பட்டாசு ஆலை வெடி விபத்து! மூன்று லட்சம் நிவாரண நிதி முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!

0
162
fireworks-factory-explosion-three-lakh-relief-fund-announced-by-chief-minister-m-k-stalin
fireworks-factory-explosion-three-lakh-relief-fund-announced-by-chief-minister-m-k-stalin

பட்டாசு ஆலை வெடி விபத்து! மூன்று லட்சம் நிவாரண நிதி முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!

கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் மதலைப் பட்டு மதுரா சிவனார்புரம் கிராமத்தில் தனியார் வெடிப்பொருள் தயாரிக்கும் ஆலயம் இயங்கி வருகின்றது. அங்க நேற்று எதிர்பாராத விதமாக நிதி விபத்து ஏற்பட்டது. புதுச்சேரி  மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்த திருமதி மல்லிகா என்பவர் உயிரிழந்தார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறுகையில். தொழிலாளி உயிரிழந்த செய்தி  கேட்டு நான்  மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் கடுமையான மற்றும் லேசான தீக்காயங்களுடன் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி சுமதி, திருமதி பிருந்தா தேவி, செல்வி லட்சுமி, செல்வி செவ்வந்தி மற்றும் செல்வி அம்பிகா ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அழைக்க அறிவுறுத்தியுள்ளேன்.

மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும். காயம் அடைந்தவர்களுக்கு தலா  ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என கூறினார்.

author avatar
Parthipan K