இதற்கான அவசியம் தற்போது என்ன வந்தது? கூட்டுறவு சங்க கலைப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சரமாரி கேள்வி!

0
53

கடந்த 4ஆம் தேதி முதல் தமிழக சட்டசபை நடைபெற்று வருகிறது இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் நாளே சட்டசபையில் இருந்து வெளியேறியது எதிர்க்கட்சியான அதிமுக. இவ்வாறான சூழ்நிலையில், நேற்றைய தினம் தமிழக சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. அதனை அடுத்து அவைக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்த அவர் தெரிவித்திருப்பதாவது, 5 ஆண்டுகள் ஆயுள் காலம் இருக்கின்ற கூட்டுறவு சங்கங்களின் ஆயுதக்காலத்தை மூன்றாண்டுகளாக குறைப்பதற்கு சட்ட முன்வடிவை கொண்டுவருவதை நாங்கள் எதிர்க்கிறோம் இது ஒரு ஜனநாயக படுகொலை என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு கூட்டுறவு சங்கத்தில் தவறு ஏதாவது நடந்திருந்தால் அங்கு மட்டும் முறையான விசாரணை செய்து தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகியை நீக்கி அந்த கூட்டுறவு சங்கத்தை மட்டுமே கலைக்க முடியும் அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் கலைக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறா,ர் சென்னையில் 11 வார்டுகளுக்கு மட்டும் தான் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஸ்மார்ட்சிட்டி பணிகளை டுவிட்கோ நிறுவனத்தின் தலைவரான ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஐந்துக்கும் அதிகமான ஐஏஎஸ் அதிகாரிகள் சார்ந்த குழு தேர்வு செய்து வருகிறது. இதற்கு பிறகு நிதித்துறை செயலாளர் தலைமையிலான ஆகிய அதிகாரிகள் குழு அந்த அணி அவசியமா? என்று முடிவு செய்கிறது. ஆகவே இதில் எந்தவிதமான முறைகேட்டுக்கு வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறார்.

விவசாயிகளின் திருநெல்வேலி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் முறையாக கொள்முதல் செய்யவில்லை திறந்தவெளியில் அடிக்கி வைத்திருந்ததால் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வைத்துவிட்டனர், ஆகவே அந்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அம்மா உணவகத்தை மூடினால் என்ன? என்று சட்டசபையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி இருப்பது வேதனை தருகிறது. அந்த திட்டம் தொடர வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறோம். இப்படி வேண்டுமென்றே திட்டமிட்டு அம்மா பெயரில் இருக்கின்ற திட்டங்கள் அனைத்தையும் முடக்க முயற்சி செய்கிறார்கள். பொங்கல் பரிசில் 15 முதல் 18 பொருட்கள் வரை தான் கிடைக்கின்றது. கொடுக்கின்ற பொருட்களும் தரமாக இல்லை என்று தெரிவித்து அது தொடர்பான வீடியோ ஒன்றையும் பத்திரிக்கையாளர்களும் காட்டினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பை வாங்குவதாக தெரிவித்துவிட்டு ஒவ்வொரு விவசாயி இடமும் இருந்தும் 14 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை தான் கரும்பு வாங்கியிருக்கிறார்கள். ஆனால் 33 ரூபாய் என தெரிவித்திருக்கிறார்கள். மீதமிருக்கும் பணம் எல்லாம் அவர்களின் கட்சியை சேர்ந்தவர்களுக்கு எங்கே செல்ல வேண்டுமோ அங்கே சென்றுவிட்டது. பொங்கல் பரிசு அரிசியில் பூச்சி இருக்கிறது வெள்ளம் உருகி இளகி விடுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

பொங்கல் பரிசு தேர்தலுக்காக தான் நாங்கள் வழங்கினோம் என்று திமுகவை சார்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பொங்கல் பரிசு கொடுத்து ஆரம்பித்து வைத்தார், நோய்த்தொற்று காலத்தில் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்திற்காக 2020ஆம் ஆண்டில் 1000 ரூபாய் தொகுப்பு வழங்கினோம். அதுவே சென்ற வருடத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கினோம் என தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசு விதித்த ஊரடங்கு டாஸ்மாக் நிறுவனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தான் வேலை என்று திமுக தெரிவித்து வருகிறது, ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வடமாநில உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். கமிஷன், கரப்ஷன், கலெக்சன், என்பதற்காகத்தான் அருகில் இருக்கக்கூடிய மாநிலத்தில் கொள்முதல் செய்திருக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்.

பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று மஞ்சப்பை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார் ஆனால் பொங்கல் பரிசு பொருட்கள் பிளாஸ்டிக்கில் வந்திருக்கின்றன. டாஸ்மாக் டெண்டரை பொறுத்தவரையில் அதனை எடுப்பதற்காக கரூர் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் வந்திருக்கிறார்கள் இதன் காரணமாகத்தான் பார் வைத்திருப்பவர்கள் எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.