அந்த படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி வேதனைப் பட்ட தேவயானி – வெளியான தகவல்!

0
95
#image_title

அந்த படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி வேதனைப் பட்ட தேவயானி – வெளியான தகவல்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் பல குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் ஏற்று நடித்ததால் தங்கள் வீட்டு மகள் போல் உள்ளார் என்று பல தாய்மார்கள் தேவயானியை புகழ்ந்து தள்ளினர்.

நடிகை தேவயானி மலையாளத்தில் தான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, தமிழில் ‘தொட்டாச் சிணுங்கி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அகத்தியன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை படம் புகழைப் பெற்று தந்தது.

இதனையடுத்து, அஜித், விஜய், கமல் ஹாசன், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து நட்சத்திர நடிகையாக மின்னினார்.

நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

ஒரு முறை தேவயானிக்கு சத்யராஜ், பிரபு நடிப்பில் வெளியான ‘சிவசக்தி’ படத்தில் ஐட்டம் பாடலுக்கு நாடனம் ஆட வாய்ப்பு கிடைத்தது. இதில் தேவயானி குட்டப்பாவடை அணிந்து கவர்ச்சியாக ஆடியிருப்பார். இதற்கிடையில், தேவயானிக்கு ‘காதல் கோட்டை’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இப்படத்தில் தேவயானி குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார்.

ஆனால், ‘சிவசக்தி’ ஏதோ ஒரு காரணத்தினால் வெளிவரவில்லை. ‘காதல் கோட்டை’ படம் வெளியான பிறகு ‘சிவசக்தி’ படம் வெளிவந்தது. ‘சிவசக்தி’ படத்தில் கவர்ச்சி நடனம் ஆடிய தேவயானியைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது ரசிகர்களை வெகுவாக பாதித்தது.

அதிலிருந்து தேவயானி கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருந்தார். அன்று முதல் இன்று வரை அவர் கவர்ச்சி காட்டாமல் தான் நடித்து வருகிறார். குடும்ப பெண்ணாகவே ரசிகர்கள் மனதில் எப்போதும் தேவயானி வலம் வந்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரையிலும் இறங்கி தேவயானி கலக்கிக்கொண்டு வருகிறார்.

author avatar
Gayathri