கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா !!

0
30
#image_title
கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான் கில் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 357 ரன்கள் சேர்த்து இலங்கைக்கு 358 ரன்கள் இலக்காகக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று(நவம்பர்2) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 33வது லீக் சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி நிதானமாக விளையாடினார். மேலும் தொடக்க வீரர் சுப்மான் கில் அவர்கள் விராட் கோஹ்லி அவர்களுடன் இணைந்து பொறுமையாக விளையாடினார்.
இருவரும் அரைசதம் கடந்த நிலையில் சுப்மான் கில் 92 ரன்கள் எடுத்தும், விராட் கோஹ்லி 88 ரன்கள் எடுத்தும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபக்கம் களமிறங்கி விளையாடத் தொடங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க மறுபக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது.
தொடர்ந்து விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 34 ரன்கள் சேர்க்க இந்தியா 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணியில் மதுஷன்கா சிறப்பாக பந்துவீசி 5 விக்கேட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து தற்பொழுது இலங்கை அணி 358 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடி வருகின்றது.