்தது.

அந்த நிலையில் இந்த மாதம் ஏப்ரல் 06 ஆம் தேதி சட்ட மன்ற தேர்தல் நடந்து முடிந்தது, அதற்காக சில மாதங்கள் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். அந்த பிரசாரத்தில் தமிழக அரசு அமல் படுத்திய எந்த ஒரு விதிமுறைகளையும், கட்சி தலைவர்களும் மற்றும் தொண்டர்களும் பின்பற்றாமல் விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டமாக பிரச்சாரத்தில் ஈடு பட்டனர்.

இதனால் கொரோனா வைரஸ் 2 ஆம் அலை அதிதீவிரமாக மக்களிடையே பரத்தொடங்கி உள்ளது. இதனால் மத்தியா அரசு மேலும் கடுமையான பல கட்டுப்படைகளை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த கொரோனா வைரஸ் 2 ஆம் அலை வேகமாக பரவியதற்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என்றும் தேர்தல் ஆணையம் மீதி கொலை குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை என்றும்,  மேலும் கொரோன கட்டுப்பாடு விதிமுறைகளை மீறினால் வரும் மே மாதம் 2 ஆம் தேதி நடக்க இருக்கும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
CineDesk