ஐபிஎல் போட்டியில் இவர் விளையாட வேண்டும் – முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா 

0
139

ஐபிஎல் போட்டியில் இவர் விளையாட வேண்டும் – முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் விளையாட வேண்டும் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொடரில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலையில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்தியா அணியின் முக்கிய வேகப்பந்து பேச்சாளரான ஜஸ்பீரித்  பும்ரா காயம் காரணமாக இந்தியாவின் முக்கியமான தொடர்களில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது ஓய்வில் இருந்து வரும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் அடிக்கடி காயம் அடைவதால் உடற்தகுதியை சீராக வைத்துக் கொள்ளுமாறு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் ஒரு நாள் உலகக்கோப்பை போட்டி நடைபெற இருப்பதால் முக்கிய வீரர்கள் ஐபிஎல் – இல் ஆடுவதை தவிர்க்கவும் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல் இல் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும். இதன் மூலம் அவரது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

இந்திய அணி அடுத்த ஆஸ்திரேலியா உடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது இதில் முதல் போட்டி வருகின்ற 9-ஆம் தேதி நாக்பூரில் நடைபெற இருக்கிறது.அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகள் டெல்லி, தர்மசாலா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கின்றன. டெஸ்ட் தொடரை தொடர்ந்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.