மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!!

0
438
#image_title

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!!

மனுதாரர்களை நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கவும், அதன் முடிவுகளை, சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு

மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு எழுதிய சுமதி, துர்காசுதா, பிரவீன், பார்த்திபன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு தங்களை அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “மனுதாரர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க உத்தரவிட்டார். மேலும் மனுதாரர்களது நேர்முகத் தேர்வு முடிவுகளை, சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், ஏப்ரல் 11ஆம் தேதி வரை பிற விண்ணப்பதாரர்களின் நேர்முகத் தேர்வு முடிவுகளை ஒத்திவைக்கவும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து தேர்வு முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என குறிப்பிட்டு வழக்கை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.