பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு அட்டூழியம்! வளைத்து பிடித்த காவல்துறை

0
75

பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு அட்டூழியம்! வளைத்து பிடித்த காவல்துறை

ஏறக்குறைய ஒரு வருடமாக பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு வந்த நபர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மங்களூர் பகுதியில் உள்ள கோவில்களில் பயன்படுத்திய ஆணுறைகள் போடப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்தது.இந்நிலையில் இதற்கு காரணமான நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போடப்படுவது குறித்து மங்களூரில் உள்ள 5 க்கும் மேற்பட்ட கோவில்களிலிருந்து புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை தேடுவது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது.

இந்நிலையில் தான் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி மங்களூர் கோராஜானா பகுதியில் உள்ள கோவில் உண்டியலில் மீண்டும் இது போல பயன்படுத்திய ஆணுறை போடப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கோவில் மற்றும் அதன் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சிசிடிவி காட்சியில் மர்ம நபர் ஒருவர் கோவில் உண்டியலில் எதோ போட்டு செல்வது தெரியவந்துள்ளது.இதனையடுத்து தேடுதல் வேட்டையை நடத்திய காவல்துறையினர் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்துள்ளனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல கோவில்களில் இவ்வாறு போட்டு சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

காவல்துறையினர் விசாரணையில் அவர் பெயர் தேவதாஸ் தேசாய் என்றும் அவர் கடந்த 20 வருடங்களாக மங்களூரில் வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது.மேலும் அவர் கோவில் உண்டியல் மட்டுமல்லாமல் அருகிலுள்ள மசூதிகளிலும் பயன்படுத்திய ஆணுறைகளை வீசி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.