10 நாட்களில் உடல் எடை அதிகரிக்க.. தேங்காய் பாலுடன் இதை சேர்த்து குடியுங்கள்!!

0
506
#image_title
10 நாட்களில் உடல் எடை அதிகரிக்க.. தேங்காய் பாலுடன் இதை சேர்த்து குடியுங்கள்!!
வெறும் பத்து நாட்களில் உடல் எடையை அதிகரிக்க இந்த பதிவில் அற்புதமான மருந்தை தயார் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவில் உடல் எடையை அதிகரிக்த மூன்று விதமான எளிமையான மருத்துவக் குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
முதல் மருத்துவ முறை
உடல் எடையை அதிகரிக்க தேங்காய் பால் தயார் செய்து குடிக்கலாம். தேங்காய் பாலை தயார் செய்வது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இருந்தாலும் இந்த பதிவின் மூலம்  இன்னெரு முறை தெரிந்து கொள்ளுங்கள்.
உரித்து எடுத்த தேங்காயின் மேல் இருக்கும் இந்த கருப்பு ஓடுகளை நீக்கி மிக்சி ஜாரில் போட்டுக் கொள்ளவும். இதில் ஒரு ஏலக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் இந்த தேங்காயை அரைத்துக் கொள்ளவும். பிறகு இதில் 200 மிலி அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதில் சுவைக்காக  வெல்லம் நாட்டுச் சர்க்கரை ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம். வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்க்க வேண்டியது கட்டாயம் மொன்றும் இல்லை.
அடுத்து இதனுடன் சுக்கு பொடி சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். பருகலாம். பிறகு தேவைப்பட்டால் சிறிதளவு மஞ்சள் சேர்த்துக் நன்கு கலக்கிக் கெள்ளவும். இதை இரவு சாப்பிட்டு பத்து நிமிடம் கழித்து இதை குடிக்க வேண்டும்.
இந்த தேங்காய் பாலை தொடர்ந்து தினமும் 10 நாட்கள் குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும். இந்த தேங்காய் பாலை சூடு செய்யாமல் குடித்தால் இதில் இருக்கும் நல்ல சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்கு முழுமையாக கிடைக்கின்றது.
இரண்டாவது முறை
தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட வேண்டும். தினமும் சாப்பிடுவதால் பழத்தில் உள்ள ஊட்டச் சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றது.
மூன்றாவது முறை
உடல் எடையை அதிகரிக்க மாலையில் கருப்பு எள்ளுருண்டை அல்லது வெள்ளை எள்ளுருண்டையை சாப்பிட வேண்டும். எள்ளில் அதிகப்படியான இரும்புச் சத்துகளும், புரோட்டீன்களும் இருப்பதால் இது நம் உடலை அதிகரிக்க உதவி செய்கின்றது. சருமத்திற்கு நெகிழ்வுத் தன்மையை இது கொடுக்கும். இந்த மூன்று முறைகளையும் தொடர்ந்து 10 நாட்கள் பயன்படுத்தினால் உடல் எடை அதிகரிக்கும்.