தினமும் 5 மிளகு சாப்பிட்டால் போதுமா? அப்படி என்ன இருக்கு??

0
159

தினமும் 5 மிளகு சாப்பிட்டால் போதுமா? அப்படி என்ன இருக்கு??

வெதுவெதுப்பான சுடு நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.இதனால் எந்த பாதிப்பும் தொண்டையில் ஏற்படாது.மேலும் தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தையும் குறைக்கும். தொண்டை உறுத்தலை நீக்கும்.மேலும் தொடர்ந்து இருக்கும் சளியையும் குறைக்கும்.

இதைதொடர்ந்து நெஞ்சுச்சளி ,ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் அளவிற்கு மிளகு பங்காற்றி வருகிறது. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும்.

நான்கு பூண்டு பல்லுடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து, சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கை வழியில் நீக்கும்

கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.

சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும்.

author avatar
Parthipan K