3 படத்தின் இரண்டாவது பாகம்! தனுஷ் வெளியிட்ட மாஸ் புகைப்படம்! கொண்டாட்டத்தில்  ரசிகர்கள்!

0
129
Dhanush gave a pleasant surprise to the fans! Do you know what he did?
Dhanush gave a pleasant surprise to the fans! Do you know what he did?

3 படத்தின் இரண்டாவது பாகம்! தனுஷ் வெளியிட்ட மாஸ் புகைப்படம்! கொண்டாட்டத்தில்  ரசிகர்கள்!

தனுஷ் சமீபகாலமாக பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார். ஆனால் பல வருடத்திற்கு முன் இவர் திரைக்கு வந்த போது கேலி கிண்டல் செய்தனர். அதனையெல்லாம் சிறிதும் ஏற்றுக் கொள்ளாமல் தனது கடின உழைப்பால் தற்பொழுது பாடலாசிரியராக தயாரிப்பாளராக என அனைத்து விதத்திலும் உயர்ந்து வருகிறார். இவரது தத்ரூபமான நடிப்பால் இவருக்கென்று பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. சமீப காலத்தில் வந்த வெற்றிமாறன் படமான அசுரன் இவருக்கு அதிக பெயர் வாங்கிக் கொடுத்தது.

பட்டு தொட்டு எங்கிலும் சிவசாமியின் பாத்திரம் மனதளவில் பதியும்படி தனது அபார நடிப்பை காட்டி இருப்பார். அதுமட்டுமின்றி அப்படத்திற்கு சிறந்த நடிகர் என தேசிய விருதும் கிடைத்தது. அப்படத்தையடுத்து கர்ணன் படம் வெளியானது. அப்படமும் இவருக்கு பெரும் அளவில் வெற்றி வாகை சூடி தந்தது. தற்பொழுது ஒடிடி தளத்தில் கலாட்டா கல்யாணம் என்ற படம் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் வெளியாக தயார் நிலையில் உள்ளது. தற்சமயம் தெலுங்கு திரையுலகிலும் தனது திறமையை காட்ட காலடி எடுத்து வைத்துள்ளார்.

பிரபல தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அக்கல்லூரி வாத்தி என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த வாத்தி திரைப்படமானது இருமொழிகளில் தயாராக உள்ளது. மேலும் இப்படத்தை சித்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளது. இந்த வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கலரி திரைப்பட நாயகி சமந்தா மேனன் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தற்பொழுது அப்படத்தை குறித்து தனுஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வைத்துள்ளார்.அதில் அப்படத்தின் காட்சியை பதிவிட்டு,வாத்தி  படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்று தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் பள்ளி சீருடை போட்டுள்ளார்.அதனால் இது 3 படம் போன்று இருக்கும் என இவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.அதுமட்டுமின்றி இது 3 யின் இரண்டாவது பாகம் என்றும் கூறுகின்றனர்.அந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் படம் எப்பொழுது வரும் என்று கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.இவரின் இந்த பதிவால் இவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.