திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!! அதிர்ச்சியளிக்கும் காரணம்!! 

0
34
DMK councilor committed suicide with his family!! A shocking reason!!
DMK councilor committed suicide with his family!! A shocking reason!!

திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!! அதிர்ச்சியளிக்கும் காரணம்!! 

திமுக கவுன்சிலர் ஒருவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிரவைக்கும் இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் 13-வது வார்டு திமுக பெண் கவுன்சிலராக இருந்து வருபவர் தேவி பிரியா. இவரது கணவர் அருண்லால். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்த சூழ்நிலையில் கவுன்சிலர் தேவிபிரியா, தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரும் அவரது கணவர், மற்றும் மகள் 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர். கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். தாய்,தந்தை இறந்த நிலையில் அவர்களது மகளும் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார் இறந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனை தாங்காமல் கவுன்சிலர் தனது கணவர் மற்றும் மகளுடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார், என தெரிய வந்துள்ளது.

இருப்பினும் பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் தொடர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.