கோடை காலத்தில் நீர்க்கடுப்பு பாதிப்பு பலருக்கும் ஏற்படுகிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள புளி மற்றும் கருப்பட்டியை பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
2)கருப்பட்டி – இரண்டு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
சிறிய கிண்ணத்தில் நெல்லிக்காய் அளவு புளியை போட்டு ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவிட வேண்டும்.
பிறகு புளியை கரைத்து தண்ணீரை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து புளி கரைசலை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
புளி கரைசல் கொதிக்கும் தருவாயில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு கருப்பட்டி சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து அடுப்பை அணைத்துவிட்டு இந்த பானத்தை வடிகட்டி பருக வேண்டும்.இந்த புளி பானம் பருகி வந்தால் சிறுநீர் கடுப்பு பிரச்சனை சரியாகும்.
அதேபோல் தினமும் உடலுக்கு தேவைப்படும் தண்ணீரை பருகி வந்தால் நீர்க்கடுப்பு பிரச்சனையை சந்திக்காமல் இருக்கலாம்.வாழைப்பழம்,பேரிக்காய் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.
நீர் கடுப்பை குணமாக்கும் மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)கற்கண்டு – சிறிதளவு
பயன்படுத்தும் முறை:-
வாணலி ஒன்றில் சீரகத்தை போட்டு குறைந்த தீயில் வறுக்க வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிறிதளவு கற்கண்டு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அரைத்த சீரகத் தூள் மற்றும் கற்கண்டு பொடி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் நீர் கடுப்பு பிரச்சனை சரியாகும்.