கட்சி பணத்தை வைத்து ஆடாத ஆட்டம்! எடப்பாடிக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!

கட்சி பணத்தை வைத்து ‘ஆடாத ஆட்டம்’. எடப்பாடிக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!

திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கோடிகணக்கில் பணத்தை குவித்து வைத்து மாவட்டச் செயலாளர்களை விலைக்கு வாங்கி வருவதாகவும், கட்சியின் நிதியை வைத்துகொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வருவதாகவும், கட்சி நிதியை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். நான் கட்சிப் பொருளாளராக பொறுப்பேற்றபோது ரூ. 2 கோடி பற்றாக்குறையாக இருந்தது. அதன்பின் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன் ரூ. 253 கோடியாக நிதி இருப்பை உயர்த்திக் காட்டினேன்.  அந்த கட்சியின் நிதியை வைத்துகொண்டு ஆடாத … Read more

தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா! மாணவர் சங்கத் தலைவர் கைது!

தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா! மாணவர் சங்கத் தலைவர் கைது!

தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா!  மாணவர் சங்கத் தலைவர் கைது! தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்காக வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவரை தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் படித்த மாணவராக பட்டம் பெற வந்திருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.அரவிந்தசாமி என்பவரை … Read more

ஓபிஎஸ் மாநாடு! கத்தியுடன் வந்தவர் கைது!

ஓபிஎஸ் மாநாடு கத்தியுடன் வந்தவர் கைது

ஓபிஎஸ் மாநாடு !கத்தியுடன் வந்தவர் கைது! அதிமுகவில் பல குளறுபடி உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை இன்று நடத்தினார். இந்நிலையில் மாநாடு  நடந்து கொண்டிருந்த போது மாநாட்டில் ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி வந்துள்ளார். உடனே அவரை போலீசார் பிடித்து மேடைக்கு பின்புறம் அழைத்துச் சென்றனர்.இதனால் மாநாட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்ற நபரை மடக்கி பிடித்து கைது … Read more

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம்! ஒரு லட்சம் வழங்க உத்தரவு

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம்! ஒரு லட்சம் வழங்க உத்தரவு

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம்! ஒரு லட்சம் வழங்க உத்தரவு. தமிழகத்தில் கடந்த வாரம் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கி தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி தாமரைநகர் என்ற இடத்திலுள்ள புது ஏரியில் 22-4-2023 அன்று குளிக்கச் சென்ற கன்னங்குறிச்சி கிராமம். கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 17) மற்றும் பாலாஜி, (வயது … Read more

திருநங்கையுடன் சபலம்! இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருநங்கையுடன் சபலம்! இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருநங்கையுடன் சபலம்! இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி. தமிழகத்தின் மைய பகுதியாக அமைந்துள்ள மாவட்டம் என்றால் அது சேலம் மாவட்டம் தான். தமிழகத்தின் வளர்ந்து வரும் மாவட்டங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. தென் மாவட்டத்திலிருந்து வட மாவட்டங்களுக்கோ அல்லது பெங்களுர், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் சேலத்தை தொட்டு விட்டு தான் செல்ல வேண்டும். சேலத்தில் புகழ் பெற்று விளங்கும் இடங்கள் ஏராளம் உண்டு, அவைகளில் முக்கிய இடம் பெற்றிருப்பது புதிய பேருந்து நிலையம், … Read more

மே 1 டாஸ்மாக் விடுமுறை! சேலம் ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் புது அறிமுகம் தானியங்கி மதுபான இயந்திரம்

மே 1 டாஸ்மாக் விடுமுறை! சேலம் ஆட்சியர் உத்தரவு. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் மே 1-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறுகையில், வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள்‌ மூடப்பட வேண்டுமென அரசால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து எப்‌.எல்‌.1, எப்‌.எல்‌.2, … Read more

சேத்தியாதோப்பு அருகே வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்!

சேத்தியாதோப்பு அருகே வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்!

சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்!  எந்த ஒரு முன்னறிவிப்பின்றி பணியை தொடங்கியதால் தடுத்து நிறுத்திய கிராம மக்கள் பணியை தொடங்கிய அடுத்த நொடியே திரும்பி அனுப்பப்பட்ட ஜேசிபி எந்திரங்கள். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்த முயன்று வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டது. இன்று எந்த ஒரு … Read more

நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!

நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!

நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!  அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து கணவன் கைது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தங்கராஜ் (50). அவரது மனைவி பிரியா (45) இருவரும் அவர்களது சொந்த கிராமத்திலேயே வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இரண்டு பேரும் வெளியூரில் வேலை செய்து வந்துள்ளனர். தங்கராஜ் கூலி வேலை செய்து வந்துள்ளார். பிரியா இங்கு உள்ள … Read more

வேதாரண்யத்தில் கோடை மழை!  உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு! 

வேதாரண்யத்தில் கோடை மழை!  உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு! 

வேதாரண்யத்தில் கோடை மழை!  உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு!  நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 1 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் திடிரென்று இன்று அதிகாலை கோடை மழை வேதாரண்யம் பகுதியில் 5 செ.மீ மழை பெய்ததால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி … Read more

ரயிலில் அடிப்பட்டு மூன்று பெண் புள்ளிமான்கள் பலி-வனத்துறையினர் விசாரணை!

ரயிலில் அடிப்பட்டு மூன்று பெண் புள்ளிமான்கள் பலி-வனத்துறையினர் விசாரணை!

ரயிலில் அடிப்பட்டு மூன்று பெண் புள்ளிமான்கள் பலி-வனத்துறையினர் விசாரணை!  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நேதாஜி நகர் பகுதியில் அரக்கோணம்-திருத்தணி ரயில் பாதையில் வழித்தவறி வந்த முன்று பெண் மான்கள் இன்று அதிகாலை ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மான்களை கைப்பற்றி ஆற்காடு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். … Read more