பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! இன்று முதல் இந்த இடங்களில் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

0
104

பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! இன்று முதல் இந்த இடங்களில் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்! 

பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த வருடம் பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை அடுத்து பல மாவட்டங்களில் இருந்து சென்னையில் பணிபுரியும் மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதையொட்டி இந்த வருடமும் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இன்று முதல் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது.

இன்று ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கும் அதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய இரண்டு தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2500 பேருந்துகளுடன் கூடுதல் சிறப்பு பேருந்துகளாக 3 நாட்களுக்கு 4449 பேருந்துகளும்,  மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 6183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.  இன்று முதல் 14 ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10632 பேருந்துகள் என மொத்தம் 16932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று வழக்கமாக சென்னையில் இருந்து புறப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 651  பேருந்துகளும், பிற நகரங்களில் இருந்து 1508 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதற்காக சென்னையில் இருந்து ஆறு இடங்களில் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவை

1. கோயம்பேடு

2. மாதவரம்

3. கே.கே. நகர்

4. தாம்பரம் மெப்ஸ் அண்ணா பஸ் நிலையம்.

5. தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிலையம்

6. பூந்தமல்லி

மேலும் இந்த ஆறு இடங்களுக்குச் செல்ல வசதியாக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் 340 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தாம்பரம்- பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர் -செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையின் மூலம் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் அழைத்து வேண்டிய தகவல் அறிதல் மற்றும் புகார் தெரிவிக்கலாம். ஆம்னிபேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க 1800 425 6151, 044- 2474 9002, 044-2628 0445, 044-2628 1611 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவ 20 இடங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் முழுவதும் நிரம்பினால் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் போக்குவரத்து துறை தயாரான நிலையில் உள்ளது.