திருவண்ணாமலையில் இன்று அதிகாலை ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலையில் இன்று அதிகாலை ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய கார்த்திகை தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது. நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் நடைபெறும் கார்த்திகைy தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது. தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கும், மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.இதை தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு ஆலயத்தில் உள்ள சாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏகன் அனேகன் என்னும் தத்துவத்தை … Read more

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழப்பு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழப்பு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழப்பு காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் சேர்ந்தவர் சரவணன் இவருடைய மனைவி கார்த்திகாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பெண் குழந்தை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்தது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 4ங்கு நாட்களாக தாயும் சேயும் சிகிச்சை பெற்று வந்தனர். குழந்தை பிறந்ததிலிருந்து பால் குடிப்பதற்கு சற்று சிரமப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 4 30 மணி அளவில் குழந்தைக்கு … Read more

கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்லலாமா?

கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்லலாமா?

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப் பட்டு வருகிறது இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மாலை 6 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயர உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருமாலுக்கும் பிரம்மனுக்கும் இடையே ஏற்பட்ட “தான்” என்ற அகந்தையை போக்க … Read more

சென்னை விமான நிலையத்தில் ஓரே நாளில் 1 கோடியே 27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் ஓரே நாளில் 1 கோடியே 27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் ஓரே நாளில் 1 கோடியே 27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்! சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது அதில் வந்த தஞ்சாவூரை சேர்ந்த அகமது என்பவரிடம் சந்தேகத்தின் பெயரில் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர் அவரது உடமைகளை எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 11 லட்சத்து 50 ஆயிரம் … Read more

வெங்காயத்தின் விலை சில தினங்களில் குறையும் !

வெங்காயத்தின் விலை சில தினங்களில் குறையும் !

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை அமைச்சர் காமராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது இதில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜரிடம் நிருபர்கள் வெங்காய விலை பற்றி கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது. வெங்காயம் விளைகின்ற மழை பகுதிகளில் கூடுதலாக பெய்துள்ளதால் தற்போது விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு விலை ஏற்றம் கண்டுள்ளது. … Read more

கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை!சென்னையில் பரபரப்பு?

கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை!சென்னையில் பரபரப்பு?

சென்னையில் குடும்பத் தகராறில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவிக நகரைச் சேர்ந்தவர் உபயதுல்லா வயது 39 இவருக்கு நஸ்ரின் என்பவருடன் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் நஸ்ரின் மற்றும் உபயதுல்லா இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 ம் தேதி குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்த உபயதுல்லா … Read more

இன்று சென்னையில் மழை பொழிவு எப்படி இருக்கும்?

இன்று சென்னையில் மழை பொழிவு எப்படி இருக்கும்?

வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த போதிலும் சென்னைக்கு இன்னும் இயல்பான மழை கிடைக்கவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்ககூடிய ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வரும் போதிலும் இன்னும் முழுமையான கொள்ளளவை எட்டவில்லை. ஆனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு … Read more

திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு!

திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு!

திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு! திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நடைபெறும் கார்த்திகை மகா தீபத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தனர்.  இவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள்,  கிரிவலப்பாதை முழுவதும் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் பெருமளவிலான மாசு கேடு ஏற்படுகிறது.  மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து செல்வது உள்ளாட்சித் துப்புரவு பணியாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் … Read more

தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் ! ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு !

தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் ! ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு !

தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு கோபிசெட்டிபாளையத்தில் சேர்ந்தவர் சிவகுமார் திருப்பூர் ரயில் நிலையத்தில் மின் துறை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் கடந்த மூன்று நாட்களாக சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே தொழிற் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களிலிருந்து தொழிற்சங்க நிர்வாகிகளும் பணியாளர்களும் சென்னை பெரம்பூர் வந்தனர். மூன்று நாள் கூட்டத்திற்கு பிறகு அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுக்காக சிறப்பு ரயிலும் ஏற்பாடு … Read more

பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன்!

பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சேர்ந்தவர் நிர்மலாதேவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த இவர் சில மாணவிகளிடம் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார் மேலும் இந்த வழக்கில் மதுரை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது கடந்த மாதம் 18 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உதவி பேராசிரியர்கள் முருகன் … Read more