சினிமா வாழ்கையில் இதை எல்லாம் தாண்டிதான் பயணம் மேற்கொண்டேன்! மனம் திறந்த பிரபல நடிகை!

0
75
In my cinematic life, I traveled beyond all this! Famous actress with an open mind!
In my cinematic life, I traveled beyond all this! Famous actress with an open mind!

சினிமா வாழ்கையில் இதை எல்லாம் தாண்டிதான் பயணம் மேற்கொண்டேன்! மனம் திறந்த பிரபல நடிகை!

தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யாராஜேஷ். இவர் தன் வாழ்கையில்  சினிமாவில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்து உள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார். எனக்கு சினிமா பின்னணி இல்லை. மேலும் மிக சாதாரணமான குடும்பம் என்னுடையது. நடிகையாக எனது பயணம் மிகவும் சுலபம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அந்த பயணம் அவ்வளவு சுலபமாக இல்லை.

மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைக்கு உயர்ந்து உள்ளேன். எனது குடும்பம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தது. என்னுடைய எட்டு வயதில் தந்தையை இழந்தேன். அதன் காரணமாக எனது அம்மாதான் எங்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். எனக்கு இரண்டு அண்ணன்கள் பின் நான் ஒருத்தி, ஆனால் தற்போது இரண்டு பேருமே உயிருடன் இல்லை. அம்மாவுக்கு இந்தி, ஆங்கிலம் எல்லாம் தெரியாது.

ஆனாலும் மும்பைக்கு தனியாகவே சென்று புடவை வாங்கி வந்து, கொஞ்சம் அதிக விலைக்கு வைத்து சென்னையில் விற்பனை செய்வார். எனக்கு பெரிய கனவு என்று எதுவுமில்லை. ஆனால் சினிமாவில் நடிகையாக முயற்சி செய்தபோது எத்தனை தடைகள் வருமோ அத்தனையும் வந்தது. எல்லாவற்றையும் எதிர்கொண்டேன். பாலியல் ரீதியாகவும், எனது உருவம், தோற்றம், முகம், சருமநிறம் போன்றவற்றை வைத்தும், கொடூரமாகவும் கூட கேலி செய்தார்கள்.

எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரபல தொலைக்காட்சியில் அறிமுகம்  ஆனேன். அடுத்து எனது முதல் படம் சரியாக ஓடவில்லை. அதன்பிறகு கொஞ்சம், கொஞ்சமாக நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. இப்போதும் எனது சினிமா வாழ்க்கை போராட்டமாக தான் உள்ளது என வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.