வேகமாக முன்னால் சென்றதால் முந்திக் கொண்ட எமன்!! ஜாதகம் பார்த்துவிட்டு வரும்போது சரியில்லாமல் போன விதி!!

0
115
Eman overtook him because he was fast ahead!! After looking at the horoscope, the destiny went wrong!!
Eman overtook him because he was fast ahead!! After looking at the horoscope, the destiny went wrong!!

வேகமாக முன்னால் சென்றதால் முந்திக் கொண்ட எமன்!! ஜாதகம் பார்த்துவிட்டு வரும்போது சரியில்லாமல் போன விதி!! 

முன்னால்  சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதால் சக்கரத்தில் சிக்கி தந்தை மகன் ஒன்றாக பலியாகினர். சோகமான இந்த சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சீதாராம்பாளையம் சக்திவேல் நகரைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் வயது 67. இவரது மகன் தனசேகர் வயது 34.  இருவரும் தச்சு தொழில் செய்து வந்தனர்.

தனசேகரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே திருமணம் செய்து வைக்க ஜாதகம் பார்ப்பதற்காக ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தொட்டில் உள்ள ஜோசியரை சந்தித்து ஜாதகம் பார்த்துவிட்டு தந்தை, மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.

தனசேகர் பைக்கை ஓட்ட ஞானப்பிரகாசம் பின்னால் அமர்ந்து இருந்தார். இருவரும் பவானி லக்ஷ்மி நகர் காவேரி ஆற்றுப்பாலம் அருகே வந்துகொண்டிருந்த போது அவர்களுக்கு முன்னால் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

தனசேகர் அந்த லாரியை முந்திச் செல்ல முயன்று பக்கவாட்டில் சென்றுள்ளார். அப்போது திடீரென லாரியும், பைக்கும் மோதிக் கொண்டதாக சொல்லப் படுகிறது . அப்போது பைக் நிலைத்தடுமாறி லாரியின் அடியில் தனசேகர், ஞானப் பிரகாசம் இருவரும் சிக்கினர்.

லாரியின் சக்கரம் இருவரின் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த விபத்தின் காரணமாக கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் லாரியின் டிரைவர் கேரளாவைச் சேர்ந்த ஹக்கீம் வயது 47. என்பவரை கைது செய்தனர்.

ஜாதகம் பார்த்துவிட்டு வரும்போது தந்தை மகன் இருவரும் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.