இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பு இவர்தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து!

0
113

இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பு இவர்தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து!

இந்தியா அணியில் பேட்டிங் சிறந்த வீரர் பற்றி கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டி 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 9- ஆம் தேதி நாக்பூரில் நடக்க இருக்கிறது இந்திய அணிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றினால் தான் இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 

இந்தியாவின் ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு ஏதுவாக இருக்கும் நிலையில் ஆடும் லெவன் அணியை தேர்ந்தெடுப்பதில் கேப்டன் ரோகித் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.  பேட்டிங்கை பொருத்தவரை ரோகித், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேய்ஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷன், கே.எஸ்.பரத் என பேட்ஸ்மேன்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. 

இந்நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை விட இந்திய அணியின் பேட்டிங்கின் முதுகெலும்பு ஸ்ரேயாஸ் அய்யர் தான் என இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது,

கடந்த சில வருடங்களில் ரிஷப் பண்ட் உடன் அதிக போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தான். அப்படி இருந்தும் அவருக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என நான் கருதுகிறேன். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் முதுகெலும்பாக இருந்து வருவது ஸ்ரேயாஸ் அய்யர் தான். 

ரிஷப் இல்லாத இந்த சமயத்தில் அவர்தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். என நான் நினைக்கிறேன். அவருக்கு தற்போது முதுகுப் பகுதியில் அடிபட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். எனவே பொறுத்திருந்து பார்க்கலாம் என்பது போல் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.