கணவனைக் கொன்ற குடிகார மனைவி! குஜராத்தில் நடந்த சம்பவம்!

0
66

கணவனைக் கொன்ற குடிகார மனைவி! குஜராத்தில் நடந்த சம்பவம்!

பெண் ஒருவர் தனது கணவனை உதைத்து தானே கொலை செய்துவிட்டு அவர் குடிபோதையில் இருந்ததால் இறந்துவிட்டார் எனக் கூறியதால் குஜராத்தில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் வதோத்ராவில் இருக்கும் பட்ரா கிராம பகுதியை சேர்ந்தவர்கள் இவர்கள் ராஜேஷ்-புனி.

புனி தனது தாய் வீட்டிற்கு சென்றதால் அவரை பார்ப்பதற்காக ராஜேஷ் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் கோபம் அடைந்த புனி ராஜேஷை மார்பில் எட்டி உதைத்துள்ளார். கீழே விழுந்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்பொழுது ராஜேஷின் சகோதரி ரக்ஷா பந்தன் வாழ்த்து சொல்வதற்காக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அப்பொழுது உன் சகோதரர் ராஜேஷ் குடிபோதையில் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

பிறகு அங்கு வந்த தாய் ராஜேஷின் உடலை கண்டு சந்தேகித்து உள்ளார்.

உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்த ராஜேஷின் தாய், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளது எனவும், அவரது உடலில் பல காயங்கள் இருந்ததாகவும், மேலும் மகன் அடிக்கடி குடிக்கும் பழக்கம் இல்லாதவர் எப்போதாவது மட்டுமே குடிப்பார். மருமகள் தான் தினமும் மது குடிக்கும் பழக்கம் உடையவர் என அதிர்ச்சி தகவலை போலீசாருக்கு கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் ராஜேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிவில் ராஜேஷ் இயற்கையாக மரணம் அடையவில்லை அவரது விலா எலும்புகள் உடைக்கப்பட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார் என தகவல் வந்துள்ளது.

ராஜேஷின் மரணம் குறித்து புனியிடம் காவல்துறையினர் விசாரித்தபோது இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும், தான் அவரை உதைத்து கீழே தள்ளியதாகவும் அதனால் அவர் மரணித்ததாக தன் தவறை ஒப்புக்கொண்டார். அதன்பிறகு போலீசார் புனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்த பிறகு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

author avatar
Kowsalya