முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள்- இபிஎஸ் மரியாதை!

0
275
#image_title

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள்- இபிஎஸ் மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வெற்றி பெற்ற பிறகு இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அங்கு வெகு விமரிசையாக கொண்டாடும் வகையில் அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் அதிமுக தலைமை அலுவகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் தம்பிதுரை, ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்து அதிமுக கொடியை தலைமை அலுவலகத்தில் ஏற்றி வைத்தார்.

 

author avatar
Parthipan K