அஜித்திற்கும் ஷாலினிக்கும் எப்படி காதல் மலர்ந்ததுன்னு தெரியுமா? – செய்யாறு பாலு ஓபன் டாக்!

0
43
#image_title

அஜித்திற்கும் ஷாலினிக்கும் எப்படி காதல் மலர்ந்ததுன்னு தெரியுமா? – செய்யாறு பாலு ஓபன் டாக்!

அஜித்திற்கும், ஷாலினிக்கும் எப்படி காதல் மலர்ந்தது என்று பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசினார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

நடிகை ஷாலியினின் சாஃப்ட்டான குணம் சரணுக்கு பிடித்திருந்தது. அதனால் அவர் ‘அமர்க்களம்’ படத்தில் ஷாலினியை நடிக்க வைக்க கேட்டார். உடனே, ஷாலினி இல்ல சார்.. சின்ன வயசுல இருந்து நடித்து, நடித்து எனக்கு அலுப்பாகிவிட்டது. சினிமாலாம் இனி எனக்கு செட்டாகாது. நான் மேற்கொண்டு படிச்சு அப்படியே போய்டலாம்ன்னு பார்க்கிறேன் என்று சொன்னதும் சரணுக்கு அப்படியே ஷாக்காகிவிட்டார்.

உடனே அஜித்திற்கு போன் செய்து ஷாலினி படத்தில் நடிக்க மாட்டேன்னு சொல்றாங்கன்னு சொன்னதும், உடனே அஜித் போனை ஷாலினியிடம் கொடுங்க.. நான் பேசுறேன்னு சொன்னாரு. அப்போது போனில் ஷாலினி பேசினதும், ஷாலினி… ‘அமர்க்களம்’ படத்தில் நான் தான் நடிக்கிறேன்.

அதனால் நீங்க தயங்காம நடிக்கலாம்ன்னு சொன்னாரு. அதற்கு ஷாலினி எனக்கு 2 நாட்கள் டைம் கொடுங்க.. நான் யோசித்து சொல்றேன்னு சொல்லி வச்சுட்டாங்க. 2 நாட்கள் கழித்து ஷாலினி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாங்க. முதலில் அஜித்தான் ஷாலினியை ஒருதலையாக காதலித்தார்.

அதை எப்படி ஷாலினிடம் சொல்வது என்று தயங்கிக்கொண்டு வந்தார். சொல்லிவிட்டால் ஏதாவது தப்பாகிவிடுமா என்று யோசனையிலேயே அவர் சொல்லவே இல்லை. ஒரு தடவை படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர் சரணிடம், எனக்கு பத்து நாட்கள் கழித்து எனக்கு படப்பிடிப்பு வேண்டாம். நான் 1 மாதத்தில் தொடர்ச்சியா வந்து படத்தை முடித்து தருகிறேன் என்று சொன்னதும் சரணுக்கு சந்தோஷம்… என்ன சொல்றிங்க.. இது உண்மையா என்று கேட்க, அதற்கு அஜித்… நான் 10 நாட்கள் கழித்து வந்து படம் பண்ணேன்னா எங்கே ஷாலினியை காதலித்து விடுவேனோ என்று பயமா இருக்கு என்று சத்தமாகவே சொல்லிவிட்டார். இது ஷாலினியின் காதில் விழுந்து அவர் திரும்பி வெட்கப்பட்டு சிரித்தார். அப்போதுதான் படப்பிடிப்பில் இருந்த அனைவருக்குமே தெரிந்தது ஷாலினுக்கும் அஜித் மேல் ஒரு க்ரஸ் இருக்கிறது என்று.

மறுநாளிலிருந்து அந்த செட்டே கொஞ்சம் கிசுகிசுன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. நடிகர் தாமு, வையாபுரிலாம் அஜித்தை கிண்டல் செய்வார்கள். ஒரு தடவை படப்பிடிப்பில் சண்டை சீனில் அஜித் கைத்தவறி கத்தி ஷாலினி கையில் பட்டு ரத்தம் வந்துவிட்டது. இதைப் பார்த்த அஜித் அப்படி பதறிப்போய்விட்டார். உடனே டாக்டரை வரவழைத்துவிட்டார்.

ஷாலினியிடம் வலிக்குதா… வலிக்குதா.. என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ஷாலினி இது அவ்வளவு பெரிய காயம் இல்லை. பதற்றம் வேண்டாம் என்று கூல் செய்தார். இருந்தாலும் அஜித், ஷாலினியிடம் காட்டிய அக்கறை ஷாலினியின் மனதில் காதலை ஆழப்படுத்திவிட்டது.

மே 1 க்கு அஜித் பிறந்த நாள் வந்தது. அதற்கு சர்ப்ரைசாக ஷாலினி அஜித்திற்கு கிப்ட் செய்ய விரும்பினார். உடனே டைரக்டர் சரணுக்கு போன் செய்து உங்ககிட்ட ஒரு கிப்ட் கொடுக்கிறேன். அது அஜித் சார் வீட்டில் வைத்துவிடுங்கள் என்று கூறினார். உடனே சரண் அந்த கிப்ட்டை வாங்கி அஜித் வீட்டு வாசலில் வைத்துவிட்டார்.

அன்று இரவு அஜித்திற்கு போன் செய்த ஷாலினி வீட்டு வாசலில் போய் பாருங்கள் உங்களுக்காக ஒரு கிப்ட் இருக்கிறது என்று கூறியுள்ளார். அஜித் வாசலுக்கு சென்று அந்த கிப்ட்டை பிரித்து பார்த்தார். அதில் அஜித்திற்கு பிடித்த அனைத்து பொருட்களும் இருந்தது. அஜித்திற்கு பைக் என்றால் ரொம்ப பிடிக்கும். அந்த கிப்ட்டில் அஜித்திற்கு குட்டி பைக் ஒன்றை வைத்திருந்தார். இதைப் பார்த்ததும் அஜித் அசந்து போய் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

இப்படித்தான் அஜித், ஷாலினி காதல் மலர்ந்தது என்று செய்யாறு பாலு மனம் விட்டு பேசினார்.

author avatar
Gayathri